சனி, 1 மே, 2010

ஒரு நாளும் உனை மறவாத

வாழ்க்கைப் போராட்டத்திலே வலிமையுள்ளவன் செல்வச்சீமானாகவும் வலிமையற்றவன் அச்சீமானிடம் கைகட்டி சேவகம் புரிபவனாகவும் இருப்பது உலகெங்கிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் வாக்கை முறையாகும். இத்தகைய சீமான்களை முதலாளி என்றும், ஐயா என்றும் எஜமான் என்றும் பல விதமாக மற்றவர் மரியாதையுடன் அழைப்பதும் வழக்கில் இருந்து வருகிறது. இத்தகைய எஜமானர்கள் பொதுவில் ஒவ்வொரு கிராமத்திலும் பிறரை விடவும் மிகவும் அதிகப்படியான விளை நிலங்களுக்குச் சொந்தக்காரராகவும் ஊரிலேயே அனைவரிலும் செல்வம் நிறைந்தவராகவும் இருப்பார். சில எஜமானர்கள் சுயநலாவாதிகளாகவும் தன்னை அண்டிப் பிழைப்பவர்களையே சுரண்டுவதுடன் அவர்களுக்குப் பெரும்பாலும் இன்னல்களையே பரிசாகத் தருபவராகவும் இருப்பதுண்டு. இதற்கு மாறாகப் பலர் பரோபகாரிகளாகவும் தன்னை அண்டியிருப்பவரைக் காக்கும் தயாள சிந்தையுள்ளவர்களாவும் இருப்பதும் உண்டு.

சாமான்யர்களுள் ஒருவனாக விளங்கும் ஆண்மகனைக் காதலிக்கும் பெண்ணைவிட இத்தகைய எஜமானர்களைக் காதலிக்கும் பெண்கள் தனது காதலனின் மேல் மிக்க மரியாதையும் அன்பும் கொண்டவளாக இருத்தல் இயல்பு.

இத்தகையதொரு கிராமச் சூழலை மிகவும் சுவாரஸ்யமான விதத்தில் படமாக்கி நம்க்கு எஜமான் திரைப்படத்தின் வடிவில் வழங்கியுள்ளனர் தமிழ்த் திரியுலக சிற்பிகள்.

ஒரு நாளும் உனை மறவாத

திரைப்படம்: எஜமான்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1993

கங்கணகணவென கிண்கிணி ம்ணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே இது சுகம் தரும் சுயம்வரமே

ஆஆஆ ஆஆஆ.

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா

சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு?

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா?
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்துதினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக