திங்கள், 14 நவம்பர், 2011

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

மனிதன் என்னதான் விவேகத்துடன் நடந்துகொண்டாலும் சில சமயங்களில் அவனையும் மீறிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அவன் மனம் உடைந்து போவதுண்டு. என்ன செய்வது என்று தொ¢யாமல் தவிப்பதுண்டு. தர்மபுத்திரர் எத்தனையோ விவேகத்துடனும் வைராக்யத்துடனும் இருந்தார். பரமாத்மாவும் அவருடன் இருந்தார். இருந்தும் அவர் எத்தனையோ சமயங்களில் மனம் தளர்ந்ததுண்டு. அச்சமயங்களில் பகவானிடம் அதிக பக்தி செய்ய வேண்டும். நமது உபாசனா மூர்த்தியை பூஜித்து அதன் மூலம் நாம் அதிக சக்தி பெற வேண்டும், கார் பேட்டா¢யை சார்ஜ் செய்வது போல் நம்மை சார்ஜ் செய்துகொண்டு அதன் மூலம் பலம் பெற்றுக் கஷ்டங்களை சமாளிக்கவோ அல்லது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவோ முற்பட வேண்டும்.

நவவித பக்தி

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு
செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே
அற்பணித்தல்

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

இவற்றுள் தாஸ்யம் என்பது மிகவும் விசேஷாமானது. இவ்வழியே தேவதாசியர் தம்மை இறைவனுக்கு தாசியாய் அர்ப்பணம் செய்து தம் வாழ்நாளில் இல்லற சுகங்களைத் துறந்து வாழ்ந்ததாகப் புராணங்களில் காண்கிறோம். அகில உலகையும் ரக்ஷித்துக் காப்பவளான லோகமாதாவான பராஸக்தியே ஹிமவான் மகளாகப் பிறந்து தவம் செய்து ஈசனையே மணாளனாக அடைந்ததும், அவளே பின்னர் மதுரை மீனாக்ஷியாக அவதாரம் செய்து அதே வழியில் தவம் செய்து ஈசனை அடைந்ததாகவும் சிவபுராணம் சொல்கிறது.

12 ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளும் இதே விதமான பக்தி மார்க்கத்தை மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில் கொண்ட நிலையில் காட்சி தரும் அரங்கநாதனை மணந்ததாக வரலாறு கூறுகிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்று திருஞான சம்பத்தப் பெருமான் இத்தகைய பக்தியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

இதே மார்க்கத்தில் இங்கே ஒரு இளமங்கை குமரக் கடவுள் மேல் காதல் கொண்டு அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கும் மனநிலையில் பாடி ஆடுவதாக ஒரு காட்சி பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 1960ஆம் ஆண்டு ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்த இப்படத்தில் இப்பாடலுக்கு நாட்டியம் ஆடுபவர் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுக்கு இணையான நடனத் திறமை கொண்ட புகழ்பெற்ற கமலா ஆவார்.

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

திரைப்படம்: பார்த்திபன் கனவு
இயற்றியவர்: விந்தன்
இசை: வேத்பால் வர்மா
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1960

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே மயிலே
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே மயிலே
ஒத்தி எடுத்திடவே உதடவரைத் தேடுதடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே மயிலே
அள்ளி அணைத்திடவே அவர் வரக் காணேனடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக