வெள்ளி, 27 நவம்பர், 2009

சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே

காதலின் உயர்வைப் பாடாத கவிஞர்கள் யாருளர்? காதலுக்கு ஜாதியில்லை, மதமுமில்லை, நாடு நகர பேதம் ஏதுமில்லை. உள்ளங்கள் சங்கமித்து ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறிவிடும், இரண்டும் ஒன்றாய்க் கலந்துவிடும்.
இதனை உலகுக்கு உணர்த்தும் வகையில் சீனாவில் வசிக்கும் நம் அருமை நண்பர் ஒருவர் உயர்ந்த அன்பினாலும் தெளிந்த அறிவாலும், அனைவரும் போற்றும் பண்பாலும் தன் மனம் கவர்ந்த சீனப் பெண் ஒருத்தியைத் தன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். விரைவில் அப்பெண்ணுடன் இந்தியா வந்து தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் திருமணம் புரிந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நம் நண்பர், விரைவில் மனைவியாக இருக்கும் தன் காதலியிடம் தன் காதலை எவ்வாறு எடுத்துரைத்திருப்பார், அவரது காதலி அவரது காதலை எவ்வாறு ஏற்றார் எனும் சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில் மனதில் ஓடியது ஒரு இனிய பழந்தமிழ்த் திரைப் பாடல்.

இருமனம் ஒன்றுபட்டு இல்வாழ்வில் இணையவிருக்கும் இளம் இன்டர்நேஷனல் தம்பதியருக்கு எனது அன்புப் பரிசாக மலர்கிறது இப்பாடல்:

சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே

படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
பாடியவர்: எஸ்.ஜி. கிருஷ்ணன், ஜமுனா ராணி

சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா நீ கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே

சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குறே
தட்டாதே என் சொல்லை தவுலத் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே
கட்டிக் கொள்ளும் முன்னே நம்ப மாட்டா புல்புல்லே

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி நீ கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத் தான் பாரேண்டி

கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா என் கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா

நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது?
நல்லா இல்லே என்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை உன்னை நிக்காஹ் செய்வது நிக்காஹ் செய்வது

கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா என் கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக