வெள்ளி, 13 நவம்பர், 2009

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

அன்பு நண்பர்களே,
உள்ளத்தில் நேர்மையும் உழைத்து வாழத் தெம்பும் இல்லாத சில முதுகெலும்பற்ற ஆண்கள் தங்களைக் காதலிக்கும் பெண் மற்றும் மணந்து கொள்ளும் மனைவி உட்படப் பெண்களை ஒரு கருவியாகக் கொண்டு பொருளும் சுகமும் தேடும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து வருகிறது. அத்தகைய ஆண்களின் உண்மை சொரூபம் வெளிப்படுகையில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஏற்படும் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் உருக்கமான பாடல்:

கேட்டு மகிழ: காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசீலா
இசை: ஏ.எம். ராஜா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை சேர்க்கவா
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

1 கருத்து:

  1. நல்ல பாடல்ல....ஆனால் உலகமெங்கும் இந்நிலை உள்ளதென சொல்கிறார் கவிஞர்...அப்படி பார்த்தால் பெண்களை பற்றிய ஆண்களின் இந்த உணர்வு சரிதான் போல தெரிகிறது..!

    பதிலளிநீக்கு