வெள்ளி, 27 நவம்பர், 2009

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா

மிகவும் அழகுவாய்ந்த ஒரு கட்டிளம்பெண் வாலிபப் பருவத்திலிருக்கும் ஒரு ஆடவனைக் கண்டு தன் காதலைப் பார்வையாலும் தன் நடவடிக்கையாலும் வெளிப்படுத்தினால் அந்த ஆடவன் இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்ட முற்றும் துறந்த ஒரு முனிவனாயினும் அவனது மனம் ஒரு நொடிப்பொழுதாகிலும் சஞ்சலமடைவதே மனித இயற்கை. அவ்வாறு மனம் சஞ்சலப் படவில்லையாயினும் அவனது மனதில் அவளைப் பற்றி எழும் சிந்தனைகள் அவளது அழகினைக் குறித்தும், அவளது செயல்கள் குறித்துமே இருத்தல் இயல்பு.
அரங்கநாதரின் மேல் பக்திகொண்டு அரங்கனுக்குத் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையாகக் கொண்டு வாழும் அடியார் ஒருவர் மேல் அத்தகைய அழகு மங்கை ஒருத்தி தன் காதல் கணைகளைத் தொடுத்தாள் அவரைத் தன் அழகுக்கு அடிமையாக்கும் எண்ணத்துடன். அவள் மேல் சாதாரண மனிதர் போல் மோகம் கொள்ளாமல் அவள் தன் மேல் காட்டும் அன்பிலும் அவள் அழகிலும் அரங்கனையே கண்டு சேவித்தார் அவ்வடியார். அவரே தொண்டரடிப் பொடியாழ்வார். இந்தத் தொண்டரடிப் பொடியாழ்வாரின் கதையை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்து தமிழ்த் திரையில் நடிப்பின் புதியதொரு பரிமாணத்தை அற்புதமாகக் காட்டியுள்ளனர் ஏ.பி. நாகராஜன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திருமால் பெருமை திரைப்படத்தில்.

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா

திருமால் பெருமை
கவிஞர் கண்ணதாசன்
கே.வி. மஹாதேவன்
டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா

மாபாரதத்தின் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா
கோபியர் கொஞ்சும் ரமணா

தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா
தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா ரமணா ரமணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக