வியாழன், 21 ஜூலை, 2011

யாரை எங்கே வைப்பது என்று

ஆதி கால்ம் தொட்டே உலகத்தவர் அனைவரும் கண்டு வியக்கும்படியாக எல்லா வளங்களும் நிறைந்து விளங்கிவரும் நாடு நம் பாரத நாடு. உலக நாடுகளுக்கிடையே போக்குவரத்து முதலில் கடல் வழியே துவங்கி வளர்ந்த காலத்தில் பலர் இந்தியாவுக்குக் கடல் வழியே பயணம் செய்து இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியவர்களுள் ஒருவரான அமெரிக்கோ வெஸ்புகி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவை இந்தியா என அவர் எண்ணினார். அக்காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்கள் இதன் காரணமாகவே இன்றும் அமெரிக்க இந்தியர்கள் அல்லது செவ்விந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அவ்வாறாக உலகிலுள்ளோரெல்லாம் கண்டு வியக்கும்படியான இயற்கை வளங்களும், மனித வளமும் கொண்ட நமது நாடு இன்று நியாயமாக உலக நாடுகள் அனைத்திலும் மேலான நிலையில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் இன்னமும் நம் நாடு சாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் உலக வங்கியிலிருந்து கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணம். நமது நாட்டில் நீதி என்பது உண்மையாய் உழைப்பவருக்கு எட்டாக் கனியாக விளங்குவதேயாகும். தீவிரவாதிகளுடன் அரசியல் கட்சிகள் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து நாட்டின் சில பகுதிகளில் தேர்தலை சந்திக்க முயல்கையில் வேறு சில இடங்களில் ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்குடன் செயல்புரிபவர்கள் தீவிரவாதிகளென முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப் படும் கொடுமை நிறைவேறி வருகிறது.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பலர் சுதந்திரமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகையில் உண்மையாய் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் நம் நாட்டில் வெகுவிரைவில் இன்று எகிப்து நாட்டில் நடைபெறுவது போன்ற புரட்சி வெடிக்கும். இதன் அறிகுறியாக காந்தி மஹாத்மா மறைந்த நாளான, தியாகிகள் தினமாகக் கொண்டாடப் பட்ட நேற்றைய தினம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேர்மைக்குப் பெயர் பெற்ற முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி திருமதி கிரண் பேடி தலைமையில் டெல்லியிலும் அத்தகைய பிற தலைவர்களின் தலைமையில் நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஊழல் ஒழியப் பெருங்குரல் கொடுத்து மாபெரும் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

பெரும்பொருள் செலவழித்து ஊர்கள் தோறும் அலங்கார மேடை போட்டு நல்லவர்கள் போல் நடித்துப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி அரசு பதவிகளில் நீடிக்கலாம் என மனப்பால் குடிக்கும் பேதைகளின் உண்மை சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.

யாரை எங்கே வைப்பது என்று

திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக