புதன், 9 டிசம்பர், 2009

வா அருகில் வா தா உயிரைத் தா

திரைப்படங்களுக்குத் திகில் கதை எழுதித் தாயாரிப்பதில் ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள் மிகவும் முயற்சியெடுத்து அதற்காக விசேஷமான அரிதாரம், காட்சியமைப்புகள் எனப் பல விதத்திலும் மிகவும் பாடுபட்டு, நிறைய செலவு செய்து தயாரிப்பார்கள். நம் இந்தியத் தயாரிப்பாளர்கள் மிகவும் புத்திசாலிகள். இத்தகைய அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, மிகவும் எளிய முறையில் இத்தகைய திகில் கதைகளை எழுதிப் படமாக்கி விடுவார்கள். இதற்கு இவர்கள் கடைபிடிக்கும் தொழில் நுட்பம் ஒரு பெண்ணுக்கு வெள்ளைச் சேலையைக் கட்டி விட்டு இரவு நேரத்தில் நிழலும் ஒளியும் கலந்த சூழ்நிலையில் நடமாட வைத்து, காட்சிக்கேற்றாற்போல் இசையமைத்து அசத்திவிடுவதே.


வா அருகில் வா தா உயிரைத் தா

திரைப்படம்: அதே கண்கள்
இயற்றியவர்: தெரிந்தால் தெரிவியுங்கள்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா

பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒரு
நிழல் போலே அது நடந்து வரும்
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கண்ணும் கனிந்துருகும்

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா

சிறைக் கதவை ஏன் திறக்கவில்லை? - நீ
விடுதலையே கொடுக்கவில்லை
நானிருப்பேன் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு குரல் கொடுத்தே நிதம் அணைத்திருப்பேன்

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா

1 கருத்து: