புதன், 18 ஜனவரி, 2012

வீச்சறுவா தூக்கிகிட்டு

ஆதி மனிதர்கள் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். அவர்களுள் வலிமை மிக்கவன் அனைவருக்கும் தலைவனாக விளங்கி அடக்கி ஆண்டு வந்தான். அப்போது மனிதர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டதுடன் தங்கள் தலைவனையும் தலைவியையும் தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். நாளடைவில் மனிதனின் பகுத்தறிவு வளரவே அவன் இயற்கையின் சக்திகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினான். காடுகளை அழித்து வீடுகள் கட்டிக்கொண்டு வாழத் தலைப்பட்டான். அது முதற்கொண்டு ஒரு வரைமுறைக்குள் செயல்படும் மனித சமுதாயம் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக்கப்பட்டு அவனுக்கு விசேஷமான ஆடை அணிகலன்கள் தயாரிக்கப்பட்டு, பிறரிலும் மேம்பட்டவனாக அரசன் விளங்குவது மரபாக அமைந்தது.

அரசன் தன் நாட்டையும் குடிமக்களையும் வன விலங்குகளிடமிருந்து காப்பதும், அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் முதலான அடிப்படை வசதிகள் கிடைக்க வழி செய்வதும், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து நாட்டில் மக்கள் என்றும் இன்பமாய் வாழ வழிவகுப்பதும் தன் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரவே அரசனை மக்கள் மிகவும் மதித்து நடந்தனர். நாளடைவில் மதங்கள் தோன்றி ஆலயங்கள் அமைக்கப் பட்டு வழிபடும் வழக்கம் பரவுகையில் ஆலயங்களில் கடவுளர்க்கு சிலைவடிவம் கொடுக்கப்பட்டு எல்லா மக்களும் விசேஷமான முறையில் பூஜைகள் செய்தும் திருவிழாக்கள் எடுத்தும் சிறப்புடன் இறை வழிபாடு நடைபெறுவது வழக்கமானது.

இத்தகைய ஆலயங்களுள் தொன்மை வாய்ந்தவை ஐயனார் எனவும் எல்லைச் சாமி எனவும் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் தெய்வத்தின் திருக்க்கோவில்களாகும். ஐயனார் உருவத்தை ஒரு அரசனைப் போல அமைத்து ஆசனத்தில் வீற்றிருப்பது போலவும், குதிரை மேல் சவாரி செய்வது போலவும் உருவாக்கி மக்கள் வழிபட்டனர், இன்றும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். ஐயனார் தங்கள் கிராமத்து மக்கள் அனைவரையும் ஒரு அரசன் குடிமக்களைக் காப்பது போலவே காக்கின்றார் எனும் அசையாத நம்பிக்கையுடன் மக்கள் இன்றும் இறைவழிபாட்டை நடத்துகின்றனர்.

வீச்சறுவா தூக்கிகிட்டு

வீச்சறுவா தூக்கிகிட்டு Veecharuva thookikittu
பாடியவர்: சின்னப் பொண்ணு Chinna Ponnu
இசை: எல்.வி. கணேசன் L.V. Ganesan
இயற்றியவர்: முத்து விஜயன் Muthu Vijayan
ஆல்பம்: தன்னானே தன்னானே thannaanae thananana
ஆண்டு: 2009

ஏ வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம் ஐயா
உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே ஏ ஏ ஏ ஏ ஏ
நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக