செவ்வாய், 17 ஜனவரி, 2012

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

இயற்கையில் இறைவன் படைப்பில் எவ்வித பேதங்களும் இன்றி எல்லா உயிரினங்களும் சமமே. இன, நிற, மொழி, மத பேதங்கள் மந்த புத்தி படைத்த மனிதரிடையே மட்டும் வழக்கத்திலுள்ளன. அறியாமையால் தன் இயற்கை அறிவை இழக்கும் மனிதர்கள் தம்மிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டுவதோடு பிற உயிர்களையும் நேசிக்கத் தவறுகின்றனர். இயற்கையையும் மதிக்காது இயற்கை வளங்களைத் தம் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் அழிக்கவும் தலைப்படுகின்றனர். ஆங்கிலேயரின் ஆதிக்கம் வலுவுற்று விளங்கிய காலத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் ஆங்கிலேயர்களைத் தவிர மற்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் தாழ்ந்தவர்களாகரும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்தனர். அது மட்டுமின்றி ஆப்ரஹாம் லிங்கன் காலம் வரையிலும் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மற்ற ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக வாழ்ந்ததும் வரலாறு கண்ட உண்மையாகும்.

நாளடைவில் மஹாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா முதலிய தலைவர்கள் வழிநடத்திய அஹிம்சை வழிப் போராட்டங்களின் பலனாக உலகெங்கிலுமுள்ள மக்கள் தம்முள் இனப்பாகுபாடு பாராட்டும் மடமையினின்று மீண்டு அனைவரையும் சமபாவத்தோடு நடத்தும் மனப்பக்குவத்தை அடைந்ததனால் இன்று ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையாக விளங்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஓபாமா தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி புரிகிறார்.

நமது நாட்டிலும் முற்காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சம உரிமை பெற்றுப் பல துறைகளிலும் முன்னணியில் விளங்குகின்றனர். இவ்வாறான முன்னேற்றங்கள் பல நம் கண்முன்னே நிகழ்ந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் போக்கால் சாதி, மத, இன மொழி பேதங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றதும் நாம் அறிவோம். இத்தகைய பேதங்கள் யாவும் மறைந்து நம் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் ஒனறே குலம், ஒருவனே தேவன் எனும் சமரச சன்மார்க்க நெறியைப் பேணிப் பெருமையுறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கையில் நிறம் பார்த்து சிவப்பு நிறமானால் விரும்புவதும் கருப்பானால் வெறுப்பதும் என்ற மடமையும் நீங்கி உள்ளத்து உயர்வையும் பிற தகுதிகளையும் கணக்கில் கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேடும் மனப்பக்குவத்தையும் பெரும்பாலான மக்கள் அடைந்துள்ளனர். அத்தகைய முற்போக்கான மனோபாவம் மக்களிடையே நிலவுவதை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

திரைப்படம்: வெற்றிக்கொடி கட்டு
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே

வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புத் தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புத் தான்
மண்ணூக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூடக் கருப்புத் தான்
மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவாள் கருப்புத் தான்
பூமியிலே முத முதலா பொறந்த மனுஷன் கருப்புத் தான்
மக்கள் பஞ்சம் தீக்கும் அந்த மழை மேகம் கருப்புத் தான்
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைத்த கண்ணு முழி கருப்புத் தான்
கற்பு சொல்லி வந்தா என்ன கண்ணகியும் கருப்புத் தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புத் தான்
பணமும் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

உன்னைக் கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புத் தான்
ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புத் தான்
பூக்கடையில் தேடினேன் பூவில்லை கருப்புத் தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்புத் தான்
பாவாடை கட்டிக் கட்டி பதிஞ்ச இடம் கருப்புத் தான்
முத்தங்கேட்டுக் காத்திருக்கும் அந்த இடம் ஒனக்குத் தான்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புத் தான்
ஊரறிய பெத்துகணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஆங்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத் தான்
அழகு கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்கும் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங்கருப்புத் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக