வெள்ளி, 13 நவம்பர், 2009

ஓரு நாள் போதுமா

அன்பு நண்பர்களே,
இசைக்கு அசையாத உயிர்களே இல்லை, அதனாலேயே இசைகேட்டால் புவி அசைந்தாடும் என்றார் கவிஞர். இசையைக் கேட்டுப் பயிர்களும் செழிப்பாக வளருகின்றன என விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தறிந்துள்ளனர். இசையைப் பல ராகங்களாகவும் தாள லயங்களாகவும் வகைப்படுத்தி மனதின் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தக்கதாக அமைததுள்ளனர் நம் முன்னோர். இத்தகைய இசையை முறையாகப் பயின்று இசைத் துறையில் சிறந்து விளங்கும் மேதைகளுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை.

ராகங்கள் பலவற்றை ஓரே பாடலில் இசைத்து ராகமாலிகையாகப் பாடுவது ஒரு சிறப்பு. இத்தகைய திறமை ஒரு சிலருக்கே முழுமைபாக அமையும். அத்தகைய மேதைகளுள் முன்னோடியானவர் ஒருவர் பாட உலகமே அவரது இசையால் அசைந்தது ஒரு நாள். மனதை மயக்கி உயிரை வளர்க்கும் இவரது மேன்மையான இசையை ரசித்து மகிழ ஒரு நாள் போதாது.

கேட்டு மகிழ: ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?

திரைப்படம்: திருவிளையாடல்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம். பாலமுரளிகிருஷ்ணா

ஆ...ஆ...
ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
நாதமா கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
புதுநாதமா சங்கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

ராகமா சுகராகமா கானமா தேவகானமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா?
நாதமா கீதமா அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

குழலென்றும் பததபம மபபமக கமமகரி ரிககரிஸ
காக்ரீஸ் நீதபமக
யாழென்றறும் பா பம பததப பமப ததப பம
பததபபம பததபபம பத மபமத பதமப
கமகப மபகம ரிகரிம கமரிக
ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா
ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவான் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவான் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி தோடி..
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?

கலையாத மோகனச் சுவை நானன்றோ?
மோகனச் சுவை நானன்றோ? மோகனம் ஆ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ?

கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நான

கேட்டு மகிழ: எஸ்.பி.பி. பாடிய "ஒரு நாள் போதுமா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக