சனி, 28 நவம்பர், 2009

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்

பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். பணம் இல்லாதவன் பிணம் என்பார்கள். அத்தகைய பணத்தினால் கிடைக்கத்தக்க வசதிகளை அனுபவிக்க அடிப்படையில் ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைதல் அவசியம். பலர் வாழ்க்கைத் துணையைத் தேடுகையில் அதன் மூலமாகவே தனக்கு செல்வம் கிடைக்க வேண்டுமெனப் பெரும் முயற்சி செய்து அதற்கெனப் பல பொய்களை உரைத்து நாடகமாடுவதுண்டு.
அவ்வாறு பொய்யுரைத்துத் தேடிய துணை நிலைக்காது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே என்பது போல அப்பொய் வெளியாகி வாழ்வே நரகமாகிவிடும். அதன் பிறகு எத்துணை செல்வம் இருந்தாலும் பயனில்லை.

இவ்வுண்மையை மிகத் தெளிவாக விளக்கிய தமிழ்த் திரைப்படம் அவசரக் கல்யாணம். இப்படத்தில் செல்வச் சீமாட்டியான ரமாபிரபாவை மணந்து அதன்மூலம் செல்வந்ததனாகலாம் என்று மனக் கோட்டை கட்டும் நாகேஷ் அவளிடமும் அவள் தந்தையிடமும் தான் சூரக்கோட்டைஜமீன்தாரரின் மகன் என்று பொய்யுரைத்து அவசரமாக அவளை மணமுடிக்கிறார். பின் அவரது குட்டு வெளியாகி அவர்கள் இருவரும் படும் அவதியை விளக்குகிறது திரைப்படம். இப்படத்தில் பக்கோடா காதர் வி.கே. ராமசாமியின் மகனாக நடிக்கையில் தினமும் நடு இரவில், "நைனா பசி" என்று உரத்த குரலில் சப்தமிடுவது மிக வேடிக்கையாகப் படமாக்கப் பட்டுள்ளது.

நாகேஷ், ரமாபிரபா இருவரின் முதலிரவுப் பாடலாக ரமாபிரபா பாடுவதாக அமைந்த பி. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலிக்கும் இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கத்தக்கது.


வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்


படம்: அவசரக் கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: பி. சுசீலா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக