வியாழன், 14 ஜூலை, 2011

கத்தாழங் காட்டு வழி

உலகிலேயே மிகவும் அதிகப்படியான மக்கள் ஏழ்மை நிலையில் வாழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும் இங்குள்ள சமுதாய அமைப்பினாலும் குடும்ப வாழ்க்கை முறையின் வலிமையாலும் அனைவரும் ஒருவருகொருவர் தம்மாலியன்ற உதவிகளைச் செய்வதை ஒரு முக்கியக் கடமையாகக் கருதி வாழ்வதால் நம் நாடு பேரழிவிலிருந்து காக்கப்பட்டு வருகிறது.

நமது பாரம்பரியமான குடும்ப வாழ்க்கை முறை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத் தருவதால் எதிர்பாராத காரணங்களால் ஒரு குடும்பத் தலைவன், அதாவது தந்தை இறைவனடி சேர்கையில் அக்குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் தியாக மனப்பான்மையுடன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தனக்கு இளையவர்களையும் தாயையும் காப்பது ஒரு உயர்ந்த நெறியாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் குடும்பத்தின் மூத்த பிள்ளை அண்ணனாகவும் இளையவர் தங்கையாகவும் அமைகையில் அந்த அண்ணன் தன் தங்கைக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர சித்தமாக இருப்பதுடன் அவளது நல்வாழ்வுக்கு ஆவன செய்வதும் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நமது நாட்டின் உயர்ந்த இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி.

எத்துணை நன்மை இருப்பினும் நம் சமுதாயத்தில் நகரங்களாயினும் கிராமமாயினும் அங்கும் பிறருக்குத் தீமை செய்து அதன் மூலம் தன் சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் புல்லுருவிகளும் இருப்பதுண்டு. அத்துடன் நம் சமுதாயத்தில் சூதாட்டம் ஒரு பெரிய சாபக்கேடாக அன்று முதல் இன்றுவரை நிலவியிருக்கிறது. சில கிராமப்புறங்களில் கோழிச்சண்டை இன்றும் பெரும் சூதாட்டமாக விளங்குகிறது.

நமது நாட்டின் கிராமங்களில் மக்கள் வாழ்க்கை மிகவும் இனிமையானது. இங்கே ஆரவாரம் குறைவு அமைதி நிறைவு. இயற்கைச் சூழலில் மனித உறவுகள் மேம்பட்டு விளங்கும் வாழ்க்கை கிராம வாழ்க்கை. அத்தகைய ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தில் தாய் தந்தையரை இழந்த நிலையில் அண்ணன் ஒருவன் தன் தங்கையை சீராட்டிப் பாராட்டி வளர்த்து அவளை மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களுள் ஒருவருக்கு மணமுடித்து வைத்து, புகுந்த இடத்தில் தன் தங்கை சீரோடும் சிறப்போடும் வாழத் தன் உதவியாகப் பல பொருள்களைச் சேர்த்து வைத்து சீதனமாக அவற்றைத் தன் தங்கையும் அவள் கணவனும் திருமணம் முடிந்த பின்னர் அவர்களது கிராமத்துக்குச் செல்கையில் சில மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்புகிறான்.

அவ்வாறு ஊர் மெச்சும் வகையில் திருமணம் செய்து கொடுத்த தங்கை நல்வாழ்வு வாழ்ந்தாளா? அல்லது அவள் சூதாட்டமே வாழ்க்கையாகக் கொண்ட சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியானாளா? என்னும் கேள்விக்கான பதிலை கிராமத்துக்கே உரிய பாணியில் எடுத்துரைக்கும் கதையே கிழக்குச் சீமையிலே.

கத்தாழங் காட்டு வழி

திரைப்படம்: கிழக்குச் சீமையிலே
இயற்றியவர்: வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்: ஜெயசந்திரன், எஸ். ஜானகி

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக