சனி, 28 நவம்பர், 2009

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

மாலை நேரம் வந்தாலே காதல் கொண்ட உள்ளங்களுக்கு மயக்கம் வரும் போலும்.
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான் கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லை மலர்
மென் மாலை தோளசைய மெல்ல நட்ந்தததே
புன்மாலை அந்திப் பொழுது

எனும் நளவெண்பாப் பாடலில் புகழேந்திப் புலவர் மாலை நேரம் வந்தால் மன்மதனின் கணைகள் பாய்ந்து காதல் கொண்ட மாந்தர்க்கு உடலில் விரகதாபத்தால் ஒருவித மயக்கம் உண்டாவதாகக் கூறுகிறார்.

அம்மயக்க நிலை தீர்ந்து மனம் மகிழ்ச்சி கொள்ள ஒருவரை ஒரவர் சந்தித்து, ஒருவரோடு ஒருவர் கருத்தொருமித்து, காதல் உணர்வைப் பகிர்ந்து கொண்டு உறவாடுதல் மாலை நேரத்தில் இயலாதே, தனிமை கிடைக்காதல்லவா? அவ்வாறு தனிமை கிடைத்தாலும் இரவு வந்து வானில் நிலவு வந்தாலல்லவோ காதலை முழுமையாக அனுபவிக்க இயலும்.

காதல் உணர்வையும், பக்தியையும் வெளிப்படுத்த இசை பெரிதும் உதவுகிறது. பக்தியை வெளிப்படுத்துகையில் உள்ளம் உருகுகின்றது. காதலை வெளியிடுகையில் மனம் மயங்குகின்றது. இரண்டில் காதலே தன்னை மறந்த இன்ப நிலையைப் பெரிதும் ஏற்படுத்த வல்லது. அத்தகைய காதல் கீதத்தை இணைந்து பாடும் ஜோடியின் குரல்களும் மயக்கம் தருமளவுக்கு இனிமையாய் இருப்பின் இசை என்ற இன்ப வெள்ளத்துக்குப் பஞ்சமேது?

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

படம்: குலேபகாவலி
பாடியோர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆஆ... ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே
போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

"உயிர்களிடத்திலன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்" என்று மஹாகவி பாரதியார் சொன்ன கருத்தும், "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்ன கருத்தும் ஒன்றே.
இதற்கு எடுத்துக்காட்டாய் நம்மிடையே நம்மில் ஒருவராய் வாழ்ந்து, உலக மக்கள் அனைவருக்கும் அன்பு வழியைக் காட்டி, உண்மையின் பெருமையை உணர்ததி, இறவாப் புகழ் பெற்ற அண்ணல் காந்தி மகான் பிறந்த நாள் நாளை. அவரிடம் உலகம் மயங்கியது உண்மையே அல்லவா? உலகனைத்தும் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டதும் உண்மையன்றோ?

உண்மையையே பேசுபவன் நாவில் தெய்வம் நின்றுறையும், அவன் சொன்ன சொல் பலிதமாகும், அவன் எல்லாம் வல்ல இறைவனுக்கு ஈடான சக்தியைப் பெறுகிறான் என்பதை காந்தி மகான் வாழ்விலிருந்து நாம் அறிகிறோம். நாம் இங்கே வருகையில் கொண்டு வந்த பொருள் ஏதும் இல்லை. இவ்வுலகை விட்டுச் செல்கையில் கொண்டு போவதும் ஏதுமில்லை. வாழ்நாளெல்லாம் பொய்யுரைத்துப் பொருளைத் தேடியே வாழ்வை வீணாக்கி மடிந்திடாமல் உண்மையாய் உழைத்து, நமக்கு நியாயமான வழியில் கிடைக்கும் பொருளை மட்டும் வைத்து நல்வாழ்வு வாழ்ந்து உண்மையின் சக்தியை உணர முயல்வோமே.

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

படம்: புது வாழ்வு
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1957

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
உண்மை ஒன்றே பேசும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
இன்னபயம் தனை மறவா இயல்பதும் வேண்டும்
இன்னபயம் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே

மனித உரிமை பற்றி வாழ்கிழியப் பேசும் மனிதர்களாலேயே மனித உரிமை மீறப்படுவதும், நீதியும் நேர்மையும் நிலைத்திடப் பாடுபடுவோமென மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வருவோராலேயே நீதிமன்றங்கள் முடக்கப் பட்டு, சாமான்யர்களுக்கு நீதி மறுக்கப் படுவதும், விலைவாசியைக் குறைப்போம் என்று மக்களுக்குப் பொய்யான வாக்களித்து மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களாலேயே விலைவாசி உயர்த்தப் படுவதும், இன்னும் இவை போன்ற எண்ணரும் பாபச் செயல்கள் உலகெங்கும் மலிந்து கிடக்கும் மிகவும் சோதனையான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
கலைவாணர் அந்தக் காலத்தில் பாடிய பாடலை மாற்றி,

மனுஷனை மனுஷன் மதிச்சு நடந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் நிதமும்
மாடாய் உழைப்பவன் ஓடாய்த் தேய்வது இந்தக் காலம்
உழைச்சவன் வாழ்வில் உயர்வை அடைந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் உழைப்பவன்
பிழைப்பைக் கெடுத்துத் தெருவில் நிறுத்துவது இந்தக் காலம்

நீதி நேர்மை நியாயம் இருந்தது அந்தக் காலம் அது அந்தக்காலம்
சாதியின் பெயரால் நீதியை வளைப்பது இந்தக் காலம்
நேர்வழி நடந்தது அந்தக் காலம் நேரெதிரானது இந்தக் காலம்
சீர் பெற வாழ்ந்தது அந்தக் காலம் சீ யென்று தாழ்ந்தது இந்தக் காலம்

என்றே பாடத் தோன்றுகிறது.

பல காலங்களாகப் புலவர் பெருமக்கள் பலரும் மனித சமுதாயத்தில் நிகழும் குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தவென்று எழுதிய பாடல்கள் யாவும் பெரும்பாலும் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களாலேயே தங்களை உத்தமர்கள் எனப் பறைசாற்றிக் கொண்டு திரியவே பயன்பட்டு வருவது மிகவும் வேதனை தருகிறது.

இத்தகைய குறைபாடுகள் தாற்காலிகமானவையே, புலவர்கள் எழுதி வைத்த கருத்துக்கள் என்றும் உயிருடன் விளங்கி, குறித்த காலத்தில் கேட்க வேண்டிய செவிகளுக்குக் கேட்டு, நற்பயன் விளைவது உறுதி என நம்புவோம்.

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே

படம்: தாய்க்குப் பின் தாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1956

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தத ச்ச்ச் தஹாய்

மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
தகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தஹாய் ஹா ச்ச்ச் என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தஹாய் ஹா ச்ச் த

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே ஒண்ணப்
புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

ஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ.

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா

ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைகளாக ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்கள் அனைவரையும் நாட்டை விட்டு விரட்டி சுதந்திர இந்தியாவை மஹாத்மா காந்தி உள்ளிட்ட நம் முன்னனோர்களான பல தன்னிகரில்லாத் தலைவர்கள் உருவாக்கிய பின்னர் சில காலம் நாடு சுபிட்சமடையும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தது.
மனிதர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த இத்தலைவர்கள் மரங்களுக்கும் சுதந்திரம் பெற்றுத் தந்தனர். எவ்வாறு என்று கலைவாணர் இத்தெருக்கூத்தில் விளக்குகிறார்.

அவ்வாறு அரும்பாடு பட்டு அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரம் இன்று இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. இத்தெருக்கூத்தில் கலைவாணர் குழுவினர் எடுத்துரைப்பவற்றை இன்றைய நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க உண்மை விளங்கும்.

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா

படம்: நல்ல தம்பி
இயற்றியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
ஆண்டு: 1949

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி அழகான ஜதையோடு வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தானையா

சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா

மோட்டாவை விட்டிறங்கி வந்தானையா
முன்குடுமி திருத்தி கிட்டு வந்தானையா
ராட்டினம் போல் சுழன்று வந்தானையா நம்ம
ராஜ்ஜியத்தை சுத்திப் பாத்து வந்தானையா

தச்சோம் திரிச்சோம் ஜரிகை செம்பட்டு வெம்பட்டு கிளிஞ்சது போ

ஹங், ஐயா கோமாளியாரே

என்ன ஏமாளியாரே

உங்கள ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுங்க.

ஒண்ணென்ன ஒம்பது கேளும் பதில் சொல்றேன்.

அந்தக் காலத்துலே...

நிறுத்தும், அந்தக் கால சங்கதி நமக்கு வேண்டாம், இந்தக் காலத்தைப் பத்திக் கேளும்.

சரி, இந்தக் காலத்துல தான் எங்க பாத்தாலும் பொய்யும் பொரட்டும்,

நிறுத்தும், பொய்யு்ம் பொரட்டும் நீங்க சொன்ன அந்தக் காலத்தில. இந்தக் காலம் நீதியான காலமையா நேர்மையான காலம். இன்னுஞ் சொல்றேன் கேளும்.

அன்னியர்கள் நமையாண்டதந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வதிந்தக் காலம்
பேசுதற்கும் உரிமையற்ற தந்தக் காலம்
பிரச்சாரப் பெருமையுற்ற திந்தக் காலம்

மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்
அது அந்தக் காலம்
மடமை நீங்கி நமதுடைமை கோருவது இந்தக் காலம்
நெனெச்சதை எல்லாம் எழுதி வைத்தது அந்தக் காலம்
அது அந்தக் காலம் எதையும்
நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்ச தந்தக் காலம்
அது அந்தக் காலம் மழையைப்
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்
இழிகுலமென்றே இனத்தை வெறுத்ததந்தக் காலம்
அது அந்தக் காலம் மக்களை
இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவதிந்தக் காலம்

த்ரோபதை தனை துகிலை உரிஞ்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம்

சாத்திரம் படிப்பது அந்தக் காலம் சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பாப்பது? அந்தக் காலம் குணத்தைப் பாப்பது? இந்தக் காலம்
பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம்
கத்தி தீட்டுவது? அந்தக் காலம் புத்தி தீட்டுவது? இந்தக் காலம்

பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் - வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம் வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம்

பலே பலே, ஐயா கெட்டிக்காரக் கோமாளியாரே, இன்னைக்கு நடக்கப் போகும் இந்திரசபா எனும் கூத்திலே ஆசீர்வாதம் தாங்கும்படியா உம்மைக் கேட்டுக்கொள்கிறேன்.

நமஸ்காரம்

ஆசீர்வாதம்

ஆசி எனக்கு, வாதம் உமக்கு.

ராஜ ராஜ மஹாராஜதா பைரவின்னு இங்கே வந்தேனே ஏ..ஏ..ஏ..ஏ...ஏ..
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர
ஆவலாலே ஆயிரங்கண் அணிந்த ரூப சுந்தர
ஆலாதி அமுதமுண்டோ ஐராதி தன்னைக் கொண்டோ?
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர

ஐயா, கேளுமையா இந்திர பூபதியே, நாரதர் சபையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

சந்தோஷம், நாரதரே நமஸ்கரிக்கிறேன்.

கல்யாண், கல்யாண்.

தாங்கள் இந்த சபைக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

ஆஹா, அதை என்னவென்று சொல்லுவேன்? பூலோகத்தில் நடக்கும் புதுமைகளைக் கண்டு என் மனம் புளகாங்கிதமடைந்தது.

அப்படி என்ன புதுமை கண்டீர்?

அதை சபையில் பவிஸ்தாரமாகச் சொல்லுவதற்கு பூலோகத்திலிருந்து ஒரு நரன், ஒரு நரை இருவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதோ பாருங்கள்.

ஏ கோமாளி மச்சான்

என்ன?

இது எந்த இடங்கறேன்?

இது அந்திரத்திலே இருக்கும் இந்திரலோகம், பளா பளா

ஆத்தாடி, இந்த மனுஷன் என்னாங்கறேன் இப்படி இருக்காரு?

மனுசன் இல்லேடியம்மா, இவங்க எல்லாம் தேவரு, அவரு தேவருக்கு அரசரு, இந்திரன்.

ஓஹோ, பொட்டி மகன் இந்திரரு இவுரு தானா? அகலிகை மேல ஆசைப்பட்டு, ஒடம்பெல்லாம்..

சட், யார் நீங்கள்?

பட், மனுஷன்

எந்த ஊர்?

தருமம் தழைத்தோங்கும் தமிழ் நாடு, பளா பளா.

எங்கள் நாட்டை விடப் பெரிதா? மளா மளா.

பெரிதல்ல, பெருமை வாய்ந்தது.

எந்த வகையில்?

சொல்றேன் கேளுங்கோ.

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
முதல் முதலாக நல்லவை யாவும்
முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பது தமிழ்நாடு

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

பாட்டால் உணர்த்தி ஊட்டும் கவி பாரதி சேர் தமிழ்நாடு
நாட்டு மக்கள் முன்னேற்றம் தனை நாடியே கவிதை பாடிவைத்த தமிழ்

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

உலகம் வியக்க சுதேச கப்பல் ஓட்டியதும் தமிழ் நாடு
திலகமெனப் புகழ் ஓங்கும் எங்கள் சிதம்பரம் பிள்ளை செயல்புரிந்த தமிழ்

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம் தமிழ்நாடு
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

கள்ளை ஒழித்து கண்ணியம் பெற்றது எங்கள் நாடு.

பூலோகத்தில், மதுவை ஒழித்து விட்டார்களா? ஆச்சர்யம் ஆச்சர்யம், நரனே, முன்னொரு சமயம் அமெரிக்கா என்னும் நாட்டில் இந்த மதுவிலக்கு செய்து ஃபெய்லியர் ஆகிவிடவில்லையா?

ஃபெய்லியர், அப்படி என்றால்?

தோல்வி.

தோல்வி, எங்கள் நாடிலே அப்படி நடக்காது. ஏனென்றால் குடிப்பது பாபம் என்று நினைக்கும் நாடு. குடித்தேன் என்று சொல்ல வெட்கப் படும் நாடு. ஆகையினாலே நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம், நிச்சயம், நிச்சயம்.

இதை நான் நம்ப முடியாது, பெண்ணே, உண்மையில் உங்கள் நாட்டில் மதுவை ஒழித்து விட்டார்களா? சொல்.

குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே
குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே

தாலிக் கயிறு தனியா இருக்கும் தங்கமிருக்காது அதிலே தங்கமிருக்காது
தண்ணி குடிக்க தகரக் கொவள செம்புமிருக்காது வீட்டிலே செம்புமிருக்காது
பாலு வாங்க குழந்த பசிக்குப் பணமிருக்காது கையிலே பணமிருக்காது
பாழுங்கள்ளக் குடிப்பது மட்டும் நாளுந்தப்பாது எந்த நாளுந்தப்பாது
கூலிக் காசில் சோளம் வாங்கிக் கூழுக் காச்ச வச்சிருப்பா
ஆளதந்தா அம்பள தான் அதையும் வித்துக் குடிப்பான்
கடைக்குப் போவான் கள்ளக் குடிப்பான் காரியமில்லாம சண்டைக்குப் போவான்
வடைய ரண்டை வாங்கிக்குவான் வழி நெடுக பேசிக்குவான்
வந்து கதவைத் தட்டுவான் வாயிலே வந்ததைத் திட்டுவான்
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சகக் காரி என்றுரைப்பான் அவன்
வாரிசுக்காக சிசுவைத் தாங்கும் வயித்திலெ எட்டி மிதிப்பான்
அப்பப்பா, இந்தக் கள்ளுக் குடிய நம்ம
நாட்ட விட்டு ஒழிச்ச அந்த நல்ல மனுஷன் காலுக்கு
கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு.
(கை தட்டல்)
பெண்ணே, மது ஒழிந்தது பெண்களுக்குத் தான் மிகவும் நன்மை என்று உன்னால் தெரிந்து கொண்டேன்.

ம்ம்ம்ம் ஆண்களுக்கும் நல்லது தான்.

அது எப்படி?

மது ஒழிவதற்கு முன்னாலே நான் பாதி வேளை மிருகமாகத் தானே இருந்தேன்.

மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
பனமரப் பாலு பட்டை பிராந்தி பக்கம் வந்தால் எடுக்குறேன் வாந்தி
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்

இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே அக்டோபர் மாதம்
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே என் கண்ணுக்குன்னை
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே என் கண்ணுக்குன்னே
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே

சுருண்டு சுருண்டுதான் சும்மாப் படுப்பேன்
சுதிய விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன்
வரண்ட காரவடை வாத்து முட்டை கரு
வாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான்

மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்

மது, அருந்திய உடனே ஞாபகம் வருவது மாது. நாரதரே, நான் கூட அகலிகை வீட்டுக்குச் சென்று சில தவறுகள் செய்ததற்குக் காரணமாக இருந்தது இந்த மது தான். நரனே இதற்கு என்ன செய்வது?

குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்

ஐயையோ! என்னாங்க இது? குடிச்சுப் பழகணும்னு சொல்றீங்களே?

ஆமாம் பழகணும், இல்லாமப் போன மறக்க முடியாது. அதாவது, இந்தக் குடியை ஒழிச்சாங்களே, அவங்க மனசு சந்தோஷப் படணும்னா, எல்லோரும் ஒத்துமையா

குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும் பாலைக் குடிச்சுப் பழகனும்

பாலு வாங்கப் பணமில்லேன்னா டீயைக் குடிச்சுக்கோ
டீயும் கெடுதலுன்னு தெரிஞ்சா மோரைக் குடிச்சுக்கோ
மோரு நமக்குக் கெடைக்கல்லே
நீராகாரம் இருக்கவே இருக்கு குடிச்சுப் பழகணும் குடிச்சுப் பழகணும்

காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்
காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்

வாஸ்தவம் தான், ஒழித்து விட வேண்டிய விஷயம் தான். நாரதரே, இன்று முதல் நம் தேவலோகத்தில் யாரும் மது அருந்தக் கூடாதென்று சொல்லும், மீறி அருந்துவார்களேயானால், அவர்களை நரகக் குழியில் கொண்டு போய்த் தள்ளிவிடும் படி நான் கட்டளையிட்டதாகச் சொல்லும். நரனே, நீ கொஞ்ச காலம் இங்கே தங்கியிருந்து, சொர்க்கலோகத்திற்கும், நரகலோகத்துக்கும் சென்று இந்த மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வாயாக.

ஐயையோ, என் மச்சான் உன்னை நரகலோகத்துக்குப் போகச் சொல்றாரே இவரு.

ஹஹஹஹ, பிரச்சாரத்துக்கு எங்கே போனா தான் என்ன, பெண்ணே, நீ சொர்க்க லோகத்துக்குப் போ, ஏன்னா அங்கே கொஞ்ச ஆளுக தான் இருக்கும், நரகத்துல ரொம்பப் பேர் இருப்பாங்க, நான் அங்கே போய் பிரச்சாரம் பண்ணிட்டு வரேன்.

மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம் மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம்.

விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல்
விடுதலை விடுதலை விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை

ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் விடுதலை பனை மரத்துக்கும் விடுதலை,
தென்னை மரத்துக்கும் விடுதலை தென்னை மரத்துக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் ஈச்ச மரத்துக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை.

இங்கு உண்ணடா செல்வமே

தான் பெற்ற பிள்ளைக்கு வயிறார உணவளித்து, உறங்க வைத்து, உறங்கி எழுந்த பின்னர் நீராட்டி, உடை மாற்றி, தலை சீவி, சிங்காரித்து, அழகு பார்த்து, அப்பிள்ளை தன் கண் முன்னே பெரியவனாக வளர்வதைக் கண்டு மகிழ்வதே ஒரு தாய்க்குக் கிட்டும் பெரும் பேறு. பிறந்த சிறிது காலத்திற்கு அப்பிள்ளை தாய்பால் ஒன்றையே உண்ணும், சில நாட்கள் கழித்து தாய்ப்பாலுடன் இடையிடையே சங்கினால் பசும் பாலையும் அப்பிள்ளைக்குப் புகட்டி வளர்ப்பது வழக்கம்.
பசி வந்ததும் அப்பிள்ளை தாயின் முகம் நோக்கி ங்கு..ங்கு.. என்று சொல்லும் மழலையைக் கேட்பது பேரின்பம். தாய்ப்பாலைத் தவிர சங்கிலே பால் கொடுத்தால் குடிக்க மறுத்து அடம் பிடிக்கும் பிள்ளைகளும் உண்டு. அத்தகைய பிள்ளைக்குப் பல விதமான வேடிக்கைகள் காட்டி, கொஞ்சு மொழி பேசி, அதன் மனதை மாற்றி சங்கிலே பாலுண்ண வைப்பது ஒரு தாயின் தனித் திறமையாகும்.

இங்கு ஒரு தாய் அவ்வாறு தன் பிள்ளையைப் பாலருந்தச் செய்யப் பாடுகிறாள் ஒரு கொஞ்சு தமிழ்ப் பாட்டு.

இங்கு உண்ணடா செல்வமே

படம்: கார்த்திகை தீபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். சுதர்சனன்
எல்.ஆர். ஈஸ்வரி

இங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே
இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே

தங்க வீணையே தமிழின் ஓசையே
தவழும் பொதிகையின் தென்றலே
தாயின் மனநிலை தெரிந்த பின்னும்
தாமதம் செய்யாதே கண்ணே

இங்கு இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே

செங்கரும்பின் வாய் திறந்து
சிதறும் மழலை தேன் சுரந்து
அங்கத் தாமரை வாடுமுன்னே
அமுதம் உண்ணடா என்தன் கண்ணே

இங்கு இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே

வெண்ணிலாவை பாடச் சொல்வேன்
வீசும் தென்றலை ஆடச் செய்வேன்
கண்ணே முன்னவர் வீரம் வளர்த்த
கதைகள் யாவையும் உனக்குச் சொல்வேன்

இங்கு இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே

வெள்ளி, 27 நவம்பர், 2009

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்

“இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை”
என்பது வள்ளுவன் வாக்கு. இதன் பொருளாவது, மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

இதே கருத்தை

இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை
இல்லாளும் இல்லாளேயாமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றமுரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்ததூராய் விடும்

என விளக்கமாக எடுத்துரைத்து,

இல்லறமல்லது நல்லறமன்று என ஔவை மூதாட்டி அறிவுறுத்தினாள். அதற்கொப்பவே முற்காலத்தி்ல் முனிவர்களும் பிற இறையடியார்களும் இல்லறத்தை மேற்கொண்டு

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று

எனும் குறள் கூறும் நெறியில் வாழ்ந்து இறைவனை அறியும் பேறு பெற்றனர் என்பதை வரலாறு விளக்குகின்றது.

ஒருவனுக்கு மனைவியாய் வாய்க்கும் பெண் நற்பண்புகள் நிறையப் பெற்றவளாக இருப்பின் அவள் புகுந்த வீடு ஒரு ஆலயமாக விளங்குவது உறுதி. அப்பெண் அவ்வாலயத்தில் தெய்வமாக விளங்கி சகல செல்வங்களையும் பெற்றுத் தரும் சக்தியைப் பெறுகிறாள். அத்தகைய குணவதியான பெண்ணை மனைவியாக அடைந்தவன் வாழ்வில் பெறும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்

படம்: இருளும் ஒளியும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

திருமகள் தேடி வந்தாள் ஆ.ஆஆஆ
என்தன் இதயத்தில் குடி புகுந்தாள் ஆஆ ஆஆஆ
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ.
திருமகள் தேடி வந்தாள்

ஆஆ..... ஆஆஆ
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்

ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ

திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருமகள் தேடி வந்தாள்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்

சென்னை என்றதுமே தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலில் மனதில் வருவது சென்னை செந்தமிழ் மொழியே ஆகும். தமிழ்த் திரையுலகில் இந்த சென்னை செந்தமிழை சிறப்பாகக் கையாண்ட பிரபல நடிகர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இது நகைச்சுவை நடிகர்கள் வாயிலாக வெளிப்படுகையில் மிகவும் ரசிக்கத்தக்கதாகும். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஜே.பி. சந்திரபாபு, நாகேஷ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் சென்னை செந்தமிழைத் திறம்படப் பேசி நடித்திருந்தாலும், இவர்கள் அனைவரையும் மிஞ்சும் படியாக அசத்தியவர்கள் துக்ளக் சோ ராமசாமி அவர்களும் மனோரமா ஆச்சி அவர்களும் ஆவர். இவர்கள் சென்னை செந்தமிழில் பேசி இணைந்து நடித்து 1968ஆம் ஆண்டில் வெளியான பொம்மலாட்டம் திரைப்படம் சக்கைப் போடு போட்டது.
இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாவன, ஜாம்பஜார் ஜக்குவாக நடிக்கும் சோ, கதாநாயகன் ஜெய் சங்கருக்கு கதாநாயகி ஜெயலலிதாவிடம் தன் காதலை சொல்லக் கற்றுக் கொடுக்க, அதன் படியே ஜெய்சங்கரும் ஜெயலலிதாவிடம் சென்று ஜக்கு சென்னை செந்தமிழில் உரைத்த காதல் மொழிகளை அப்படியே ஒப்பிபதும், சோவின் காதலியாக வரும் மனோரமா முதன்முதலில் தன் சொந்தக் குரலில் பாடிய இப் பாடலும் ஆகும்.

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்

படம்: பொம்மலாட்டம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: மனோரமா

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு அட
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு அட
மச்சான் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு

வாவா மச்சான் வா மச்சான் வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போகல்லாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு