வெள்ளி, 13 நவம்பர், 2009

ஆட வேண்டும் மயிலே

முருகு என்றால் அழகு என்று பொருள். மயில் ஆடுவது அழகு, அதனுடன் சேர்ந்து "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்றும் "முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்" என்றும் பக்தர்கள் போற்றும் முருகனும் ஆடினால் அழகோ அழகு.
முருகன் என்றதுமே அனைவர் மனதிலும் தோன்றுவது ஒரு குழந்தையின் வடிவமே. முருகனை அவன் அடியவர் யாவரும் தம் குழந்தையாகப் பாவித்தே வழிபடுகின்றனர். "முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்" என்று தன்னைப் பாட்டியாக பாவித்துப் பாடுவாள் ஒரு பெண் பக்தை.

அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானுளோராட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்

கதைவிடாத தோள்வீம னெதிர்கொள் வாளியால்நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக்
கதறுகாலி போய்மீள விஜயனேறு தேர்மீது
கனக வேத கேர்டுதி அலைமோதும்

உ ததி மீதிலேசாயு முலக மூடு சீர்பாத
உ வண மூர்தி மாமாயன் மருகோனே
உ தய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமுமாட வாழ்தேவர் பெருமாளே.

என்று பாடிய அருணகிரிநாதர், அவ்வாறு மயிலுடன் ஆடும் முருகனுடன் சேர்ந்து தானுமாட வேண்டுமென்று விரும்புவதாக அமைந்த அருமையானதொரு பாடல்:

ஆட வேண்டும் மயிலே

அருணகிரிநாதர்
டி.எம். சௌந்தரராஜன்
எஸ். ஜானகி

தீம் திணதோம் ததீம் கிணதோம் தததஜம் தத்தணம்
தத்ததும் ததிகிணதோம் தகதஜம் தகதணம் தகததும்
ததிகிணதோம் தத்தஜம் ததிகிணதோம் தா
தகதஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா

ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே

இளமை இருக்கும் புது எழிலிருக்கும் ஆ..ஆ..
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
அவனோடு உறவாடி அன்போடு நான் சேர்ந்து

ஆட வேண்டும் மயிலே

சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்
சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கருணை பிறக்கும் தனி உடலமைப்பும்
கண்டதும் மனமெலாமழகிலே
மலர்ந்துடல் சுகம் பெற
குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன்
தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென

ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக