வெள்ளி, 13 நவம்பர், 2009

ஆனாக்கா அந்த மடம்

அன்பு நண்பர்களே,
பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று சொல்கிறார்கள்.

இவ்வுலகில் வாழ எவ்வளவு பொருள் தேவை என எண்ணிப் பார்க்கையில் அவ்வளவு நபருக்கு நபர் மாறுபடுவதை உணர்கிறோம். இது ஒருவர் வாழ்வில் எத்தகைய வசதிகளைப் பெற விரும்புகிறார் என்பதைப் பொருத்து நிர்ணயிக்கப் படுகிறது. சுகபோக வாழ்வை அனுபவிக்கும் ஆசை மிக்க ஒருவன் அடைய விரும்பும் வசதிகளுக்கு ஒரு அளவே இல்லை, எத்துணை பொருள் அவனிடம் இருப்பினும் அவன் அவற்றைக் கொண்டு திருப்த்தியடையாமால் மேலும் மேலும் பொருளை ஈட்டி உலகிலுள்ள பிற அனைவருள்ளும் தான் மிகவும் அதிக வசதி படைத்தவனாக ஆக வேண்டும் எனும் பேராசையால் வாழ்நாளில் பெரும் பகுதியைப் பொருளீட்டுவதிலேயே செலவிட்டு அவற்றால் துய்க்கத்தக்க இன்பங்களில் ஒரு சிறு பகுதியையும் முழுமையாக அனுபவிக்காமல் மடிவதைப் போல் மடமை வேறொன்றுமில்லை.

அளவோடு ஆசைப்பட்டு அதற்கேற்ற பொருளை மட்டுமே ஈட்டி, அதிலும் பிறருக்குத் தன்னாலியன்றதைத் தந்துதவி உலகிலுள்ளோருடன் கலந்து உறவாடி மகிழும் ஒருவனே இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழ்பவன் ஆகிறான்.

இம்மாபெரும் தத்துவத்தை ஒரு பிச்சைக்காரி வாயிலாக சென்னை செந்தமிழில் எடுத்தரைக்கும் இனியதோர் பாடல்:

கேட்டு மகிழ: ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

திரைப்படம்: ஆயிரம் ரூபாய்
P. சுசீலா

ஒயுங்கே தவறாமே ஊரை எத்தி வாயாமே
பொயுதே வீணாக்காமே புவாவைத் தேடிக்கணும்

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே
குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே
மச்சு குச்சு எல்லாமே மனசுலே தானிருக்கு
மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும்

கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி
இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி
மரத்தேப் படைச்சவன்தான் மனுசாளப் படச்சிருக்கான்
வாரத ஏத்துக்கத்தான் மனசே கொடுத்திருக்கான்

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

தெட்டிக்கின்னு போறதுக்கு திருடன் வருவான்னு
தெட்டிக்கின்னு போறதுக்கு திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க தூங்காமே முயிப்பாங்க
துட்டுள்ள சீமாங்க தூங்காமே முயிப்பாங்க
துட்டும் கையில இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
பொட்டுயும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக