வெள்ளி, 13 நவம்பர், 2009

இரவும் நிலவும் வளரட்டுமே

அன்பு நண்பர்களே,
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட நிலையே வாழ்வில் இன்பம் எனபதை நம் முன்னோர்கள் கவிதைகள் வாயிலாகவும் காவியங்கள் வாயிலாகவும் தெளிவாக விளக்கியுள்ளனர். இருமனம் ஒருமனமாக இணைந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வளரும் இப்புது உறவு திருமணம் முடிந்து கணவன் மனைவியாக இணையும் நிலையை அடைந்து ஒன்று சேர்கையில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் பிரியாமல் ஒன்றுசேர்ந்து வாழும் பாக்கியத்தைப் பெறுவர்.

காதலின்பத்தைத் துய்க்க அமுதைப் பொழியும் நிலவு மிளிரும் இரவுப் பொழுதைப் போல் இனிய நேரம் வேறுண்டோ?

கேட்டு மகிழ: இரவும் நிலவும் வளரட்டுமே

திரைப்படம்: கர்ணன்
பாடல் இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக