வெள்ளி, 13 நவம்பர், 2009

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு

அன்பு நண்பர்களே,
மனிதனின் செயல்களுக்கும் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்கும் இயற்கையை உவமானமாகச் சொல்வது பொதுவாகக் கவிஞர்கள் வழக்கம்.

உதாரணமாக

"உடலுக்கு உயிர் போலே உலகுக்கு ஒளி போலே
பயிருக்கு மழை போலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே"

"மலை போலே வரும் சோதனையாவும் பனி போல் நீங்கிவிடும்"

என்பன போன்ற வரிகள் தமிழ்க் கவிதைகளில் மிகுந்திருத்தல் இயல்பு. இதற்கு மாறாக கவிஞர் மருதகாசி இயற்கையில் பெய்யும் மழைக்கு மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை உவமையாகச் சொல்கிறார்.

சொட்டு சொட்டாகத் தூரல் போடும் பழை உணவுக்காக ஏங்கும் ஏழையின் வியர்வையைப் போலவும் கண்ணீரைப் போலவுல் உள்ளதாம். பலமாகக் கொட்டும் மழை செல்வந்தர்கள் ஏழைகளைச் சாடுதல் போல் உள்ளதாம். மறைந்த இசை மேதை டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல்:

கேட்டு மகிழ: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
பாடியோர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: கே.வி. மஹாதேவன்

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முட்டாப் பயலே மூளை இருக்கா ஆஹஹ்ஹாங்
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு?
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோண புத்தியைக் காட்டுறே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்

கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக