ஞாயிறு, 9 மே, 2010

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

பொதுவில் ஒரு மதத்தைச் சார்ந்தவர் அம்மதத்தினருள் சிறந்து விளங்கும் ஞானியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுதல் வழக்கம். ஒரு ஞானியாகவோ மஹானாகவோ ஒருவர் திகழ வேண்டுமெனில் அவர் குறிப்பிடத்தக்க அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்னும் கருத்து உலகெங்கிலுமுள்ள மாந்தரிடையே நிலவி வருகிறது. அதிசயமெனவும் அற்புதமெனவும் இவர்கள் கருதுவது பெரும்பாலும் இயற்கைக்கு மாறாக இயற்கை நியதியை மீறிச் செயல்படும் திறமையையே. நம் கண் முன்னே பரந்து விரிந்த இந்த உலகெங்கிலும் காணுமிடம் யாவும் நிரம்பிக் கிடக்கும் எண்ணற்ற அதிசயங்களை நாம் கண்டாலும் இவற்றை அதிசயங்கள் என ஒப்புக்கொள்ள நம் மனம் முன்வருவதில்லை. இதன் காரணம் அறியாமையயே ஆகும்.

நீ கண்ட அதிசயங்கள் யாவை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் கூறுவதாவது, தினம் தோறும் இணய வாழியே முன் பின் அறிமுகமில்லாத எண்ணற்ற அன்பர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு நான் எழுதும் பிதற்றல்களையும் படித்து, அவைகுறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எனது சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நிலையே என்பேன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் சக மனிதர் ஒருவர் துன்புறுவதை அறிகையில் நாமெல்லோரும் ஒருமித்த மனதோடு அவர் துன்பம் நீங்கி இன்புற வேண்டுமென மனமுருகப் பிரார்த்தனை செய்கின்றோம். நம்மில் அனேகர் அவ்வாறு துன்பப் படுவோர் துயர் துடைக்கத் தேவையான பொருளாதார உதவிகளையும் திரட்டித் தருகின்றனர். நாட்டு நிலை குறித்தும் இந்த உலகை எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு உலகம் உய்யப் பாடுபடும் பாதையிலும் நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். இவையாவும் குறிப்பிடத் தக்க அதிசயங்கேளேயன்றோ?

இது இவ்வாறிருக்க இளம் காதல் ஜோடி ஒன்று அதிசயம் பற்றி என்ன கூறுகிறது எனக் கேட்போமா?

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

திரைப்படம்: ஜீன்ஸ்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோஹன்
ஆண்டு: 1998

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் ஒரு
வாசமுள்ள பூவைப் பார் பூவாசம் அதிசயமே
அலை கடல் தந்த மேகத்தில் சிறு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா

பெண்பாற் கொண்ட சிறு விரல்கள்
இரு கால் கொண்டு நடமாடும்
நீ தானென் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் ஒரு
வாய் பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கன்னங்கள்
வாய் துடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக