வெள்ளி, 27 நவம்பர், 2009

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்

“இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை”
என்பது வள்ளுவன் வாக்கு. இதன் பொருளாவது, மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

இதே கருத்தை

இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை
இல்லாளும் இல்லாளேயாமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றமுரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்ததூராய் விடும்

என விளக்கமாக எடுத்துரைத்து,

இல்லறமல்லது நல்லறமன்று என ஔவை மூதாட்டி அறிவுறுத்தினாள். அதற்கொப்பவே முற்காலத்தி்ல் முனிவர்களும் பிற இறையடியார்களும் இல்லறத்தை மேற்கொண்டு

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று

எனும் குறள் கூறும் நெறியில் வாழ்ந்து இறைவனை அறியும் பேறு பெற்றனர் என்பதை வரலாறு விளக்குகின்றது.

ஒருவனுக்கு மனைவியாய் வாய்க்கும் பெண் நற்பண்புகள் நிறையப் பெற்றவளாக இருப்பின் அவள் புகுந்த வீடு ஒரு ஆலயமாக விளங்குவது உறுதி. அப்பெண் அவ்வாலயத்தில் தெய்வமாக விளங்கி சகல செல்வங்களையும் பெற்றுத் தரும் சக்தியைப் பெறுகிறாள். அத்தகைய குணவதியான பெண்ணை மனைவியாக அடைந்தவன் வாழ்வில் பெறும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்

படம்: இருளும் ஒளியும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

திருமகள் தேடி வந்தாள் ஆ.ஆஆஆ
என்தன் இதயத்தில் குடி புகுந்தாள் ஆஆ ஆஆஆ
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ.
திருமகள் தேடி வந்தாள்

ஆஆ..... ஆஆஆ
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்

ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ

திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருமகள் தேடி வந்தாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக