வெள்ளி, 22 ஜூலை, 2011

பொறுமை என்னும் நகையணிந்து

நமது பாரத நாட்டில் குடும்ப வாழ்வின் சிறப்பை மக்கள் அனைவரும் உணர்ந்து அதற்குரிய நெறிமுறைகளைக் கடைபிடித்து வாழ்வதாலேயே பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எழுந்தபோதும் அனைத்தையும் மீறி நாட்டில் என்றும் அமைதி நிலவி வருகின்றது. குடும்ப வாழ்வின் சிறப்பினை நமக்கெல்லாம் எடுத்துரைத்து அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்தி வரும் ஆன்றோர் பெருமக்களுள் தலையாயவர் ஔவைப் பிராட்டியாவார். ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், திருவள்ளுவர் முதலானோர் ஓரே காலத்தில் வாழ்ந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கேற்றாற்போலவே அவர்களுக்குள் இடையிடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களும் கவிதைப் போர்களும் விரிவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வரலாறுகள் எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்த ஆராய்ச்சியைத் தவிர்த்து இவற்றில் காணப்படும் கருத்துக்களூம் அவை வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படும் என ஆராய்ந்தோமெனில் மிகவும் பயனுண்டு என்பதில் ஐயமில்லை.

ஔவையார் கதையை மிகவும் விரிவாகவும் விஸ்தாரமாகவும் பெரும்பொருட் செலவில் 1953ஆம் வருடம் அந்நாளைய தமிழ்த்திரையுலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் ஜெமினி திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் தயாரித்து வெளீயிட்டார். இத்திரைப்படம் தற்பொழுதும் பல தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியே அவ்வப்பொழுது திரையிடப்படுகிறது. தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து பின்பற்ற வேண்டிய அரிய பல விஷயங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

ஔவையார் கதையில் வரும் ஒரு சம்பவமாவது: ஒரு சோலையில் ஒரு நாள் பெண்டாட்டிக்கு பயந்து நடக்கும் தன்மையுள்ள ஒரு ஆடவன் தனிமையில் அமர்ந்து தன் எதிரே இருந்த கல் ஒன்றைத் தன் மனைவியாக பாவித்து அதனுடன் அதிகார தோரணையில் உரையாடும் காட்சியை அவ்வழியே வந்த ஔவையார் கண்டார். அவனது இல்லத்துக்குச் சென்று அவன் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளதென அறியும் ஆவலில் அவர் அவ்வாடவனை நோக்கி இன்று உன் வீட்டில் எனக்கு உணவு அளிக்க வேண்டுமெனக் கூறி அவனுடன் அவனது இல்லத்துக்குச் சென்றார். ஔவையை வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் சற்றே அமருப்படிக் கூறி உள்ளே சென்ற அந்த ஆடவன் அங்கே தனது கூந்தலை வாரிப் பின்னிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகவும் குழைந்து பேசி அவளுக்குத் தன் கையாலேயே தலைவாரிப் பின்னி விட்டுப் பின் மெல்லத் தன்னை நம்பி தங்களது இல்லத்தில் உணவு அருந்த வந்திருந்த ஔவையாரைப் பற்றிக் கூற, பதிலுக்கு அவள் சீற, அவன் மீண்டும் மன்றாட அவள் அரைமனதுடன் சம்மதித்து ஔவையாருக்கு வேண்டா வெறுப்பாக உணவு பரிமாறினாள்.

அவளது அக்கரையின்மை கண்டு மனம் வருந்திய ஔவையார் அவள் பரிமாரிய உணவை அருந்த மனமின்றி எழுந்து நின்று அந்த ஆடவனைப் பார்த்து, "கணவனுக்கேற்ற சேவை மனப்பான்மையுடன் கணவனை தெய்வமாக எண்ணிப் போற்றி வாழும் மனைவி ஒருவனுக்குக் கிடைப்பாளேயாயின் எத்துணைத் துன்பங்கள் வரினும் அவளுடன் கூடி வாழலாம். ஆனால் அத்தகைய மனைவியானவள் கணவனை மதியாது அவன் சொல்லை மீறி அவனுக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடப்பளேயாயின் அக்கணவன் இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்வதே தகும் எனும் பொருளில்,

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

என்ற பாடலைக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ஔவையின் அறிவுரையை செவிமடுத்த அந்த ஆடவன் தன் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு காஷாயம் தரித்துத் துறவியாகி வீட்டை விட்டுச் சென்று விடுகிறான். இதனால் மனம் பதைபதைக்க அவனது மனைவி ஓடோடிச் சென்று ஔவையாரிக் கால்களில் விழுந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட ஔவையார் அவள் கணவனை சமாதானப் படுத்து இருவரையும் சேர்ந்து வைத்து அதன் பின்னர் பாடுவதாக அமைந்துள்ள பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

பொறுமை என்னும் நகையணிந்து

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
வருந்தி மிக ஆடினாள் ஆடினால் ஆடிப்
பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும் நகையணிந்து

அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து நாதன்
அன்புடன் இல்லற இன்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
நாடி மணந்த நாதனோடு ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நல்லறமாகிய இல்லற வாழ்வினில்
எல்லையில்லாத பேரின்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

வியாழன், 21 ஜூலை, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இவ்வுலக வாழ்வு அநித்தியம் என்பது அனைவருக்கும் பொதுவான விதி. இதில் நல்லவ்ர்க்கொரு முடிவு தீயவர்க்கு வேறு என்பதில்லை. உடலுடன் உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் மண்ணுக்கிரையாவது உறுதி. நல்லவர்க்கும் தீயவர்க்கும் கிடைக்கும் முக்கிய பலனாவது நல்லவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்த பின்னரும் பிறரால் அன்புடன் நினைத்துப் போற்றப்படுவர், தீயவர் தூற்றப்படுவர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவும் உலகைப் பற்றிய பொது அறிவும் பெறாதவராக விளங்கியதால் அநேகர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டனர். இதனால் உலகில் உள்ள நாடுகள் பலவற்றில் மக்களை அடிமைகளாக்கி ஆள்வோர் தம் சுயநலத்தையே பேணும் வகையில் ஏற்பட்ட முடியாட்சியும் வேறுவிதமான அடக்குமுறை ஆட்சியும் நிலவி இன்றளவும் தொடர்கிறது.

இந்நிலையில் இதுபோன்ற அடக்குமுறை என்றும் தொடர்ந்து நீடிக்க இயலாதெனும் உண்மையை எகிப்து நாட்டு மக்கள் உலகனைத்தும் அறியும் விதமாக நடத்திய அமைதிப் புரட்சியின் மூலம் உறுதியுடன் நிலை நாட்டியுள்ளனர். இக்கலகத்தின் ஆரம்ப நாட்களில் காவல்துறையினரின் அடக்குமுறைத் தாக்குதலில் பலர் தம் இன்னுயிரை இழந்த போதிலும் எஞ்சிய மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து எங்கும் ஓடிவிடாமல் ஓரே இடத்தில் லட்சக்கணக்கில் ஒன்று கூடி எவ்வித வன்முறையிலும் ஈடுபடாது மிகவும் கட்டுப்பாட்டுடன் கொடுங்கோலன் முபாரக்கிற்கெதிராகக் குரல் கொடுத்தனர்.

உலகனைத்தும் தொலைக்காட்சிகள் வழியாகவும் இணையதளங்கள் வழியாகவும் தொடர்ந்து இப்புரட்சி குறித்த செய்திகள் அவ்வப்போது சென்றடைந்ததால் உலகில் பிற நாடுகள் யாவும் ஒரு மனதாக எகிப்து நாட்டு மக்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்த நிலையில் எகிப்து நாட்டின் காவல் துறையினர் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்ததால் நாட்டில் உள்ள தீயவர்கள் பலரும் பொதுமக்களின் சொத்துக்களையும் பிற பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடவே நாட்டின் இராணுவம் செயலில் இறங்கியது. இராணுவம் புரட்சியாளர்களைத் தாக்காமல் அவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கி அவர்களை இடையில் தாக்கும் செயலில் ஈடுபட்ட முபாரக் ஆதரவுக் கும்பலின் அடாவடிச் செயல்களைக் கட்டுப்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.

அன்று மஹாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. அந்த யுத்தத்தில் ஒரு அரச குடும்பத்தினரும் நாட்டு மக்களும் இரு கட்சிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொன்றது மட்டுமல்லாது இவர்களுடன் நட்பாக இருந்த பல நேச நாடுகளின் படைகளும் கலந்து கொண்டு பேரழிவிற்கு வித்திட்டன. இறுதியில் தருமம் வென்றதாகக் கூறப்பட்டாலும் அங்கே மகிழ்ச்சி நிலவவில்லை.

இன்று எகிப்து மக்கள் புரட்சியும் 18 நாட்கள் நடந்தது. கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சை வழியில் போராடிய மக்கள் இறுதியில் இராணுவத்தின் உதவியுடன் உறுதியான வெற்றிபெற்று கொடுங்கோலன் முபாரக் நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்க வ்ழிவகுக்கவே, நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய சோகங்கள் யாவும் மறைந்து முதல் முறையாக மகிழ்ச்சி நிலவுகிறது.

எகிப்து நாட்டில் நடந்த புரட்சியின் வெற்றியால் உற்சாகம்டைந்த பல அரேபிய நாடுகளின் மக்களும் ஒன்றன் பின் ஒன்றாக முடியாட்சி ஒழிந்து தங்களது நாடுகளிலும் ஜனநாயகம் மலர வேண்டுமென்று குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

நம் நாட்டில் பெயரளவில் ஜனநாயக ஆட்சி நடந்தாலும் இங்கே நீதி நிலைபெற வழியில்லாமல் ஆட்சி அமைப்புகளும் சட்டதிட்டங்களும் மிகவும் பாரபட்சமாக இருப்பதால் மக்களுக்கு நீதி எனும் பெயரில் வெறும் வாக்குறுதிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் தேசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமையும் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலை விரைவில் மாறும். எகிப்து நாட்டின் இளைஞர் கூட்டம் இன்று செயல்படுத்திய அமைதிப் புரட்சியினை நம் நாட்டு இளைய தலைமுறையினர் நாளை நிச்சயமாக செயல்படுத்துவர். அவர்களை வழி நடத்திச் செல்ல ஏற்ற தலைவர்களும் இப்புரட்சியில் பங்கு கொண்டு தீயவர்களை நீதியின் முன் நிறுத்தி நன்மைகளை மக்கள் அடைய வழிவகுக்க நிச்சயம் வருவார்கள்.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திரைப்படம்: பணத்தோட்டம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹா

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம்
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆஹஹா ஆஹஹா ஓஹோஹோ ஓஹோஹோ
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

யாரை எங்கே வைப்பது என்று

ஆதி கால்ம் தொட்டே உலகத்தவர் அனைவரும் கண்டு வியக்கும்படியாக எல்லா வளங்களும் நிறைந்து விளங்கிவரும் நாடு நம் பாரத நாடு. உலக நாடுகளுக்கிடையே போக்குவரத்து முதலில் கடல் வழியே துவங்கி வளர்ந்த காலத்தில் பலர் இந்தியாவுக்குக் கடல் வழியே பயணம் செய்து இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியவர்களுள் ஒருவரான அமெரிக்கோ வெஸ்புகி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவை இந்தியா என அவர் எண்ணினார். அக்காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்கள் இதன் காரணமாகவே இன்றும் அமெரிக்க இந்தியர்கள் அல்லது செவ்விந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அவ்வாறாக உலகிலுள்ளோரெல்லாம் கண்டு வியக்கும்படியான இயற்கை வளங்களும், மனித வளமும் கொண்ட நமது நாடு இன்று நியாயமாக உலக நாடுகள் அனைத்திலும் மேலான நிலையில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் இன்னமும் நம் நாடு சாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் உலக வங்கியிலிருந்து கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணம். நமது நாட்டில் நீதி என்பது உண்மையாய் உழைப்பவருக்கு எட்டாக் கனியாக விளங்குவதேயாகும். தீவிரவாதிகளுடன் அரசியல் கட்சிகள் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து நாட்டின் சில பகுதிகளில் தேர்தலை சந்திக்க முயல்கையில் வேறு சில இடங்களில் ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்குடன் செயல்புரிபவர்கள் தீவிரவாதிகளென முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப் படும் கொடுமை நிறைவேறி வருகிறது.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பலர் சுதந்திரமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகையில் உண்மையாய் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் நம் நாட்டில் வெகுவிரைவில் இன்று எகிப்து நாட்டில் நடைபெறுவது போன்ற புரட்சி வெடிக்கும். இதன் அறிகுறியாக காந்தி மஹாத்மா மறைந்த நாளான, தியாகிகள் தினமாகக் கொண்டாடப் பட்ட நேற்றைய தினம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேர்மைக்குப் பெயர் பெற்ற முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி திருமதி கிரண் பேடி தலைமையில் டெல்லியிலும் அத்தகைய பிற தலைவர்களின் தலைமையில் நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஊழல் ஒழியப் பெருங்குரல் கொடுத்து மாபெரும் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

பெரும்பொருள் செலவழித்து ஊர்கள் தோறும் அலங்கார மேடை போட்டு நல்லவர்கள் போல் நடித்துப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி அரசு பதவிகளில் நீடிக்கலாம் என மனப்பால் குடிக்கும் பேதைகளின் உண்மை சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.

யாரை எங்கே வைப்பது என்று

திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பம்பரக் கண்ணாலே

இயற்கையன்னையின் கருணையினால் இணைந்த இரு உள்ளங்களில் தோன்றும் காதல் எண்ணங்கள் கண்களின் வழியே பரிமாறப்பட்டு இதயங்களில் இசைந்து இருமனம் ஒருமனமாவது தெய்வீகக் காதல். தமிழில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களில் மிகவும் அதிகமாக விவரிக்கப் பட்டிருப்பது காதலே எனில் அது மிகையாகாது.

"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்"

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனும் சீதையும் இவ்வாறு காதல் கொண்டதை வர்ணிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் வர்ணித்த இக்காதல் காட்சி பிற்காலத் தமிழ்க் கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் இடம் பெற்ற காதல் காட்சிகளிலிருந்து தெளிவாகிறது. அத்தகைய காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான பாடல்கள் பலவும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் கம்பரின் கற்பனையில் உதித்த கருத்துக்களுடன் காதலினால் இணைந்த இருவர் தம் இதயத்தில் எழும் ஏக்கத்தையும் அந்த ஏக்கத்தினால் அவர்களது உள்ளங்கள் படும் பாட்டையும் விவரிக்கும் விதமாக அமையப்பெற்ற பாடல்கள் பலவுண்டு.

அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் தோன்றும் கதாநாயகன் நாயகியரிடையே உண்டாகும் காதல் காட்சிகளிலேயே இடம் பெற்றாலும் இடையிடையே நகைச்சுவைப் பாத்திரங்களுக்கிடையே தோன்றும் காதல் குறித்தும் இவை போன்ற சிறப்பான பாடல்களை அமைத்துப் பல படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் நம் தமிழ்த் திரையுலக சிற்பிகள்.

பம்பரக் கண்ணாலே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங்

புதன், 20 ஜூலை, 2011

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

இப்பரந்த உலகில் மனிதன் தன் ஐம்புலன்களால் உணரக்கூடியவை மிகவும் சொற்பமே. பகுத்தறிவால் அறியக் கூடியவையும் மிகவும் சொற்பமே. இத்தகைய சொற்ப உணர்வு சக்தியையும் சொற்ப அறிவையும் கொண்டு அவன் எல்லையே இல்லாத உலகின் தன்மையையும் அவ்வுலகினைப் படைத்து, தீய சக்திகளை அழித்து நல்லன யாவையும் காத்து ரக்ஷிப்பதாகக் கருதும் கடவுளின் தன்மையையும் வரையறுக்க முயல்வது வேடிக்கையே. இத்தகைய அறிவுக் குறைபாட்டுடன் பல தேசங்களில் உள்ள பலரும் தம் சிற்றறிவுக்கேற்ப இறைவனைப் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு தத்துவங்களால்மும் வரையறுத்து இறை குறித்த தமது கோட்பாடே பிறரது கோட்பாடுகளை விடச் சிறந்ததெனவும். தான் இறைவன் என்று கருதும் சக்தியே இறைவன் எனவும் பிறரது கருத்தில் விளங்கும் இறைசக்திகளெல்லாம் தீய சக்திகள் எனவும் பிரச்சாரம் செய்வது அறியாமை.

ஒருவருக்கு நல்லன செய்யும் சக்திகள் யாவும் இறை சக்திகளெனவும் தீமை செய்பவை யாவும் தீய சக்திகள் எனவும் கருதுகையில் இக்கருத்து இடத்தைப் பொறுத்தும் இனத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. உதாரணமாக வனத்தில் வாழும் புலிகளுள் ஒன்று மான் ஒன்றை வேட்டையாடிக் கொல்கையில் அம்மானினத்துக்கு அப்புலி தீய சக்தியாகத் தென்படுகிறது. ஆனால் அதே புலி தான் வேட்டையாடிய மானின் இறைச்சியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிற புலிகளுடன் பகிர்ந்து உண்கையில் பிற புலிகளின் பார்வையில் அது தெய்வமாக விளங்குகிறது. இது போலவே ஒரு நாட்டை ஆளும் மன்னவன் அந்நாட்டு மக்களுக்கு இறைவனுகொப்பாக விளங்குகையில் அவன் பிற நாடுகளின் மேல் படையெடுத்துத் தன் ஆட்சியை விரிவுபடுத்தும் செயலால் உயிரிழந்தவர்களின் கண்களுக்கு யமனாகத் தோற்றமளிக்கிறார். பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவன் அக்கும்பலில் உள்ள யாவருக்கு இறைவனாகவும் கொள்ளையிடப்பட்ட மக்களுக்குக் கொடுமைக்காரனாகவும் தோன்றுகிறான்.

இறைத் தத்துவத்தை அருணகிரிநாதர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

எனும் பாடலின் வாயிலாக இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருளென உரைக்கிறார்.

அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்ற பாடலில் வாயிலாகத் திருமூலர் அன்பே இறைவன் என விளக்குகிறார்.

அன்பு தான் இன்ப ஊற்று,
அன்பு தான் உலக ஜோதி,
அன்பு தான் உலக மகாசக்தி

என புத்தபகவான் கூறுகிறார்.

இறைபக்திக்குச் சமமாக நாட்டுப் பற்றையும் கருதிப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்த சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் குடியரசு தினமான இன்று நம் நாட்டில் நிகழும் பல சம்பவங்களையும் அறிகையில் தேசபக்தி என்பது வெறும் ஏட்டில் எழுதி மறந்து விட்ட வாசகம் தானோ எனும் ஐயம் எழுகிறது. தேசியக் கொடிகளை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மையை சிறிதும் நாடாதவர்களாக விளங்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும் இந்நாளில் நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாவது, இனியாகிலும் நாட்டுக்கு நன்மை செய்து உண்மையாய் உழைக்கக்கூடிய தலைவர்களை அறிவால் அறிந்து தேர்வதேயாகும்.

இத்தகைய கருத்துக்களை மேலும் விரிவாக்கி இறை தத்துவத்தை சமுதாயத்தின் பல தரப்பினரும் சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் உணர்ந்தேற்றுக் கொள்ளும் விதமாய் நம் கவிஞர் தருவதாவது:

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

இன்றைய உலக வாழ்வில் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் முதலான பகட்டுகளை அடைவதற்கெனவே மனிதரில் பெரும்பாலோர் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலுத்துகின்றனர். அதற்கேற்றாற் போலவே ஆரம்பப் பாடசாலை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமுலிலிருக்கும் பாடத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது மாணவர்களை வெறும் பொருளீட்டும் இயந்திரங்களாக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் விதமாகவே அமைந்து பொது அறிவிலும் வாழ்வுக்கு இன்றியமையாத பிற கலைகள், சமூக நலன், தனிமனித ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்த வலியுறுத்தாத நிலையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய குறைபாடுள்ள கல்வியால் போட்டி மனப்பான்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் தன்மை குறைந்து சுயநல நோக்கம் வளர்கிறது. இந்நிலையில் வாழ்வில் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் தாங்கும் சக்தியற்று நம்மில் பலர் அமைதியிழந்து வாழ்வை சிறப்புடன் இன்பமாக வாழ இய்லாமல் போகிறது. பண்டைக் காலத்தில் கல்விக்கூடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் தகுதிகளை வளர்ப்பதுடன் ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாய நலனில் அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்கும் விதமாக அமைந்திருந்தன. அத்துடன் இறையுணர்வை வளர்க்கும் விதமாகவும் கல்வி அமைந்திருந்தது. அதனால் உலக வாழ்வில் நம்மை மீறி ஏற்படும் துன்பங்களைத் தாங்கி வாழ்வை வெற்றிகரமாக வாழ பக்தி எனும் சாதனத்தை மக்கள் உபயோகிக்கும் விதமாகவே ஆலயங்கள் பல உருவாக்கப்பட்டன.

பக்தி ஒன்றே முக்தி பெறும் வழியாகும். முக்தி என்பதாவது நம் மனதைக் கெடுத்துத் துன்பம் விளைவிக்கும் பாப சிந்தனைகளான காமம், குரோதாம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் ஆகியவை நீங்கி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் நிலையே ஆகும்.

பக்தியினாலே – இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும் - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;

காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.

ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

என்று மஹாகவி பாரதியார் போற்றிய பக்தியின் மகிமையை உணர்ந்து

வையகத்துக்கில்லை மனமே யுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லாலழியுந்துயர்

எனும் பொன்மொழிகளை மனதிற் பதித்து வாழ்க்கையில் எத்தகைய பணிகளில் நாம் மூழ்கியிருந்தாலும், எத்தனை துன்பங்கள் எதிர்வந்த போதிலும், துன்பங்களே இல்லாமல் பெரும்பாலும் இன்பத்திலேயே திளைத்து வாழ்ந்திருந்தாலும் எல்லா நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் மனதுக்கிசைந்த இறைவன் நாமத்தை உச்சரித்து மனதை வளப்படுத்திக் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ

பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்

நடந்து வந்த பாதையிலே

ஆதியில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்த மனிதர்கள் நாளடைவில் ஒன்று சேர்ந்து சமூகங்களாக வாழத் துவங்கிய காலம்தொட்டு நாடுகளும் அரசுகளும் உருவாயின. அரசாட்சியில் மனித உரிமை குறித்த பல சட்டதிட்டங்களும் ஏற்படுத்தப் பட்டன. இத்தகைய சட்டத்தை இயற்றுவோரின் மனப்பான்மையைப் பொறுத்து அவை சமூகத்தின் பல மட்டங்களில் வாழும் மனிதர்களைப் பாதித்து வருகின்றன. சமுதாயத்தின் ஒரு பகுதியினர் தமக்கு ஒரு குறிப்பிட்ட சட்டத்தினால் நன்மை விளையுமெனக் கருதுகையில் அதே சட்டத்தினால் தமக்கு ஏதும் நன்மை விளையாது தீமையே விளையுமென வேறொரு பகுதியினர் கருதுவது இயற்கையே. இவ்வேறுபாட்டைக் களைந்து அனைத்து சட்டதிட்டங்களும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஒரு மனதாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்க்கும் சட்டங்கள் பொதுநலத்தைப் பேணுவதில்லை. செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் வழிவகுக்கின்றன.இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமுதாய நிலைமையை மாற்றியமைக்கப் பாடுபடுவோர் பலரிருக்கையில் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்போர் பலரும் இருக்கின்றனர். இதுவே உலக இயல்பு. இருப்பினும் இத்தகைய மாறுபட்ட கருத்துள்ள மக்களைத் தக்க விதத்தில் அறிவுறுத்தி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து நல்லாட்சி நடைபெறும் நாடுகள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நம் நாடு உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தையும் விடப் பல விதங்களில் மேம்பட்ட இயற்கை வளமும், மனித வளமும் கொண்டதாக விளங்குவதுடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழும் பண்பாட்டைக் கொண்டதாக விளங்குவதாலேயே உலகிலுள்ளோர் அனைவரும் பாராட்டும் வகையில் தொன்றுதொட்டுத் திகழ்கிறது. நமது நாட்டுக்கு அயல்நாடுகளில் அவப்பெயர் உண்டாவதற்குப் பெரும்பாலும் நம் நாட்டில் நடைபெறும் முறைகேடான ஆட்சி அமைப்புகளும் முடக்கப்பட்ட பாரபட்சமான சட்டதிட்டங்களுமே ஆகும்.

மக்கள் யாவரும் இந்த உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது. தீமை செய்வோர் நல்லவர்களாக நாடகமாடி நாட்டை ஏமாற்றித் தம் சுயநலத்தையே பேணிப் பெருவாழ்வு வாழும் இருண்ட காலம் மலையேறி விட்டது. பல ஆண்டுகளாக மக்கள் அறியாமல் மறைக்கப்பட்ட உண்மைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. எனவே நாட்டு மக்கள் யாவரும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டப் பாடுபடுதல் நலம்.

நடந்து வந்த பாதையிலே

திரைப்படம்: ஆசை அலைகள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வந்தது வரட்டும் போடாவென்று வாடும் மனிதர் ஒரு வழியில் அவர்
வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை