வெள்ளி, 27 நவம்பர், 2009

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக

காதல் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த உலகமே மறந்து விடுமோ? காதலனுக்கு இவ்வுலகிலுள்ள சிறப்பானவை அனைத்தும் தன் காதலி உருவில் தெரியும் போலும்! அவளூக்கும் தனக்கும் முன் ஜன்மத்திலிருந்தே உறவு உண்டென்று கற்பனை செயது கொண்டு அவளிடம் அவன் சென்று தன் எண்ணங்களைச் சொன்னதும் அவளும் அவன் கற்பனையில் மயங்கி, தன் பங்குக்கு ஏதேதோ கற்பனைகளில் மிதப்பதுடன், தன் வாழ்வே அவனோடு தான் என்று முடிவெடுக்கிறாள்.
இத்தகைய மயக்கம் இருவரின் காதலும் உண்மையாய் இருப்பின் சுகமாகவே இருக்கும், காதல் கனிந்து கைகூடினால் வாழ்வும் இனிமையாகவே விளங்கும்.

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக

படம்: காக்கும் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

முன்னொரு பிறவி எடுத்திருந்தேதேன் உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக