ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

மானிடப் பிறவியின் மகத்துவத்தையும் மானிடராய்ப் பிறந்தோர் நல்வாழ்வு வாழக் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகள் முதலானவற்றையும் அனைவரும் உணரும் பொருட்டு ஞானியர் பிறருக்கு உபதேசம் செய்யக் கையாண்ட சிறந்ததோர் வழி கதைகள் வாயிலாகவும் பாடல்கள் வாயிலாகவும் அவற்றை எடுத்துக் கூறுவதே. இக்கதைகளில் கற்பனையாகப் புனையப் பட்டவையும் தருமநெறி தவறாது உண்மையில் நம்மிடையே வாழ்ந்த உத்தமர்களைப் பற்றியவையும் உள. இத்தகைய கதைகளைப் பிரசங்கங்கள் வாயிலாக உலகத்தாருக்கு எடுத்துக் கூறுவோர் இடையிடையே சங்கீதத்துடன் கூடிய பாடல் வரிகளை அமைத்து, சொல்லும் கதைக்கேற்ப அவ்வப்பொழுது அக்கதைக்குத் தக்க கேள்விகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தவென்றே தன்னுடன் மேடையில் சிலரைத் தயார் செய்து வைத்துக் கொள்வது மரபு. இதற்குக் கதாகாலக்ஷேபம் என்று பெயர்.

அத்தகைய கதாகாலக்ஷேபம் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி க்ணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி இணைந்து நடித்த தெய்வப் பிறவி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. கே.ஏ. தங்கவேலு அவர்கள் செய்வதாக அமைந்த இந்தக் கதா காலக்ஷேபத்தில் தங்கவேலு அவர்களின் குரலுக்கேற்றவாறே சிறிதும் மாறுபாடின்றி அமைந்த சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல் வரிகளைப் பாட, அதே இசை லயத்தைப் பின்பற்றி கதையை தங்கவேலு அவர்கள் விவரிக்க, கதை பாடல் அனைத்தையும் தங்கவேலுவே சொல்லிப் பாடுகிறாறோ எனக் காண்போரும் கேட்போரும் திகைக்குமளவுக்கு மிகவும் இயல்பாக அமைந்தது அக்கதா காலக்ஷேபம். அதை இங்கே காண்க:

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

திரைப்படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை ராமையாதாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
க்தை கூறுபவர்: கே. ஏ. தங்கவேலு

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே,

எல்லோருடைய மணிபர்சும் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!
மனிதனை மனிதன் மதித்திட வேண்டும் மாறா அன்புடனே எந்நாளும்
சீராய் வாழ்ந்திடனும் எல்லோரும் சேர்ந்தே வாழ்ந்திடனும்

மெய்யன்பர்களே, பாற்கடலிலே பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன், ஸ்ரீகிருஷ்ணனாக அவதாரம் பண்ணினார். மனிதனை மனிதன் தித்து நடக்க வேண்டுமென்ற நீதியை எடுத்துக் காட்டினார். எப்படியோ, துவாபர யுகத்திலே, குசேலர் என்ற ஒரு பக்திமான் இருந்தார். அவருக்குக் குழந்தைகள், கெடையாது. பர்த் கண்ட்ரோல் இல்லாத அந்தக் காலத்திலே, மனுஷன் வதவதன்னு 27 குழந்தைகளைப் பெத்ததெடுத்துட்டார், அதாகப்பட்டது ரெண்டே கால் டஜன். நெனச்சா தூக்கம் வருமோ?

ஒரு தலைக்கு நாலு இட்டிலின்னா கணக்கு கூட்டினாலும் இருபத்தி ஏழு குழந்தைகளுக்கு என்னாச்சுன்னு நீங்களே கணக்கு கூட்டிப் பாருங்கோ. சாம்பாரைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.

குழந்தைகள் பேரு?

அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை ஆறு
புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் பதிமூணு
சித்திரை ஸ்வாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் இருபது
உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

ஏன் மாமா கூப்டீங்களா?

நீ என்ன, குசேலனுக்குக் கடைசிக் குழந்தையா? அடச் சே போ! பேரைச் சொல்ற எனக்கே இப்படி மே மூச்சு கீழ் மூச்சு வாங்குதுன்னா, அந்தக் கொழந்தைகளை வச்சுகிட்டு அந்த மனுஷன் என்ன பாடு பட்டிருப்பார்! ஆனாப் படல்லே. காரணம், குழந்தைகளுக்குள்ளார அவ்வளவு ஒத்துமை. ஒத்துமைக்குக் காரணம்? அந்தக் காலத்துலே அரசியல் கட்சிகள் கிடையாது. அது மட்டுமல்ல? அவருக்கு வாய்த்த மனைவி சுசீலை, உத்தமி பத்தினி. அதிகமா சொல்லுவானேன், நம்ம மாதவன் சம்சாரம் தங்கம்மா இல்லே, இவங்களைப் பாத்தா அவங்களைப் பாக்க வேண்டியதில்லே. ஆனா கொஞ்சூண்டு கெழடு தட்டியிருக்கும் அந்தம்மா முகத்திலே. அதற்குக் காரணம் அவங்க மேல தப்பில்லே, நம்பர் இருபத்தேழு.

இந்தக் குழந்தைகளெல்லாம் அந்த அம்மாளை சுத்திக்கொண்டு சதாசர்வ காலமும் பசி, பசி, இப்படி அருந்துவதற்குப் பாலில்லாதபடி

அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே!

இப்படியென்று அகோரமாகக் கோரஸ் பாட ஆரம்பிச்சுட்டா. அது மட்டுமல்ல, அண்டை வீடு அடுத்த வீட்டுல இருக்கற கொழந்தகள் சாப்பிடும் பலகாரங்களைப் பார்த்துவிட்டு இப்போ போலீஸ்லே வளர்க்கறாங்களே அந்த நாயைப் போலே உர்ர்

மோப்பம் பிடித்த ஓர் பாலகன் தேங்காய்
ஆப்பம் வேண்டுமென்று கேட்டனன், கேட்டனன் பசி
ஏப்பாம் விட்ட சிறு பாலகன் மயங்கித்
தொப்பென்று பூமியில் விழுந்தனன், விழுந்தனன்
அது மட்டுமா?
ஆடையில்லாத ஓர் பாலகன் திங்க
சிகடை வேண்டுமென்று கேட்டனன், கேட்டனன்
கோடையிடி கேட்ட நாகம் போல்
தொந்தரினனனோ தொந்தரினோ தரினோ ரினோ னோ நோ ஏஓஓஓஓ ஏஏஏஏஓஓ

எடாடேய், டேய், டேய், ஒக்காருங்கோ. ஒக்காருங்கோ. நான் என்னடான்ன எல்லரையும் இருக்க வைக்கறேன், நீ எழுந்து போக வைக்கறே கிரகம், கிரகம், இன்னைக்கு கிரகப் பிரவேசண்டா அட அபிஷ்டு!

கோடையிடி கேட்ட நாகம் போல் நாகம் போல்
நெஞ்சம் குமுறித் தாயும் அழுதனள் ஏ..ஏ..ஏ ஆங்

அழுதனள். இந்த விஷயங்களை தன் கணவனிடத்திலே சொல்வதற்காக நாதான்னு அப்படி தொட்டா. பொசுக்குனு ஒரு சத்தம்.

குனிஞ்சு பாத்தார். அங்கே ஒரு பையன் விழுந்து கெடக்குறான்.

"ஆஹா! சுசீலை, இது என்ன நம்பர் இருபத்தி எட்டா?"ன்னு கேட்டார்.

அல்ல நாதா, நம்முடைய கடைசிக் குழந்தை பட்டினி பசியிலும் இப்படிக் கீழே கெடக்கறான்னு சொன்னாள். ம்ம்ம்ம் "இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நீங்கள் சும்மா இருக்கலாமா?" என்று கேட்டாள்.

"பெண்ணே, நான் என்ன செய்யட்டும் எங்கே போகட்டும்" என்றார்.

போய் வருவீர் போய் வருவீர் துவாரகை போய்வருவீர் ஸ்வாமீ
போய் வருவீர் போய் வருவீர் துவாரகை போய்வருவீர்
அன்பர்கள் நினைப்பதை அக்கணம் தந்திடும்
ஆஆஆஆஆஆ..ஏஏஏஏ...ஏஏஏஏ... ஏஏஏ ஏஏஏஏஏஏஏ
அன்பர்கள் நினைப்பதை அக்கணம் தந்திடும்
ஆலிலை மேல் வந்த அரியன் வாழ்ந்திடும்
துவாரகை போய் வருவீர்

இந்த வார்த்தையைக் கேட்ட உடனே மனுஷன் துடிச்சுட்டான். என்ன இருந்தாலும் மானஸ்தன், என்னைப் போல.

"சுசீலை, கிருஷ்ண பரமாத்மா என்னுடைய பால்ய நண்பனாக இருந்த போதிலும் வெட்கம் மானத்தை விட்டு

எப்படி எடுத்துரைப்பேன் நண்பனிடம் எப்படி எடுத்துரை
ஃபேன் ஃபேன் ஃபேன்
வரும்படி இல்லாத வறுமையின் கொடுமையை
எப்படி எடுத்துரைப்பேன்?
உப்புக்கும் பருப்புக்கும் காசில்லை என்று
உப்புக்கும் பருப்புக்கும் காசில்லை என்று
உப்புக்கும் பருப்புக்கும் செப்புக் காசில்லை என்று
உன்னா ஆஆஆஆஆஆ.... ஆஆஆஆ.........

ஆஹா! கிருஷ்ணா, ஆள் தெரியாமக் கூட்டிட்டு வந்துட்டேனேடா!

உன்னால் முடிந்ததை பிச்சை தர வேணுமென்று
எப்படி எடுத்துரைப்பேன்? "

என்று சொன்னார்.

ஸ்வாமி, பசி வந்திடில் பத்தும் பறந்து போம்னு சொல்லுவாங்க. அது நெஜமோ பொய்யோ, பசி வந்திடில் பிராணன் போறது நிச்சயம். இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வெயிட் பண்ணினா பெரிய பசங்கள்ளாம் சின்னப் பசங்களைப் போட்டு முழுங்கிடுவாங்கள் போலிருக்குது. அதனால் நீங்கள் உடனே துவாரகைக்குப் புறப்படுங்கன்னு சொன்னார். கவலையில்லாமல் தவலையிலிருந்து அவலை எடுத்து ஒரு படி போட்டு அவரிடத்திலே கொடுத்தாள்.

அதை அவர் எடுத்துக்கொண்டு

நடந்தார் பல நாடு நகரமதைக் கடந்தார்
நடந்தார் பல நாடு நகரமதைக் கடந்தார்
பல காத துரமே நடந்தார்
செல்வம் தன்னைத் தேடி துவாரகை செல்வன் தன்னை நாடி
காடு மேடு பள்ளமென்று பாராது நில்லாது
தள்ளாத வயதில் வேகமாய் நடந்தார்

இப்படியாகத் தானே துவாரகாபுரியை அடை...ந்தார்.

கண்ணன் இருக்கும் படியான அரண்மனையை அடைந்தார். கதவுகளோ திறந்து கிடந்தன. தேர்தல்லே வெற்றியடைஞ்ச எம்.எல்.ஏ. அசெம்ப்ளிக்குள்ளார நொழையற மாதிரி மனுஷன் சர்வ சாதரணமாகப் போக ஆரம்பிச்சுட்டார்.

கண்டார்கள் காவலர்கள், கொண்டார்கள் கோபம்.

"நில்லையா, சொல்லையா,
நில்லையா, நீ யாரென்ற விவரத்தை சொல்லையா
வல்லார்கள் எல்லோரும் வணங்கிடும் வாசலில்
வல்லார்கள் எல்லோரும் வணங்கிடும் வாசலில்
கல்லாத மனுஷன் போல் சொல்லாமல் செல்கின்றீர்
நில்லையா, கொஞ்சம் தள்ளையா, பெரிய தொல்லையா!"

இப்படியாக மிரட்டினார்கள். ஏ பரமாத்மா! உன்னைப் பார்ப்பதற்காகப் படாத பாடுபட்டு ஓடிவந்த என்னிடத்தில் இவர்கள் தடார் புடார் என்று பாடுகிறார்களே! இவனுகளைப் பாத்தாலும் சம்திங் வாங்கற ஆளாவும் தெரியல்லையே! நான் என்ன செய்வேன் எங்கு போவேன்? ஏ கிருஷ்ணா பரமாத்மா கோவிந்தா என்று கதறினார்.

இந்தக் கதறலைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா ஓடோடி வந்தார், நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். ஆஹா! இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னை அன்போடு பார்க்க வந்திருக்கிறீர்களே, அண்ணி எனக்காக என்ன கொடுத்தடுப்பினார்கள் என்று கேட்டாஆஆஆர். பக்திப் பரவசத்திலே எண்சாண் உடம்பையும் ஒரு ஜாணாகக் ஒடுக்கிக் கொண்டு தான் கொண்டு வந்த அவல் முடிச்சை அவர் முன்பதாக வைத்தாஆஆஆஆர் கக. ஐயோ!

எடுத்தார், பிரித்தார், ஹஹஹஹ சிரித்தார்
புசித்தார் ஒரு பிடி அவலைப் புசித்தார்
அன்போடு தருதல் விஷமாகினும் அது அமுதமாகுமெனப் புசித்தார்
தன் அன்பன் படுகின்ற துன்பம் நீங்கிப் பேரின்ப வாழ்வு பெறப் புசித்தார்
மறுபடி ஒரு பிடி எடுத்தார், தடுத்தாள்,

யார்? ருக்மிணி, ஏன் தடுத்தாள்? அந்த ஏழை குடுக்கற அவலை சாப்பிட்டா கால்ரா வந்துடுமேன்னா தடுத்தாள்? அல்லள். அன்போடு ஒருத்தர் காபி கொடுத்தால் அவங்களுக்கு திருப்பி ஓவல் குடுக்கணும், குடுப்போமோ? இந்தக் காலத்திலே விஷம் கொடுக்காம இருந்தாப் போறாதா?

தன் அன்பனைப் பார்த்த ஆனந்தத்திலே வந்த வேலையை மறந்துட்டுக் குசேலர் போயிட்டார்.

இங்கே கண்ணன் சிரித்தார், அங்கே கனகலட்சுமி சிரித்தாள். உடனே மண் குடிசை எல்லாம் மாளிகையாகிவிட்டது. எல்லாம் அஸ்திவாரம் போட்ட கட்டடம், காரணம், காண்ட்ராக்ட்லே உடலை, அன்பர் மாதவன் தப்பா நெனைச்சுக்கப் பிடாது.

அந்தக் காலத்திலே இருந்த கிருஷ்ணனைப் போல இந்தக் காலத்திலே உதவி செய்றவங்க யாராவது இருந்தாங்களா? இருந்தார், தன் உழைப்பினாலே வந்த செல்வங்களை மத்தவங்களுக்கு வாரி வாரி வழங்கிய ஓரே ஒரு கிருஷ்ணனும் மறைந்தார்.

அவர் மட்டும் தானா? குசேலரைப் போல இருந்த மாதவனுக்கு சாமிநாதப் பிள்ளையோட உதவியினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இங்கே கிரகப் பிரவேசம், அடியேனுக்கு அதில ஒரு சான்ஸ். ஆனா ஒரு விண்ணப்பம், குசேலனைப் போல மாதவனுக்கு இருபத்தேழு வேணாம். யோசனை செய்து, நிதானமா ஒண்ணு ரெண்டோட,

மங்களம் சுபமங்களம் நித்ய ஜெய மங்களம் சுப மங்களம்
நித்ய ஜெய மங்களம் சுப மங்களம்!

நம்ம பார்வதி எங்கே?

இதோ, இங்கே தாம்பா இருக்கேன்.

ஓ, கூட்டத்திலே எங்கேயோ காணமப் போயிடப் போறியோன்னு கேட்டேன், வா, வீட்டுக்குப் போவோம்.

2 கருத்துகள்: