வியாழன், 14 ஜூலை, 2011

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்

அன்பு நண்பர்களே,

பொதுவாக அரசியல் குறித்த கருத்துக்களை இலைமறைவு காய்மறைவாகவே தெரிவித்து வருபவன் நான். மிகவும் தீவிரமாக அரசியல் தொடர்பாக விவாதிப்பது என் வழக்கமல்ல. தினசரி நாட்டு நடப்புகளைக் கண்காணித்து வரும் பொழுது என்னையும் மீறி என் உடலும் மனமும் நடுங்குகிறது. நாடு நல்லவர் கையில் இல்லை என்பது தெள்ளத் தெளிய உலகறிய நிரூபணமாகிவிட்டது. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை புரியும் எண்ணம் சிறிதுமின்றி அவர்களை எப்படியாகிலும் ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடிப்பதிலே பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றனர் தற்பொழுது ஆட்சி புரிபவர்.

ஆங்கிலேயன் நம் நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் மக்களிடையே ஒற்றுமை நிலவினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என அறிந்து அதனைத் தடுக்க மக்களிடையே சாதிமத பேதத்தைத் தூண்டி விட்டு ஆங்காங்கே கலவரங்கள் உருவாக இடமளித்து இடையில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு ஏறத்தாழ 900 ஆண்டுகள் நம் நாட்டை அடிமைத்தளையில் வைத்திருந்தான் ஆங்கிலேயன். நம் முன்னோர் கோடானு கோடி பேர் நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க 1857ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரை பல விதங்களிலும் போரிட்டு தம் இன்னுயிரையும் ஈந்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை தற்போது ஆளும் அரசுகள் ஏற்கெனவே இழக்கச் செய்து விட்டதுடன் இதுவரை கொள்ளையிட்டதைக் காட்டிலும் பன்மடங்கு கொள்ளையிட்டு விவசாயம் செய்ய நிலங்கள் இல்லாதவாறு செய்து வனப்பகுதிகளையும் அழித்து வருகின்றனர். இதனால் பல ஊர்களில் யானைகளும் புலிகளும் காடுகள் குறைந்து உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து பெரும் கேட்டை விளைத்து வருகின்றன.

இத்தனை கேடுகள் விளைந்த பின்னரும், நாட்டைக் கொள்ளையடித்தவர்களது முகத்திரை முழுதும் கிழிந்த பின்னரும் அவர்கள் யார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காது வழக்குகளை பலவீனப்படுத்திக் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க ஏதுவான விதத்திலேயே மத்திய மாநில அரசுகள் செயல்புரிகின்றன.

தெய்வ கிருபையால் இத்தனை பெரும் கேடுகள் விளைகின்ற இக்காலத்திலும் நமக்கெல்லாம் வழிகாட்டும் விதமாக இது நாள் வரை பல ஆண்டுகள் சாதிச் சண்டைகளாலும் தீவிரவாதத்தாலும் சீர்குலைந்து கொண்டிருந்த மாநிலமான பீஹாரில் இன்று மக்கள் அனைவரும் சாதிமத உணர்வின்றி அனைவரும் ஓரினம் அது பீகாரி இனம் எனும் உயர்ந்த மனோநிலையைக் கைக்கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதியாக முன்னேற்றப் பாதையில் பயணம் செய்கின்றனர்.

ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்தது புகல் என்ன நீதி? என்று வெள்ளையனை வெளியேற்றப் பாடிய பாரதியின் பாடல் வரிகளை மனதில் கொள்வோம். நாம் அனைவரும் ஒரே சாதி அது தமிழ் சாதி ஓரே மதம், அது இந்திய மதம் எனும் மனப்பான்மையைக் கைக்கொண்டு அனைவரும் ஒருமுகமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீயவர்கள் அனைவரையும் விலக்கி உண்மையாக மக்களுக்காகப் பாடுபட்டு, சாதிமத பேதத்தை ஒழித்து, மக்களை இலவசங்களைக் கொடுத்துப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்கள் உழைத்து வாழத்தக்க சூழலை ஏற்படுதக் கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுப்போமானால் நாம் இந்த சன்மத்தில் அமைதியாக வாழ்வதுடன் நம் சந்ததியினரும் நல்வாழ்வு வாழ வழிவகுக்கலாம். நாம் இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. இருக்கும் சில காலத்தில் வருங்காலம் சிறப்பாக இருக்க நம்மாலான நற்பணிகளைச் செய்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்துவது ஒன்றே நாம் செய்யத்தக்கது.

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்
பக்கம் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு

கோடிக்கரங்களும் நீரை விட்டன
கொள்கை விதைகளும் வேரை விட்டன
நாளை தாய்க்குலம் நம்மை வாழ்த்திட பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவனாயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது என்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக் கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

வாக்குகள் கேட்டு வாங்கும் போது நாக்கில் நூறு பொய் வைப்பார்
மக்கள் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் காதில் பூ வைப்பார்
காலம் மாறும் காட்சிகள் மாறும் கேள்வி கேட்டால் தான்
கரைகள் போகும் துணி வெளுப்பாகும் துவைத்துப் போட்டால் தான்

எது நடந்தாலும் நமக்கெனவென்று ஒதுங்கிடலாமா தோழா தோழா
வறியவர் துன்பம் வலியவர் பார்த்து இருப்பது கூடாது
பிறர்க்கெனக் கொஞ்சம் இளகிடும் நெஞ்சம்
படைத்திட வேண்டும் தோழா தோழா
பொதுநலத் தொண்டு புரிந்தவர்க்குண்டு புகழ்மிகு வரலாறு

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

எல்லார்க்கும் எல்லாம் வாய்க்கும் நாளில் என்தன் எண்ணம் ஈடேறும்
இல்லாமல் போனால் மேலும் மேலும் என்தன் கண்கள் சூடேறும்
என்னைத் தொடர்ந்து வருகின்ற பேரை என்றும் விட மாட்டேன்
தோழர் தமக்குத் துன்பங்கள் வந்தால் சோற்றைக் கூட தொடமாட்டேன்

இடி மழை மின்னல் இடைவரும் போதும்
நடுங்கிட மாட்டேன் நான் தான் நான் தான்
முன்வைத்த காலைப் பின் வைக்கும் வேலை என்னிடம் கிடையாது
தடந்தோள் உண்டு தடக்கை உண்டு
தடைகளை செய்வேன் தூள்தான் தூள்தான்
லட்சிய தாகம் இருக்கின்ற பேர்க்கு இதயங்கள் உடையாது

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்
பக்கம் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு

கோடிக்கரங்களும் நீரை விட்டன
கொள்கை விதைகளும் வேரை விட்டன
நாளை தாய்க்குலம் நம்மை வாழ்த்திட பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவனாயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது என்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக் கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக