வெள்ளி, 27 நவம்பர், 2009

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையில் பெண்களின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் என்றாலே இக் கவிஞர்களுக்கு அவளது அழகு ஒன்றே முன்னிலையில் வரும் போலும். பெண்களின் வனப்பை வர்ணித்த கவிஞர்கள் அவர்களது கூந்தலை வர்ணிக்கத் தவறுவதில்லை.
பெண்களின் கூந்தலில் அப்படி என்ன மாயமிருக்குமோ தெரியவில்லை. முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவனான ஷெண்பகப் பாண்டியன் தன் மனையாளின் கூந்தலினின்று வரும் நறுமணத்தில் மயக்கமுற்று அமமணம் கூந்தலின் இயற்கையான மணமா அன்றி வாசனாதி திரவியங்களைப் பூசிக் கொள்வதினாலும் மணம் வீசும் மலர்களைச் சூடிக் கொள்வதனாலும் ஏற்பட்டதா என ஐயமுற்று, புலவர்களிடையே இது குறித்த பெரும் சர்ச்சசை ஏற்படக் காரணமாயிருந்து உலகத்தையே ரக்ஷித்துக் காக்கும் அந்த சிவபெருமானையே மண்ணில் எழுந்தருளச் செய்யத் தூண்டுகோலாக ஆனான்.

இன்னொரு பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் தன் காதலியின் கூந்தலை மழை மேகத்துக்கு நிகராக எண்ணி மயங்குகிறான் இங்கே.

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

பட்ம்: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
ஆண்டு: 1978

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்?

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்?
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்? அந்தி
மாலையில் இந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம் ஏனிந்த வேகம்?

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ?

மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன்

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ?

கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ?
காலை வரை கேட்பதுண்டோ?

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

கறபகத்துச் சொலையிலே பூத்த மலர் நீயல்லவோ?
விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ?
காவியத்து நாயகினின் கட்டழகின் மார்பினிலே
சுகமென்ன சுகமென்று மோகனப் பண் பாடியதோ?
மோகனப் பண் பாடியதோ?

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக