வெள்ளி, 27 நவம்பர், 2009

காலத்தில் அழியாத காவியம் தர வந்த

எந்த ஒரு தொழிலையும் செய்கையில் அதில் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டாலன்றி அது சிறக்காது.
பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி
சித்தந்தெளியும் இங்கு செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும்- நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை
தத்துவம் உண்டாம்-நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

அனைத்திற்கும் மேலாக தெய்வ பக்தி மிகவும் அவசியம். தெய்வத்தின் அருளிருந்தால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. எவ்வாறாயினும் நாம் ஈடுபடும் முயற்சி பலிதமாக உரிய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். காத்திருக்கப் பொறுமை மிகவும் தேவையானது.

உரிய காலம் வருமுன்னரே நாம் மேற்கொண்ட முயற்சியில் பலன் விளையுமென எதிர்பார்த்து மனம் சோர்தல் கூடாது. இடையிடையே வரும் தடங்கல்களினாலும் வேறு பல சோதனைகளாலும் நமது முயற்சியைக் கைவிடுதலும் கூடாது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறிய முதுமொழிகளை மனதில் நிலை நிறுத்தி தொடர்ந்து முயல்வதுடன் பக்தி செய்து வந்தால் காரியம் கைகூடும்.

காலத்தில் அழியாத காவியம் தர வந்த

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
ஆண்டு: 1966

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா?

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உன்
சொல்லுக்கு விலையாகுமே மகனே உன்
தோளுக்குள் புவி ஆளுமே
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா மகனே என்
அருகினில் இருப்பாயடா

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

1 கருத்து:

  1. இது போன்ற பாடல்களை இப்போது வரும் திரைப்படங்களில் கேட்க முடியுமா. தமிழின் பெருமையை புகலும் காலகட்டத்தில் நாம் வாழும் பெருமை ஒன்றே போதும்

    பதிலளிநீக்கு