வெள்ளி, 22 ஜூலை, 2011

பொறுமை என்னும் நகையணிந்து

நமது பாரத நாட்டில் குடும்ப வாழ்வின் சிறப்பை மக்கள் அனைவரும் உணர்ந்து அதற்குரிய நெறிமுறைகளைக் கடைபிடித்து வாழ்வதாலேயே பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எழுந்தபோதும் அனைத்தையும் மீறி நாட்டில் என்றும் அமைதி நிலவி வருகின்றது. குடும்ப வாழ்வின் சிறப்பினை நமக்கெல்லாம் எடுத்துரைத்து அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்தி வரும் ஆன்றோர் பெருமக்களுள் தலையாயவர் ஔவைப் பிராட்டியாவார். ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், திருவள்ளுவர் முதலானோர் ஓரே காலத்தில் வாழ்ந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கேற்றாற்போலவே அவர்களுக்குள் இடையிடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களும் கவிதைப் போர்களும் விரிவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வரலாறுகள் எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்த ஆராய்ச்சியைத் தவிர்த்து இவற்றில் காணப்படும் கருத்துக்களூம் அவை வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படும் என ஆராய்ந்தோமெனில் மிகவும் பயனுண்டு என்பதில் ஐயமில்லை.

ஔவையார் கதையை மிகவும் விரிவாகவும் விஸ்தாரமாகவும் பெரும்பொருட் செலவில் 1953ஆம் வருடம் அந்நாளைய தமிழ்த்திரையுலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் ஜெமினி திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் தயாரித்து வெளீயிட்டார். இத்திரைப்படம் தற்பொழுதும் பல தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியே அவ்வப்பொழுது திரையிடப்படுகிறது. தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து பின்பற்ற வேண்டிய அரிய பல விஷயங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

ஔவையார் கதையில் வரும் ஒரு சம்பவமாவது: ஒரு சோலையில் ஒரு நாள் பெண்டாட்டிக்கு பயந்து நடக்கும் தன்மையுள்ள ஒரு ஆடவன் தனிமையில் அமர்ந்து தன் எதிரே இருந்த கல் ஒன்றைத் தன் மனைவியாக பாவித்து அதனுடன் அதிகார தோரணையில் உரையாடும் காட்சியை அவ்வழியே வந்த ஔவையார் கண்டார். அவனது இல்லத்துக்குச் சென்று அவன் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளதென அறியும் ஆவலில் அவர் அவ்வாடவனை நோக்கி இன்று உன் வீட்டில் எனக்கு உணவு அளிக்க வேண்டுமெனக் கூறி அவனுடன் அவனது இல்லத்துக்குச் சென்றார். ஔவையை வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் சற்றே அமருப்படிக் கூறி உள்ளே சென்ற அந்த ஆடவன் அங்கே தனது கூந்தலை வாரிப் பின்னிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகவும் குழைந்து பேசி அவளுக்குத் தன் கையாலேயே தலைவாரிப் பின்னி விட்டுப் பின் மெல்லத் தன்னை நம்பி தங்களது இல்லத்தில் உணவு அருந்த வந்திருந்த ஔவையாரைப் பற்றிக் கூற, பதிலுக்கு அவள் சீற, அவன் மீண்டும் மன்றாட அவள் அரைமனதுடன் சம்மதித்து ஔவையாருக்கு வேண்டா வெறுப்பாக உணவு பரிமாறினாள்.

அவளது அக்கரையின்மை கண்டு மனம் வருந்திய ஔவையார் அவள் பரிமாரிய உணவை அருந்த மனமின்றி எழுந்து நின்று அந்த ஆடவனைப் பார்த்து, "கணவனுக்கேற்ற சேவை மனப்பான்மையுடன் கணவனை தெய்வமாக எண்ணிப் போற்றி வாழும் மனைவி ஒருவனுக்குக் கிடைப்பாளேயாயின் எத்துணைத் துன்பங்கள் வரினும் அவளுடன் கூடி வாழலாம். ஆனால் அத்தகைய மனைவியானவள் கணவனை மதியாது அவன் சொல்லை மீறி அவனுக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடப்பளேயாயின் அக்கணவன் இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்வதே தகும் எனும் பொருளில்,

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

என்ற பாடலைக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ஔவையின் அறிவுரையை செவிமடுத்த அந்த ஆடவன் தன் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு காஷாயம் தரித்துத் துறவியாகி வீட்டை விட்டுச் சென்று விடுகிறான். இதனால் மனம் பதைபதைக்க அவனது மனைவி ஓடோடிச் சென்று ஔவையாரிக் கால்களில் விழுந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட ஔவையார் அவள் கணவனை சமாதானப் படுத்து இருவரையும் சேர்ந்து வைத்து அதன் பின்னர் பாடுவதாக அமைந்துள்ள பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

பொறுமை என்னும் நகையணிந்து

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
வருந்தி மிக ஆடினாள் ஆடினால் ஆடிப்
பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும் நகையணிந்து

அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து நாதன்
அன்புடன் இல்லற இன்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
நாடி மணந்த நாதனோடு ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நல்லறமாகிய இல்லற வாழ்வினில்
எல்லையில்லாத பேரின்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

3 கருத்துகள்:

  1. என் மனைவிக்கு கணவனாக அமையப்பெற்றது இறைவன் கொடுத்த பெரும் வரம்...மேலும், அவ்வையார் பட பாடல் வரிகள் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு