சனி, 8 மே, 2010

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருப்பினும் அவர்கள் அனவருள்ளும் தான் காதலிக்கும் பெண்ணே ஒரு காதலனுக்குச் சிறந்த அழகியாகத் தெரிவாள். அதே போல் அப்பெண்ணுக்கும் பிற ஆடவர் அனவருள்ளும் தன் காதலனே மிகவும் அதிக அழகுள்ளவனாகத் தெரிவான். இது இயற்கையின் நியதி. தன் காதலியை விடவும் வேறு ஒரு பெண் அதிக அழகாக இருப்பதாக ஒருவன் எண்ணுவானாகில் அவனது காதல் உண்மைக் காதலல்ல என்பது திண்ணம்.

காதல் தெய்வீகமானது. கண்கள் வழியே கருத்தினிற் கலந்து உயிருடன் ஒருமிப்பது உண்மைக் காதல். இத்தகைய காதல் கொண்ட ஆண்மகனது உள்ளம் தனது காதலியின் அழகை வர்ணிக்கையிலும் அதிலொரு தெய்வீகத் தன்மையை உணர்வது சிறப்பு.

ஒரு பெண் நாணம் காரணமாகத் தன் காதலைத் தன் காதலனிடமும் வாய்விட்டுத் தெரிவிக்க மாட்டாள். அதற்கு மாறாகத் தன் உள்ளத்திலுள்ள காதல் உணர்வுகள் அனைத்தையும் தனது கண்களாலேயே அவனுக்கு உணர்த்தி விடுவாள். அந்தக் கண்ஜாடை கண்ட ஆண் அதற்கு மேல் உறங்குவதேது.

உண்மைக் காதலின்றி ஆண்களை அலைக்கழிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட சில மாதர்களும் இருக்கிறார்கள். அவர்களது கண் ஜாடை உண்மைக் காதல் கொண்ட பெண்ணின் கண் ஜாடையை விட ஆயிரம் மடங்கு மேலான மயக்கத்தை ஆண்களுக்கு அளிக்கவல்லது. அத்தகைய ஒரு பெண்ணின் கண் பேசும் மொழியைக் காதல் என்று நம்பித் தூக்கமில்லாமல் அவள் பின்னே அலைந்து அவமானப் படும் ஆண்களும் நிறைய உளர்.

ஆதலால் இளைஞர்களே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் உள்ளங்களை உங்கள் உண்மைக் காதலிக்காக அல்லது மனைவிக்காகவென்று இருக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை!

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக