வெள்ளி, 13 நவம்பர், 2009

கொடுத்ததெல்லாங் கொடுத்தான்

அன்பு நண்பர்களே,
இறைவன் உலகத்தைப் படைத்தான் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. அவ்வாறு படைத்தவன் அதிலுள்ள இயற்கை வளங்களை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவிலேயே படைத்ததாகவும் மதங்கள் கூறுகின்றன. மதங்கள் ஏற்பட்டதன் காரணம் மனிதன் அனைத்து ஜீவராசிகள் மேலும் சக மனிதர்கள் மேலும் அன்பு செலுத்தி வேற்றுமை நீக்கி ஒற்றுமையாக, ஏற்றத் தாழ்வு பாராமல் எல்லோரையும் சமமாகக் கருதி வாழ்ந்து வாழ்வில் இன்பத்தையே பெரும்பாலும் அனுபவிக்க வேண்டும் என்பதும் துன்பத்துக்குக் காரணமான சுயநலம், பொறாமை, கோபம், பேராசை, லோபம் முதலிய இழிகுணங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதுமே.

இவ்வுலகில் பாப காரியங்கள் பெரும்பாலும் நிகழ்வது இன, மொழி, மத உணர்வுகளாலேயே ஆகும். அத்துடன் உலகிலுள்ள வளங்களையெல்லாம் தானும் தன்னைச் சேர்ந்தவர்கள் சிலரும் மட்டுமே ஆளுமை புரிய வேண்டும் எனும் பேராசையால் தூண்டப்பட்ட சில சுயநலவாதிகளாலேயே ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை உலகில் நிலவுகிறது. உழைப்பவனுக்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படாததால் அவ்வாறு பாதிக்கப்பட்டவருள் ஒரு பகுதியினர் நேர்மைப் பாதையிலிருந்து மாறிப் பிறர் பொருளை அபகரித்து வாழும் சமூகவிரோதிகளாக ஆகின்றனர்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வு நல்கி நியாயம் செய்யும் கடமையை அரசுகள் செய்யாமல் சில சுயநலவாதிகளின் ஆதிக்கத்தால் அவை பொது மக்களுக்கு அநீதி இழைப்பதுடன், உலகிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கத் தவறி, "குரங்கு தான் கெட்டதுமல்லாது வனத்தையும் அழித்ததாம்" எனும் கூற்றுக்கேற்ப அனைவரின் அழிவுக்கு வழிவகுத்து, சொர்க்கலோகமாக விளங்க வேண்டிய உலகை நரகமாக மாற்றி வருகின்றன.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்." இந்நிலை என்று வருமோ?

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்

படகோட்டி வாலி மஹாதேவன் சௌந்தரராஜன்

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சந் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லையெனபோர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக