ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சங்கீத சௌபாக்யமே

இப்பிறவி நமக்கு இறைவன் கொடுத்த வரம் ஆகும். எனவே நாம் இவ்வாழ்க்கையைப் பயனுள்ளாதாகச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு முதலில் நாம் நம் வாழ்வை இனிதாக அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதற்கண் மனதில் அமைதியும் சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்குமாறு நாம் நம் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும். வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களில் உழன்று மனம் பேதலிக்காமல் தெளிந்த மனநிலையில் திகழ வேண்டும். இதற்கு மிகவும் உறுதுணையாக விளங்குவது இசையாகும். இசை இவ்வுலகில் எங்கணும் நிறைந்திருக்கிறது. மஹாகவி பாரதியார் முதலான புலவர்கள் இசையில் மூழ்கித் திளைத்து இன்ப வாழ்வு வாழக் கற்றுக்கொண்டதனாலேயே அவர்களால் இவ்வுலகம் உய்யும் வழியுரைக்க இயன்றதென்பது உண்மை.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,

நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்

என்ற பாரதியின் வரிகள் பாரதியாரின் இசையார்வத்தையும் ஞானத்தையும் விளக்குகின்றது.

இசைக்கருவிகளில் தலையாயது வீணையாகும். அதனாலேயே அதனைக் கலைமகள் கையிலிருப்பதாகக் கொண்டு போற்றுகிறோம். வீணையின் இசை கல்மனம் கொண்டோரையும் உருக வைக்கும் தன்மையதாகும். வீணை மீட்டிப் பாடுவதில் இலங்கேஸ்வரன இராவணன் வல்லவனாய்த் திகழ்ந்தான் என்பது பிரசித்தி. அவன் வீணை மீட்டிப் பாடும் போட்டியில் அகத்திய முனிவரிடம் தோற்ற பின்னர் வீணையிசைப்பதில் ஆர்வமற்று இருந்ததாக ஒரு கருத்தும் நிலவுகின்றது. இராம காவியத்தை முழுமையாகப் படம் பிடித்துத் தமிழ் மக்கள் யாவரும் கண்டு மகிழும் வண்ணம் சிறப்புற அமைந்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் ஒரு காட்சி, அதில் இராவணனில் அரசவையில் வீணை மீட்டிப் பாட அனுமதி கேட்டு ஒரு இசைக்கலைஞன் வருகிறான். அவன் பாட்டு மிக இனிமையாக இருந்த போதிலும் வீணை மீட்டுவதில் போதிய பயிற்சியின்மையால் அவன் கச்சேரி களைகட்டுவதில்லை. அதைத் தொடர்ந்து இராவணன் வீணை மீட்டிப் பாட வேண்டுமென அவனது சகோதரர்களும், அமைச்சர்களும் அவனது பட்டத்து ராணி மண்டோதரியும் வேண்டுகின்றனர். இராவணனாக வேடமேற்று பழம் பெரும் நடிகர் டி.கே. பகவதி நடித்துள்ளார். இராவணன் பாடுவதாக அமைந்த அப்பாடலை இன்றைய பாடலாக சமர்ப்பிக்கிறேன்.


சங்கீத சௌபாக்யமே
சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே
சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே
சங்கீத சௌபாக்யமே 

மங்காத ஸ்வர ஞானம் ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஸ் ஸ்நிஸ் ரிரிஸ் ஸ்நிஸ் ரிஸ்நிதபத
நீஸ்தாநி மாதகாமகரிஸ் ககமமததநிநி ஸ்ஸ்ரிமக்

மங்காத ஸுர ஞானம் மாறாத லய ஞானம்

தீம் தகிட தகதிமி ததிமி தகிட
தாங்கிடதரிகிட தாங்கிடதரிகிட தா தாங்கிடதக தரிகிடதக

மங்காத ஸுர ஞானம் மாறாத லய ஞானம்
மாசின்றி உறவாடும் ஆனந்த மயமான
சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே
சங்கீத சௌபாக்யமே 

காலங்களைக் குறித்துப் பாடும் ராகங்களைக் கேட்கப் பிரியப் படுகிறோம். தயவு செய்து பதிலும் இசை ரூபமாகவே வர விரும்புகிறோம். காலையில் பாடும் ராகம் என்னவோ?

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
பபக பதத பபக பதாப கபததப கதபத ஸ்ரிகபஸ்நித பூபாளம்

உச்சி வேளை ராகம்?

மபததபம ரிகமரீஸ்நித பாமதாப நிநிதப ரிகமமரிரி ஸநி சாரங்கா

மாலையில் பாடும் ராகம்?

ஸ்ஸ் நித நிநிதம கா... கமதம நிநிதம ஸ்ஸ்நித வசந்தா

குணங்களைக் குறிக்கும் ராகங்களைக் கேட்க விரும்புகிறோம். இரக்கம் பற்றிய ராகம் என்னவோ?

பாஸ்நிபமகம பதநிஸ் தபமக ரிகமக ரிபமக நீலாம்பரி

மகிழ்ச்சிக்குரிய ராகம்?

ஸ்கம பநிப மகபஸ்நிஸ்ரிநிஸ் ஸ்ஸ்ரிநி நிநிதப பபநிம பமகம தன்யாசி

யுத்த ராகம்?

ஸ்பமப மகமபம கமபம கமகஸ் தாஸ்நிஸ்
ஸ்ஸ்ஸ்ப்ப்ப் ஸ்ஸ்ஸ்க்ஸ்த மஸ்ஸ்நி பமகஸ் கம்பீரநாட்டி

பாக்களை இயற்றப் பயன்படும் ராகங்களைக் கேட்கப் பிரியப் படுகிறோம் அப்பா. வெண்பா பாடுவது எந்த ராகத்தில் இருக்க வேண்டும்?

ஸ்ஸ்நிதபமக ரிஸ்ரிக் மபதநி சங்கராபரணம்

அகவற்பாடா?

தாநித மகரிநி தநிரிக மதநிரி தோடி

யாழிசைக்கு?

மாநிதாநி மாத பாம கரிநிரி கல்யாணி

ஸ்வாமி, கயிலை நாதனை கானத்தால் கவர்ந்த ராகம்?

கா கா கமககரி ரிகரிரிஸ் ரிகரிஸ்நித பதஸ்
ரிகரிரி ஸ்ரிஸ்நி ஸ்நிபாத பதஸ்
மகரிஸ் பமகரி தபமக நிநிதப ஸ்நிதப மகபதஸ் காம்போதி
கமகம ரிகரிக ஸ்ரிஸ்ரி ஸ்ரிஸ்நிதப காம்போதி
பதநிஸ்நிதபம காம்போதி தபமக பமகரி காம்போதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக