திங்கள், 24 மே, 2010

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

மனிதர்கள் வாழ்க்கை நடத்த இன்றியமையாத அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் போக்குவரத்து வசதியும் இடம் பெறுவது மிகவும் அவசியம். ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லப் பேருந்துகளும் ரயில் வண்டிகளும் உதவுவது போல ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று வர ஆட்டோரிக்ஷாக்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஆட்டோரிக்ஷாக்களில் செல்வதற்கான கட்டணம் தற்போது மிக அதிகமாக உள்ளது. இக்கட்டண உயர்வுக்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்காரர்களையே பொறுப்பாளியாக்குகின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விலைவாசியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியும் உயர்கையில் ஆட்டோ கட்டணமும் உயர்வது இயற்கையே என்பதையும், ஆட்டோக்காரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் குடும்பம் உண்டு அக்குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை பிற விலைவாசி உயர்வினால் ஏற்படுகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆட்டோக்கார்கள் தங்களுக்குள் கலந்து பேசி தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் பொதுமக்களையும் பெரிதும் பாத்க்காத வகையிலும் தகுந்த கட்டணத்தை முடிவு செய்கின்றனர். இவ்வாறு எடுக்கப் படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் அடாவடியாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி பயணிகளை வாட்டி வதைப்போரும் ஆட்டோக்காரர்களுள் உள்ளனர்.

சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களும் உளர், தீயோரும் உளர். அது போலவே ஆட்டோக்காரர்களிலும் இருப்பது இயல்பே. இதனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் பழி சொல்வது முறையல்ல என்பதை நாம் அறிவோமாக. நாம் பிறரை நண்பராகக் கருதிப் பழகினால் அத்தகைய நட்பு உணர்வுக்கு உரிய மரியாதையைப் பிறர் தருவது நிச்சயம். அவ்வாறே ஆட்டோக்காரர்களையும் நண்பர்களாக பாவித்தோமெனில் அவர்களும் நமக்கு நட்புறவுடன் சேவை செய்வர் என்பது உறுதி.

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

திரைப்படம்: பாட்ஷா
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1995

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அட அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

ஓய்..ஓய் ஓய்..ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா ஆ
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யயயய யயயய யயயயயய யயயய
யயயய யயயய யயயயயய யயயய
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா

ஆஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அட அசக்கு ஆ குமுக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
அசக்கு குமுக்கு அசக்கு குமுக்கு ஹாங்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக