ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ராமன் எத்தனை ராமனடி

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

என்று மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றி எழுதிய கவிஞர் கண்ணதாசன் அத்தகைய உயர்ந்த மானுடப் பிறவியை அடைந்த மனிதன் மிகவும் தாழ்ந்து போய் இருக்கும் சமுதாய அவலத்தையும் சாடுகிறார்.

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/azhagu-nila/manidhan-ellam.php

மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்று எத்தனையோ ஞானியரும் மேதையரும் என்னென்னவோ எழுதி வைத்த் போதிலும் அவை யாவும் நமது மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. காரணம் அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அறிவுரைகளும் கூர்ந்து கவனிப்பவர்க்கல்லாது மற்றவர்க்கு எளிதில் மனதில் பதிவதில்லை. இதே தத்துவங்களையும் அறிவுரைகளையும் ஒருவர் தம் வாழ்நாளில் கடைபிடித்தாரெனில் அவரது வாழ்வே பிறருக்கு வழிகாட்டுகிறது. தனியே விளக்கங்கள் ஏதும் கூறாமல் அவரைப் போல் வாழ வேண்டும் என்று ஒரே வாக்கியத்தில் யாருக்கும் வழி காட்டலாம். தம் வாழ்க்கையே பிறருக்கு வேதமாக விளங்கும் வண்ணம் உலகில் வாழும் அத்தகைய உன்னத புருஷர்களுடன் பழகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லையாதலால். இந்த உன்னத புருஷர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாகவும் காவியங்களாகவும் எழுதி வைக்கப் படுகையில் அது சாமான்யருக்கும் எளிதில் புரியும் வண்ணமாகவும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அமைவதால் அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் விளங்குகின்றன.

மனிதர்களுள் உத்தமன் யாரெனில் நம் பாரத தேசத்தில் அயோத்தியை ஆண்ட மன்னன் தசரத குமாரன் ஸ்ரீராமனே என்று கற்றோர் கூறுவர். காரணம் ஸ்ரீராம சரிதத்தில் சிறு குழந்தைப் பருவமுதல் ஸ்ரீ ராமன் எவ்வாறு வாழ்ந்தான், தன் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும் தாங்கி தரும நிறியில் நிலைத்து நின்று எவ்வாறு தன்னை நம்பியவர்களைக் காத்தான் எனபன போன்ற அனைத்தும் இராமாயண காவியத்தில் மிக அழகாகவும் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இனிமையுடனும் கூறப்படுகின்றன.

தாயை தெய்வமாக மதித்து வணங்கி அவருக்கு ஆயுள் உள்ளளவும் சேவை செய்வதும், தந்தையின் சொற்படி நடந்து அவருக்குப் பெருமை தேடித்தருவதும், சகோதரர்களுக்காகத் தன் சுகங்களை முழுமனதுடன் விட்டுக் கொடுப்பதும், தனக்கு உதவி செய்தவருக்குப் பிரதி உபகாரம் செய்து நன்றி மறவாதிருப்பதும், தன்னையே நம்பி தன் பெற்றோரையும் உற்றார் உறவினர் யாவரையும் பிரிந்து வந்து மணந்த மனைவியைப் போற்றி அவளுக்கு உண்மையுள்ளவனாய் வாழ்நாள் முழுதும் விளங்குவதும், தருமநெறியில் நில்லாது பிறருக்கு அநீதி இழைத்து அட்டூழியங்கள் புரியும் தீயவரை அழித்து நல்லவர்களைக் காப்பதும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் முக்கியமான கடைமைகளாகும். அத்தகைய கடமைகளை முறையாக நிறைவேற்றிய உன்னத புருஷனாம் ஸ்ரீராமனின் கதையைக் கேட்டாலும், அவன் நாமத்தை உச்சரித்தாலும் அந்த ஸ்ரீராமனைப் போலவே வாழ்வில் உயர்ந்து தெய்வமாகப் போற்றப்படும் நிலையை அடையலாம் எனும் உண்மையினை ஸ்ரீராமனைப் போலவே வாழ்ந்து காட்டிய அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு அறிகிறோம்.

ராமன் எத்தனை ராமனடி

திரைப்படம்: லட்சுமி கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்

ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

ராமன் எத்தனை ராமனடி

1 கருத்து:

  1. பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
    அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

    கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

    அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
    அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்


    - கவிஞர் கோ கண்ணதாச



    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409



    http://sagakalvi.blogspot.com/


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

    பதிலளிநீக்கு