வெள்ளி, 21 மே, 2010

நிலவே நீ சாட்சி

நம்மைப் படைத்து நாம் இன்புற்று வாழ இவ்வுஉலகினைப் படைத்த இறைவன் இவ்வுலகுக்கு ஒளியூட்டவென்றே செங்கதிரையும் தண்மதியையும் படைத்தானோ? உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாத அனைத்தையும் அளிக்கும் சூரியனைக் காட்டிலும் இரவில் மென்மையான ஒளியை வழங்கி மனங்குளிரச் செய்யும் நிலவையே மனிதன் பெரும்பாலும் போற்றித் துதித்து வருகிறான். அத்துடன் காதல் முதலாகத் தான் இவ்வுலக வாழ்வில் புரியும் அனைத்துச் செயல்களுக்கும் நிலவையே சாட்சியாக வைக்கிறான்.

மனித வாழ்வில் உண்டாகும் இன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் துன்பங்களை மறந்து ஆறுதல் பெறவும் பெரும்பாலும் நிலவையே துணைக்கு அழைக்கிறான் மனிதன். நிலவுக்கு நிஜமாக அத்துணை சக்தியுண்டா? அல்லது இத்தகைய உணர்வுகள் யாவும் நிலவின் அழகைப் பார்த்து, அதன் மங்கிய ஒளியால் மயங்கி அதன்பால் ஈர்க்கப் பட்ட மனம் உணரும் மாயையா?

நிலவே நீ சாட்சி

திரைப்படம்: நிலவே நீ சாட்சி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1970

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
நிலவே நீ சாட்சி......
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

அலையும் முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?
அலையும் முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?

வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன?

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக