வெள்ளி, 27 நவம்பர், 2009

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை

தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
இது இயற்கையின் விதி, இதனை எவராலும் மாற்ற இயலாது. செய்த காரியங்களுக்கேற்ற பிரதிபலன் நிச்சயம் கிட்டும். நாம் ஒருவருக்கு நன்மை செய்தோமெனில் அது நமக்குப் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் நன்மை பயப்பதும், தீமை செய்தோமாயின் நமக்குப் பிரதியாகத் தீமை பயப்பதும் உறுதி. குற்றம் பரிந்தவன் குற்ற உணர்வுடனேயே நிம்மதியின்றி வாழ நேரிடும்.

பிறர் அறிய மாட்டார் என எண்ணிச் செய்யும் பாப காரியங்கள் உரிய காலத்தில் அனைவருக்கும் தெரிய வரும். எவரும் உண்மையை இறைவனிடமிருந்தும் உலகத்தாரிடமிருந்தும் மறைத்தல் இயலாது. வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்க நாம் செய்ய வேண்டுவது என்னவெனில், மனதால் பிறருக்கு யாதொரு துன்பமும் நினைக்காமல், செயல்களால் யாதொரு துன்பமும் விளைவிக்காமல் உலகம் உய்யும் பொருட்டு நல்ல செயல்களையே செய்து அனைவரது அன்பையும் பெறுவது ஒன்றே.

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை

படம்: மன்னிப்பு
இயற்றியவர்: வ்ஆலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

பாதை தெரிகின்றது அவன் பயணம் தொடர்கின்றது
யார் சிரித்தாலும் யார் அழுதாலும் தன் வழி நடக்கின்றது

கடவுள் தூங்கவில்லை
கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
கடவுள் தூங்கவில்லை

கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்

கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது

கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்
ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக