வெள்ளி, 27 நவம்பர், 2009

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்

சென்னை என்றதுமே தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலில் மனதில் வருவது சென்னை செந்தமிழ் மொழியே ஆகும். தமிழ்த் திரையுலகில் இந்த சென்னை செந்தமிழை சிறப்பாகக் கையாண்ட பிரபல நடிகர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இது நகைச்சுவை நடிகர்கள் வாயிலாக வெளிப்படுகையில் மிகவும் ரசிக்கத்தக்கதாகும். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஜே.பி. சந்திரபாபு, நாகேஷ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் சென்னை செந்தமிழைத் திறம்படப் பேசி நடித்திருந்தாலும், இவர்கள் அனைவரையும் மிஞ்சும் படியாக அசத்தியவர்கள் துக்ளக் சோ ராமசாமி அவர்களும் மனோரமா ஆச்சி அவர்களும் ஆவர். இவர்கள் சென்னை செந்தமிழில் பேசி இணைந்து நடித்து 1968ஆம் ஆண்டில் வெளியான பொம்மலாட்டம் திரைப்படம் சக்கைப் போடு போட்டது.
இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாவன, ஜாம்பஜார் ஜக்குவாக நடிக்கும் சோ, கதாநாயகன் ஜெய் சங்கருக்கு கதாநாயகி ஜெயலலிதாவிடம் தன் காதலை சொல்லக் கற்றுக் கொடுக்க, அதன் படியே ஜெய்சங்கரும் ஜெயலலிதாவிடம் சென்று ஜக்கு சென்னை செந்தமிழில் உரைத்த காதல் மொழிகளை அப்படியே ஒப்பிபதும், சோவின் காதலியாக வரும் மனோரமா முதன்முதலில் தன் சொந்தக் குரலில் பாடிய இப் பாடலும் ஆகும்.

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்

படம்: பொம்மலாட்டம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: மனோரமா

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு அட
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு அட
மச்சான் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு

வாவா மச்சான் வா மச்சான் வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போகல்லாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக