வெள்ளி, 13 நவம்பர், 2009

கண்ணன் வந்தான் அங்கே

அன்பு நண்பர்களே,
உலக வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களைத் தீர்க்கும் வழி இறை வழிபாடேயாகும். இறை என்பது அவரவர் மனத்துக்கு இசைந்தாற்போல் மாந்தர் அமைத்துக் கொண்டு வழிபட்டுத் தம் துன்பங்களை மறந்து அவற்றிலிருந்து மிள முயல்கின்றனர். இறைத் தத்துவத்தில் கண்ணன் மிகவும் சிறந்தவன் ஏனெனில் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டியவன் கண்ணனைப் போல் வேறு யாருமில்லை என்றே கருதும் வண்ணம் கண்ணனின் கதை விளங்குகிறது.

இதனாலேயே மஹாகவி பாரதியாரும் தான் காணும் உறவுகள் யாவற்றிலும் கண்ணனையே கண்டார். கண்ணன் என் தோழன், கண்ணன் என் சற்குரு, கண்னன் என் காதலன், கண்ணன் என் சேவகன், கண்னன் என் ஆசான் எனப் பல விதங்களிலும் அவன் திருநாமத்தைத் தீந்தமிழால் செபித்தார்.

நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் அவருக்குக் கண்ணன் காட்சி தந்து அவரது துன்பங்களைப் போக்கி தேச சேவையில் தம் வாழ்வை அற்பணித்து நம் அனைவரின் விடுதலைக்கு வழிகாண அவருக்கு உறுதுணையாக விளங்கினான் என்பது நாம் உணர்வாலும் அறிவாலும் விளங்கக் கூடியதே.

அந்த மாயக்கண்ணன் மேல் ஒரு பாடல்:

கேட்டு மகிழ: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்

திரைப் படம்: ராமு
சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக