ஆதி கால்ம் தொட்டே உலகத்தவர் அனைவரும் கண்டு வியக்கும்படியாக எல்லா வளங்களும் நிறைந்து விளங்கிவரும் நாடு நம் பாரத நாடு. உலக நாடுகளுக்கிடையே போக்குவரத்து முதலில் கடல் வழியே துவங்கி வளர்ந்த காலத்தில் பலர் இந்தியாவுக்குக் கடல் வழியே பயணம் செய்து இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியவர்களுள் ஒருவரான அமெரிக்கோ வெஸ்புகி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவை இந்தியா என அவர் எண்ணினார். அக்காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்கள் இதன் காரணமாகவே இன்றும் அமெரிக்க இந்தியர்கள் அல்லது செவ்விந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
அவ்வாறாக உலகிலுள்ளோரெல்லாம் கண்டு வியக்கும்படியான இயற்கை வளங்களும், மனித வளமும் கொண்ட நமது நாடு இன்று நியாயமாக உலக நாடுகள் அனைத்திலும் மேலான நிலையில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் இன்னமும் நம் நாடு சாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் உலக வங்கியிலிருந்து கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணம். நமது நாட்டில் நீதி என்பது உண்மையாய் உழைப்பவருக்கு எட்டாக் கனியாக விளங்குவதேயாகும். தீவிரவாதிகளுடன் அரசியல் கட்சிகள் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து நாட்டின் சில பகுதிகளில் தேர்தலை சந்திக்க முயல்கையில் வேறு சில இடங்களில் ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்குடன் செயல்புரிபவர்கள் தீவிரவாதிகளென முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப் படும் கொடுமை நிறைவேறி வருகிறது.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பலர் சுதந்திரமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகையில் உண்மையாய் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் நம் நாட்டில் வெகுவிரைவில் இன்று எகிப்து நாட்டில் நடைபெறுவது போன்ற புரட்சி வெடிக்கும். இதன் அறிகுறியாக காந்தி மஹாத்மா மறைந்த நாளான, தியாகிகள் தினமாகக் கொண்டாடப் பட்ட நேற்றைய தினம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேர்மைக்குப் பெயர் பெற்ற முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி திருமதி கிரண் பேடி தலைமையில் டெல்லியிலும் அத்தகைய பிற தலைவர்களின் தலைமையில் நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஊழல் ஒழியப் பெருங்குரல் கொடுத்து மாபெரும் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.
பெரும்பொருள் செலவழித்து ஊர்கள் தோறும் அலங்கார மேடை போட்டு நல்லவர்கள் போல் நடித்துப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி அரசு பதவிகளில் நீடிக்கலாம் என மனப்பால் குடிக்கும் பேதைகளின் உண்மை சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.
யாரை எங்கே வைப்பது என்று
திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே
நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா
தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே
மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே
வியாழன், 21 ஜூலை, 2011
பம்பரக் கண்ணாலே
இயற்கையன்னையின் கருணையினால் இணைந்த இரு உள்ளங்களில் தோன்றும் காதல் எண்ணங்கள் கண்களின் வழியே பரிமாறப்பட்டு இதயங்களில் இசைந்து இருமனம் ஒருமனமாவது தெய்வீகக் காதல். தமிழில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களில் மிகவும் அதிகமாக விவரிக்கப் பட்டிருப்பது காதலே எனில் அது மிகையாகாது.
"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்"
என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனும் சீதையும் இவ்வாறு காதல் கொண்டதை வர்ணிக்கிறார்.
கம்ப ராமாயணத்தில் கம்பர் வர்ணித்த இக்காதல் காட்சி பிற்காலத் தமிழ்க் கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் இடம் பெற்ற காதல் காட்சிகளிலிருந்து தெளிவாகிறது. அத்தகைய காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான பாடல்கள் பலவும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் கம்பரின் கற்பனையில் உதித்த கருத்துக்களுடன் காதலினால் இணைந்த இருவர் தம் இதயத்தில் எழும் ஏக்கத்தையும் அந்த ஏக்கத்தினால் அவர்களது உள்ளங்கள் படும் பாட்டையும் விவரிக்கும் விதமாக அமையப்பெற்ற பாடல்கள் பலவுண்டு.
அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் தோன்றும் கதாநாயகன் நாயகியரிடையே உண்டாகும் காதல் காட்சிகளிலேயே இடம் பெற்றாலும் இடையிடையே நகைச்சுவைப் பாத்திரங்களுக்கிடையே தோன்றும் காதல் குறித்தும் இவை போன்ற சிறப்பான பாடல்களை அமைத்துப் பல படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் நம் தமிழ்த் திரையுலக சிற்பிகள்.
பம்பரக் கண்ணாலே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங்
"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்"
என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனும் சீதையும் இவ்வாறு காதல் கொண்டதை வர்ணிக்கிறார்.
கம்ப ராமாயணத்தில் கம்பர் வர்ணித்த இக்காதல் காட்சி பிற்காலத் தமிழ்க் கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் இடம் பெற்ற காதல் காட்சிகளிலிருந்து தெளிவாகிறது. அத்தகைய காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான பாடல்கள் பலவும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் கம்பரின் கற்பனையில் உதித்த கருத்துக்களுடன் காதலினால் இணைந்த இருவர் தம் இதயத்தில் எழும் ஏக்கத்தையும் அந்த ஏக்கத்தினால் அவர்களது உள்ளங்கள் படும் பாட்டையும் விவரிக்கும் விதமாக அமையப்பெற்ற பாடல்கள் பலவுண்டு.
அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் தோன்றும் கதாநாயகன் நாயகியரிடையே உண்டாகும் காதல் காட்சிகளிலேயே இடம் பெற்றாலும் இடையிடையே நகைச்சுவைப் பாத்திரங்களுக்கிடையே தோன்றும் காதல் குறித்தும் இவை போன்ற சிறப்பான பாடல்களை அமைத்துப் பல படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் நம் தமிழ்த் திரையுலக சிற்பிகள்.
பம்பரக் கண்ணாலே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங்
புதன், 20 ஜூலை, 2011
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
இப்பரந்த உலகில் மனிதன் தன் ஐம்புலன்களால் உணரக்கூடியவை மிகவும் சொற்பமே. பகுத்தறிவால் அறியக் கூடியவையும் மிகவும் சொற்பமே. இத்தகைய சொற்ப உணர்வு சக்தியையும் சொற்ப அறிவையும் கொண்டு அவன் எல்லையே இல்லாத உலகின் தன்மையையும் அவ்வுலகினைப் படைத்து, தீய சக்திகளை அழித்து நல்லன யாவையும் காத்து ரக்ஷிப்பதாகக் கருதும் கடவுளின் தன்மையையும் வரையறுக்க முயல்வது வேடிக்கையே. இத்தகைய அறிவுக் குறைபாட்டுடன் பல தேசங்களில் உள்ள பலரும் தம் சிற்றறிவுக்கேற்ப இறைவனைப் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு தத்துவங்களால்மும் வரையறுத்து இறை குறித்த தமது கோட்பாடே பிறரது கோட்பாடுகளை விடச் சிறந்ததெனவும். தான் இறைவன் என்று கருதும் சக்தியே இறைவன் எனவும் பிறரது கருத்தில் விளங்கும் இறைசக்திகளெல்லாம் தீய சக்திகள் எனவும் பிரச்சாரம் செய்வது அறியாமை.
ஒருவருக்கு நல்லன செய்யும் சக்திகள் யாவும் இறை சக்திகளெனவும் தீமை செய்பவை யாவும் தீய சக்திகள் எனவும் கருதுகையில் இக்கருத்து இடத்தைப் பொறுத்தும் இனத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. உதாரணமாக வனத்தில் வாழும் புலிகளுள் ஒன்று மான் ஒன்றை வேட்டையாடிக் கொல்கையில் அம்மானினத்துக்கு அப்புலி தீய சக்தியாகத் தென்படுகிறது. ஆனால் அதே புலி தான் வேட்டையாடிய மானின் இறைச்சியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிற புலிகளுடன் பகிர்ந்து உண்கையில் பிற புலிகளின் பார்வையில் அது தெய்வமாக விளங்குகிறது. இது போலவே ஒரு நாட்டை ஆளும் மன்னவன் அந்நாட்டு மக்களுக்கு இறைவனுகொப்பாக விளங்குகையில் அவன் பிற நாடுகளின் மேல் படையெடுத்துத் தன் ஆட்சியை விரிவுபடுத்தும் செயலால் உயிரிழந்தவர்களின் கண்களுக்கு யமனாகத் தோற்றமளிக்கிறார். பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவன் அக்கும்பலில் உள்ள யாவருக்கு இறைவனாகவும் கொள்ளையிடப்பட்ட மக்களுக்குக் கொடுமைக்காரனாகவும் தோன்றுகிறான்.
இறைத் தத்துவத்தை அருணகிரிநாதர்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
எனும் பாடலின் வாயிலாக இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருளென உரைக்கிறார்.
அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே
என்ற பாடலில் வாயிலாகத் திருமூலர் அன்பே இறைவன் என விளக்குகிறார்.
அன்பு தான் இன்ப ஊற்று,
அன்பு தான் உலக ஜோதி,
அன்பு தான் உலக மகாசக்தி
என புத்தபகவான் கூறுகிறார்.
இறைபக்திக்குச் சமமாக நாட்டுப் பற்றையும் கருதிப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்த சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் குடியரசு தினமான இன்று நம் நாட்டில் நிகழும் பல சம்பவங்களையும் அறிகையில் தேசபக்தி என்பது வெறும் ஏட்டில் எழுதி மறந்து விட்ட வாசகம் தானோ எனும் ஐயம் எழுகிறது. தேசியக் கொடிகளை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மையை சிறிதும் நாடாதவர்களாக விளங்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும் இந்நாளில் நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாவது, இனியாகிலும் நாட்டுக்கு நன்மை செய்து உண்மையாய் உழைக்கக்கூடிய தலைவர்களை அறிவால் அறிந்து தேர்வதேயாகும்.
இத்தகைய கருத்துக்களை மேலும் விரிவாக்கி இறை தத்துவத்தை சமுதாயத்தின் பல தரப்பினரும் சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் உணர்ந்தேற்றுக் கொள்ளும் விதமாய் நம் கவிஞர் தருவதாவது:
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஒருவருக்கு நல்லன செய்யும் சக்திகள் யாவும் இறை சக்திகளெனவும் தீமை செய்பவை யாவும் தீய சக்திகள் எனவும் கருதுகையில் இக்கருத்து இடத்தைப் பொறுத்தும் இனத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. உதாரணமாக வனத்தில் வாழும் புலிகளுள் ஒன்று மான் ஒன்றை வேட்டையாடிக் கொல்கையில் அம்மானினத்துக்கு அப்புலி தீய சக்தியாகத் தென்படுகிறது. ஆனால் அதே புலி தான் வேட்டையாடிய மானின் இறைச்சியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிற புலிகளுடன் பகிர்ந்து உண்கையில் பிற புலிகளின் பார்வையில் அது தெய்வமாக விளங்குகிறது. இது போலவே ஒரு நாட்டை ஆளும் மன்னவன் அந்நாட்டு மக்களுக்கு இறைவனுகொப்பாக விளங்குகையில் அவன் பிற நாடுகளின் மேல் படையெடுத்துத் தன் ஆட்சியை விரிவுபடுத்தும் செயலால் உயிரிழந்தவர்களின் கண்களுக்கு யமனாகத் தோற்றமளிக்கிறார். பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவன் அக்கும்பலில் உள்ள யாவருக்கு இறைவனாகவும் கொள்ளையிடப்பட்ட மக்களுக்குக் கொடுமைக்காரனாகவும் தோன்றுகிறான்.
இறைத் தத்துவத்தை அருணகிரிநாதர்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
எனும் பாடலின் வாயிலாக இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருளென உரைக்கிறார்.
அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே
என்ற பாடலில் வாயிலாகத் திருமூலர் அன்பே இறைவன் என விளக்குகிறார்.
அன்பு தான் இன்ப ஊற்று,
அன்பு தான் உலக ஜோதி,
அன்பு தான் உலக மகாசக்தி
என புத்தபகவான் கூறுகிறார்.
இறைபக்திக்குச் சமமாக நாட்டுப் பற்றையும் கருதிப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்த சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் குடியரசு தினமான இன்று நம் நாட்டில் நிகழும் பல சம்பவங்களையும் அறிகையில் தேசபக்தி என்பது வெறும் ஏட்டில் எழுதி மறந்து விட்ட வாசகம் தானோ எனும் ஐயம் எழுகிறது. தேசியக் கொடிகளை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மையை சிறிதும் நாடாதவர்களாக விளங்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும் இந்நாளில் நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாவது, இனியாகிலும் நாட்டுக்கு நன்மை செய்து உண்மையாய் உழைக்கக்கூடிய தலைவர்களை அறிவால் அறிந்து தேர்வதேயாகும்.
இத்தகைய கருத்துக்களை மேலும் விரிவாக்கி இறை தத்துவத்தை சமுதாயத்தின் பல தரப்பினரும் சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் உணர்ந்தேற்றுக் கொள்ளும் விதமாய் நம் கவிஞர் தருவதாவது:
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்
இன்றைய உலக வாழ்வில் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் முதலான பகட்டுகளை அடைவதற்கெனவே மனிதரில் பெரும்பாலோர் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலுத்துகின்றனர். அதற்கேற்றாற் போலவே ஆரம்பப் பாடசாலை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமுலிலிருக்கும் பாடத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது மாணவர்களை வெறும் பொருளீட்டும் இயந்திரங்களாக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் விதமாகவே அமைந்து பொது அறிவிலும் வாழ்வுக்கு இன்றியமையாத பிற கலைகள், சமூக நலன், தனிமனித ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்த வலியுறுத்தாத நிலையில் செயல்படுத்தப்படுகிறது.
இத்தகைய குறைபாடுள்ள கல்வியால் போட்டி மனப்பான்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் தன்மை குறைந்து சுயநல நோக்கம் வளர்கிறது. இந்நிலையில் வாழ்வில் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் தாங்கும் சக்தியற்று நம்மில் பலர் அமைதியிழந்து வாழ்வை சிறப்புடன் இன்பமாக வாழ இய்லாமல் போகிறது. பண்டைக் காலத்தில் கல்விக்கூடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் தகுதிகளை வளர்ப்பதுடன் ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாய நலனில் அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்கும் விதமாக அமைந்திருந்தன. அத்துடன் இறையுணர்வை வளர்க்கும் விதமாகவும் கல்வி அமைந்திருந்தது. அதனால் உலக வாழ்வில் நம்மை மீறி ஏற்படும் துன்பங்களைத் தாங்கி வாழ்வை வெற்றிகரமாக வாழ பக்தி எனும் சாதனத்தை மக்கள் உபயோகிக்கும் விதமாகவே ஆலயங்கள் பல உருவாக்கப்பட்டன.
பக்தி ஒன்றே முக்தி பெறும் வழியாகும். முக்தி என்பதாவது நம் மனதைக் கெடுத்துத் துன்பம் விளைவிக்கும் பாப சிந்தனைகளான காமம், குரோதாம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் ஆகியவை நீங்கி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் நிலையே ஆகும்.
பக்தியினாலே – இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும் - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;
காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.
ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்
என்று மஹாகவி பாரதியார் போற்றிய பக்தியின் மகிமையை உணர்ந்து
வையகத்துக்கில்லை மனமே யுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லாலழியுந்துயர்
எனும் பொன்மொழிகளை மனதிற் பதித்து வாழ்க்கையில் எத்தகைய பணிகளில் நாம் மூழ்கியிருந்தாலும், எத்தனை துன்பங்கள் எதிர்வந்த போதிலும், துன்பங்களே இல்லாமல் பெரும்பாலும் இன்பத்திலேயே திளைத்து வாழ்ந்திருந்தாலும் எல்லா நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் மனதுக்கிசைந்த இறைவன் நாமத்தை உச்சரித்து மனதை வளப்படுத்திக் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்
திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்
இத்தகைய குறைபாடுள்ள கல்வியால் போட்டி மனப்பான்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் தன்மை குறைந்து சுயநல நோக்கம் வளர்கிறது. இந்நிலையில் வாழ்வில் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் தாங்கும் சக்தியற்று நம்மில் பலர் அமைதியிழந்து வாழ்வை சிறப்புடன் இன்பமாக வாழ இய்லாமல் போகிறது. பண்டைக் காலத்தில் கல்விக்கூடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் தகுதிகளை வளர்ப்பதுடன் ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாய நலனில் அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்கும் விதமாக அமைந்திருந்தன. அத்துடன் இறையுணர்வை வளர்க்கும் விதமாகவும் கல்வி அமைந்திருந்தது. அதனால் உலக வாழ்வில் நம்மை மீறி ஏற்படும் துன்பங்களைத் தாங்கி வாழ்வை வெற்றிகரமாக வாழ பக்தி எனும் சாதனத்தை மக்கள் உபயோகிக்கும் விதமாகவே ஆலயங்கள் பல உருவாக்கப்பட்டன.
பக்தி ஒன்றே முக்தி பெறும் வழியாகும். முக்தி என்பதாவது நம் மனதைக் கெடுத்துத் துன்பம் விளைவிக்கும் பாப சிந்தனைகளான காமம், குரோதாம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் ஆகியவை நீங்கி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் நிலையே ஆகும்.
பக்தியினாலே – இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும் - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;
காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.
ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்
என்று மஹாகவி பாரதியார் போற்றிய பக்தியின் மகிமையை உணர்ந்து
வையகத்துக்கில்லை மனமே யுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லாலழியுந்துயர்
எனும் பொன்மொழிகளை மனதிற் பதித்து வாழ்க்கையில் எத்தகைய பணிகளில் நாம் மூழ்கியிருந்தாலும், எத்தனை துன்பங்கள் எதிர்வந்த போதிலும், துன்பங்களே இல்லாமல் பெரும்பாலும் இன்பத்திலேயே திளைத்து வாழ்ந்திருந்தாலும் எல்லா நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் மனதுக்கிசைந்த இறைவன் நாமத்தை உச்சரித்து மனதை வளப்படுத்திக் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்
திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்
நடந்து வந்த பாதையிலே
ஆதியில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்த மனிதர்கள் நாளடைவில் ஒன்று சேர்ந்து சமூகங்களாக வாழத் துவங்கிய காலம்தொட்டு நாடுகளும் அரசுகளும் உருவாயின. அரசாட்சியில் மனித உரிமை குறித்த பல சட்டதிட்டங்களும் ஏற்படுத்தப் பட்டன. இத்தகைய சட்டத்தை இயற்றுவோரின் மனப்பான்மையைப் பொறுத்து அவை சமூகத்தின் பல மட்டங்களில் வாழும் மனிதர்களைப் பாதித்து வருகின்றன. சமுதாயத்தின் ஒரு பகுதியினர் தமக்கு ஒரு குறிப்பிட்ட சட்டத்தினால் நன்மை விளையுமெனக் கருதுகையில் அதே சட்டத்தினால் தமக்கு ஏதும் நன்மை விளையாது தீமையே விளையுமென வேறொரு பகுதியினர் கருதுவது இயற்கையே. இவ்வேறுபாட்டைக் களைந்து அனைத்து சட்டதிட்டங்களும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஒரு மனதாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்க்கும் சட்டங்கள் பொதுநலத்தைப் பேணுவதில்லை. செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் வழிவகுக்கின்றன.இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமுதாய நிலைமையை மாற்றியமைக்கப் பாடுபடுவோர் பலரிருக்கையில் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்போர் பலரும் இருக்கின்றனர். இதுவே உலக இயல்பு. இருப்பினும் இத்தகைய மாறுபட்ட கருத்துள்ள மக்களைத் தக்க விதத்தில் அறிவுறுத்தி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து நல்லாட்சி நடைபெறும் நாடுகள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
நம் நாடு உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தையும் விடப் பல விதங்களில் மேம்பட்ட இயற்கை வளமும், மனித வளமும் கொண்டதாக விளங்குவதுடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழும் பண்பாட்டைக் கொண்டதாக விளங்குவதாலேயே உலகிலுள்ளோர் அனைவரும் பாராட்டும் வகையில் தொன்றுதொட்டுத் திகழ்கிறது. நமது நாட்டுக்கு அயல்நாடுகளில் அவப்பெயர் உண்டாவதற்குப் பெரும்பாலும் நம் நாட்டில் நடைபெறும் முறைகேடான ஆட்சி அமைப்புகளும் முடக்கப்பட்ட பாரபட்சமான சட்டதிட்டங்களுமே ஆகும்.
மக்கள் யாவரும் இந்த உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது. தீமை செய்வோர் நல்லவர்களாக நாடகமாடி நாட்டை ஏமாற்றித் தம் சுயநலத்தையே பேணிப் பெருவாழ்வு வாழும் இருண்ட காலம் மலையேறி விட்டது. பல ஆண்டுகளாக மக்கள் அறியாமல் மறைக்கப்பட்ட உண்மைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. எனவே நாட்டு மக்கள் யாவரும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டப் பாடுபடுதல் நலம்.
நடந்து வந்த பாதையிலே
திரைப்படம்: ஆசை அலைகள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
வந்தது வரட்டும் போடாவென்று வாடும் மனிதர் ஒரு வழியில் அவர்
வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்க்கும் சட்டங்கள் பொதுநலத்தைப் பேணுவதில்லை. செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் வழிவகுக்கின்றன.இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமுதாய நிலைமையை மாற்றியமைக்கப் பாடுபடுவோர் பலரிருக்கையில் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்போர் பலரும் இருக்கின்றனர். இதுவே உலக இயல்பு. இருப்பினும் இத்தகைய மாறுபட்ட கருத்துள்ள மக்களைத் தக்க விதத்தில் அறிவுறுத்தி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து நல்லாட்சி நடைபெறும் நாடுகள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
நம் நாடு உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தையும் விடப் பல விதங்களில் மேம்பட்ட இயற்கை வளமும், மனித வளமும் கொண்டதாக விளங்குவதுடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழும் பண்பாட்டைக் கொண்டதாக விளங்குவதாலேயே உலகிலுள்ளோர் அனைவரும் பாராட்டும் வகையில் தொன்றுதொட்டுத் திகழ்கிறது. நமது நாட்டுக்கு அயல்நாடுகளில் அவப்பெயர் உண்டாவதற்குப் பெரும்பாலும் நம் நாட்டில் நடைபெறும் முறைகேடான ஆட்சி அமைப்புகளும் முடக்கப்பட்ட பாரபட்சமான சட்டதிட்டங்களுமே ஆகும்.
மக்கள் யாவரும் இந்த உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது. தீமை செய்வோர் நல்லவர்களாக நாடகமாடி நாட்டை ஏமாற்றித் தம் சுயநலத்தையே பேணிப் பெருவாழ்வு வாழும் இருண்ட காலம் மலையேறி விட்டது. பல ஆண்டுகளாக மக்கள் அறியாமல் மறைக்கப்பட்ட உண்மைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. எனவே நாட்டு மக்கள் யாவரும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டப் பாடுபடுதல் நலம்.
நடந்து வந்த பாதையிலே
திரைப்படம்: ஆசை அலைகள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
வந்தது வரட்டும் போடாவென்று வாடும் மனிதர் ஒரு வழியில் அவர்
வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
செவ்வாய், 19 ஜூலை, 2011
நாளை உலகை ஆள வேண்டும்
1947ஆம் ஆண்டு நம் பாரத நாடு ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்ததிலிருந்து 1967ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல்கள் மிகவும் அமைதியாகவே நடந்து தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி செய்து வந்தது. இத்தகைய வெற்றி மிதப்பில் மாநிலங்களிலும் மத்தியிலும் ஆளும் காங்கிரசார் சற்றே அலட்சியமாக இருந்த தருணத்தில் 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளான, சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு, ஃபார்வார்டு ப்ளாக், தி.மு.க. முதலிய கட்சிகள் முதன்முதலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. நம் நாட்டில் அரசியல் வியாபாரமான தருணம் அதுவே. அதுவரை தேர்தல் பிரச்சாரங்களுக்காக குறிப்பிடத்தக்க செலவுகள் ஏதுமின்றி வெறும் சுவற்றில் எழுதிய வாசகங்களைக் கொண்டே தேர்தல் பிரச்சாரம் எவ்வித ஆரவாரமுமின்றி நடந்து வந்தது. 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கென பிரத்யேகமாகப் பெரும் செலவில் பல ஆட்கள் அமர்த்தப்பட்டு சைக்கிள்களில் பலரும் கூட்டம் கூட்டமாகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசியை எதிர்த்தும், சாலையமைத்தல் போன்ற பொதுப் பணிகள் ஏதும் நடைபெறாததையும் கண்டித்துப் பெரும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவோர்க்கு அரசியல் கட்சிகள் ஊதியம் வழங்கின. பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைவரும் பெரும்பாலும் வேறு பணிகள் ஏதுமின்றி இருந்தவர்களாக அமையவே இத்தகைய அரசியல் பணியே வேலையில்லாத பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊதியம் ஈட்டும் வேலையாக நாளடைவில் அமைந்தது. இவர்களுக்கு ஊதியம் தரவும் கட்சி தொடர்பான விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யவும் நாளடைவில் பெரும் தொகை தேவைப்பட்டது. அரசியல் கட்சிகள் இத்தகைய செலவினங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாமலும் செலவு செய்யும் தொகைக்கு எவ்விதமான கணக்கும் வைத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படாத நிலையே தொடர்வதாலும் இத்தகைய செலவுகளை எல்லா அரசியல் கட்சிகளும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை கருப்புப் பணத்தைக் கொண்டே செய்கின்றன.
இத்தகைய கருப்புப் பணப்புழக்கத்தினால் ஊழல் அதிகரித்து மக்களுக்கு சேவை செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தே பெரும்பாலான தலைவர்கள் தொடர்ந்து பதவிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நம் நாட்டு மக்களும் தொடர்ந்து இத்தகைய பொய்யர்களின் வாக்குறுதிகளை மெய்யென நம்பி தொடர்ந்து ஆட்சியை அவர்கள் கையில் ஒப்படைத்து வருகின்றனர். சில காலம் முன்னர் வரை அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டு வரை இந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து புரிந்து வந்த ஊழலகள் அவ்வப்போது வெளிவந்த போதிலும் அவற்றைக் குறித்து செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி வழி செய்திகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறாத நிலை இருக்கவே அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசியல்வாதிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஒவ்வொரு கட்சியும் தாம் உத்தமர்கள் எனவும் எதிர்க் கட்சிகள் ஊழல் கட்சிகள் எனவும் பிரச்சாரம் செய்து வேறு வழியின்றி ,மக்கள் அவர்களை மாறி மாறித் தேர்ந்தெடுக்கும் நிலையில் ஊழல்களைத் தொடர்கின்றனர்.
தற்போது நிலைமை மாறி விட்டது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து மக்களுக்கு எதிராக சதி செய்யும் வ்அர்த்தக நிறுவனங்களும் செய்யும் ஊழல்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து அம்பலமாவதுடன் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு வருவதால் தற்போது இந்த ஊழல் அரசியல்வாதிகள் பயந்து நடுங்குகின்றனர். என்னென்னவோ நாடகங்களெல்லாம் அரங்கேற்றுகின்றனர். ஆனால் அத்தனை வேஷங்களும் தொடர்ந்து கலைந்து கொண்டே வருகின்றன.
1986ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஊழல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழல். இந்திய ராணுவத்திற்காக ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து அப்போது ராஜீவ் காந்தியின் தலைமையில் மத்தியில் பதவியிலிருந்த காங்கிரஸ் அரசு பீரங்கிகள் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாட்ரோச்சி மற்றும் இந்தியாவின் ஒரு பெரும் செல்வந்தரும் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவருமான இந்துஜா ஆகியோர் பல கோடிகள் கமிஷனாகப் பெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்களைத் தேடிப் பிடிக்கத் தவறிய மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குவட்ரோச்சியின் மேல் எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால் அவர் மேல் இருக்கும் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கோரி ஒரு விண்ணப்பத்தை சென்ற ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் அவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்பட்டு குற்றவாளி குற்றமற்றவர் எனும் நற்சான்றிதழ் பெற்று அனைவருக்கும் டாடா காட்டிச் செல்லலாம் என இருந்த நிலை மாறி இன்று வருமான வரி ட்ரிபூனல் ஒரு புதிய ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் குவாட்ரோச்சியும் இந்துஜாவும் 40 கோடி ரூபாய்களுக்கு மேல் போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து கமிஷனாகப் பெற்ற விவரத்தை விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதால் குற்றவாளிகள் குற்றத்துக்கு பதில் சொல்லும் நிலைமை உருவாகியுள்ளது.
இத்தகைய மாற்றங்களெல்லாம் இது நாள் வரை உற்சாகமிழந்து நடைபிணங்கள் போல் வாழ்ந்து வரும் நமது நாட்டு மக்களுக்கொரு புத்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் நல்லாட்சி மலருமெனும் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இனி வருங்காலம் இத்தகைய வீணர்கள் கையில் போகாமல் உண்மையாய் உழைப்பவரே நாட்டை ஆளும் சூழ்நிலை வருமெனும் ஆவலில் இன்றைய பாடல் ஒலிக்கிறது.
நாளை உலகை ஆள வேண்டும்
திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவோர்க்கு அரசியல் கட்சிகள் ஊதியம் வழங்கின. பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைவரும் பெரும்பாலும் வேறு பணிகள் ஏதுமின்றி இருந்தவர்களாக அமையவே இத்தகைய அரசியல் பணியே வேலையில்லாத பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊதியம் ஈட்டும் வேலையாக நாளடைவில் அமைந்தது. இவர்களுக்கு ஊதியம் தரவும் கட்சி தொடர்பான விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யவும் நாளடைவில் பெரும் தொகை தேவைப்பட்டது. அரசியல் கட்சிகள் இத்தகைய செலவினங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாமலும் செலவு செய்யும் தொகைக்கு எவ்விதமான கணக்கும் வைத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படாத நிலையே தொடர்வதாலும் இத்தகைய செலவுகளை எல்லா அரசியல் கட்சிகளும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை கருப்புப் பணத்தைக் கொண்டே செய்கின்றன.
இத்தகைய கருப்புப் பணப்புழக்கத்தினால் ஊழல் அதிகரித்து மக்களுக்கு சேவை செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தே பெரும்பாலான தலைவர்கள் தொடர்ந்து பதவிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நம் நாட்டு மக்களும் தொடர்ந்து இத்தகைய பொய்யர்களின் வாக்குறுதிகளை மெய்யென நம்பி தொடர்ந்து ஆட்சியை அவர்கள் கையில் ஒப்படைத்து வருகின்றனர். சில காலம் முன்னர் வரை அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டு வரை இந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து புரிந்து வந்த ஊழலகள் அவ்வப்போது வெளிவந்த போதிலும் அவற்றைக் குறித்து செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி வழி செய்திகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறாத நிலை இருக்கவே அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசியல்வாதிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஒவ்வொரு கட்சியும் தாம் உத்தமர்கள் எனவும் எதிர்க் கட்சிகள் ஊழல் கட்சிகள் எனவும் பிரச்சாரம் செய்து வேறு வழியின்றி ,மக்கள் அவர்களை மாறி மாறித் தேர்ந்தெடுக்கும் நிலையில் ஊழல்களைத் தொடர்கின்றனர்.
தற்போது நிலைமை மாறி விட்டது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து மக்களுக்கு எதிராக சதி செய்யும் வ்அர்த்தக நிறுவனங்களும் செய்யும் ஊழல்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து அம்பலமாவதுடன் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு வருவதால் தற்போது இந்த ஊழல் அரசியல்வாதிகள் பயந்து நடுங்குகின்றனர். என்னென்னவோ நாடகங்களெல்லாம் அரங்கேற்றுகின்றனர். ஆனால் அத்தனை வேஷங்களும் தொடர்ந்து கலைந்து கொண்டே வருகின்றன.
1986ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஊழல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழல். இந்திய ராணுவத்திற்காக ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து அப்போது ராஜீவ் காந்தியின் தலைமையில் மத்தியில் பதவியிலிருந்த காங்கிரஸ் அரசு பீரங்கிகள் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாட்ரோச்சி மற்றும் இந்தியாவின் ஒரு பெரும் செல்வந்தரும் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவருமான இந்துஜா ஆகியோர் பல கோடிகள் கமிஷனாகப் பெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்களைத் தேடிப் பிடிக்கத் தவறிய மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குவட்ரோச்சியின் மேல் எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால் அவர் மேல் இருக்கும் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கோரி ஒரு விண்ணப்பத்தை சென்ற ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் அவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்பட்டு குற்றவாளி குற்றமற்றவர் எனும் நற்சான்றிதழ் பெற்று அனைவருக்கும் டாடா காட்டிச் செல்லலாம் என இருந்த நிலை மாறி இன்று வருமான வரி ட்ரிபூனல் ஒரு புதிய ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் குவாட்ரோச்சியும் இந்துஜாவும் 40 கோடி ரூபாய்களுக்கு மேல் போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து கமிஷனாகப் பெற்ற விவரத்தை விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதால் குற்றவாளிகள் குற்றத்துக்கு பதில் சொல்லும் நிலைமை உருவாகியுள்ளது.
இத்தகைய மாற்றங்களெல்லாம் இது நாள் வரை உற்சாகமிழந்து நடைபிணங்கள் போல் வாழ்ந்து வரும் நமது நாட்டு மக்களுக்கொரு புத்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் நல்லாட்சி மலருமெனும் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இனி வருங்காலம் இத்தகைய வீணர்கள் கையில் போகாமல் உண்மையாய் உழைப்பவரே நாட்டை ஆளும் சூழ்நிலை வருமெனும் ஆவலில் இன்றைய பாடல் ஒலிக்கிறது.
நாளை உலகை ஆள வேண்டும்
திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
இயேசுநாதர் பேசினால்
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய கிரித்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
http://www.mazhalaigal.com/entertainment/greetings/greetings-001/20101225vs_christmas.php
இந்தப் பாழும் உலகில் உண்மைக்கு உண்மையிலேயே ஏதேனும் மரியாதை உள்ளதா என்பதே மிகப் பெரியதொரு கேள்விக்குறியாகி விட்டது. இதற்குக் காரணம் மாயையில் உழன்று சிற்றின்ப நினைப்பிலே ஊறி, பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையையே வாழ்ந்து வரும் பெரும்பான்மையினரே. இந்தக் கேடுகெட்ட இந்திய சமுதாயத்திலே சாமான்யனுக்கொரு நீதி, அதிகார வர்க்கத்தினரான சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வத்திலே மிதக்கும் பல வர்த்தகர்களுக்கும் வேறொரு நீதி எனும் நடைமுறை இருந்து வருகிறது.
சாமான்யன் ஒருவன் குற்றமிழைத்தாலோ அல்லது குற்றமிழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டாலோ முதற்கண் அவன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவான். அதன் பின்னர் மிகவும் கொடுமையான முறையில் அடி உதைகளுடன் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தாலும் செய்யாவிடினும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவான், அல்லது விசாரணையின் போதே கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு வீதியில் விட்டெறியப் படுவான்.
ஆனால் அதிகார வர்க்கத்திலுள்ள ஒருவன் குற்றமிழைத்தாலும் அவன் மேல் யார் எத்துணை முறை குற்றம் கூறி வந்தாலும் அவன் சாதாரணமாக விசாரிக்கப் படுவதில்லை. மக்களுக்கு நாட்டு நடப்பை செய்திகளாகத் தரும் பல ஊடகங்களின் வழியே அவன் செய்த குற்றம் ஆதாரத்துடன் வெளியிடப்படுகையில் அரை மனதுடன் விசாரணை என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய நாடகம் அரங்கேறும். மிகவும் பரபரப்புடன் சில காலம் அவ்விசாரணை குறித்து, விரைவில் குற்றவாளி தண்டனை பெறுவான் என அனைவரும் எதிர்பார்க்கும் விதத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகும். பின்னர் சில காலம் இது குறித்து யாரும் எதுவும் கூற மாட்டார்கள். அதன் பின்னர் ஒரு நாள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளி நிரபராதியாக அறிவிக்கப்பட்டு முன்னர் வகித்ததைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருத்தப் படுவான். இது தான் இன்றைய இந்திய அரசியல்.
இங்கே காவல் துறைகளும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைகளும் அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் கீழேயே செயல் படமுடியும் தனித்து இயங்க இயலாது. இந்த அரசியல்வாதிகள் இன்றும் என்றும் மக்களுக்கு மனமுவந்து நீதி வழங்குவர் என எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கொப்பாகும். என்றும் அநீதி புரியும் அரசியல்வாதிகள் தாங்கள் மிகவும் நேர்மையாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு ஆட்சி செய்வதாகவும், பல நல்ல திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்துவதாகவும் பறைசாற்றிக்கொண்டு அத்தகைய திட்டங்கள் யாவிலும் பெரும் தொகையைத் திருடி அதையும் தங்கள் சொந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்வது ஒன்றே இன்றைய உண்மை அரசியல் நிலை.
இன்று நாட்டையே உலுக்கிய உலகிலேயே மிகப்பெரிய தொலைத் தொடர்புத் துறை ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையினரால் விசரணை செய்யப்படும் நிலையில் தமிழக அரசின் பிரதான பிரதிநிதிகள் பல ஊர்களிலும் பெரும் தொகை செலவிட்டு கூட்டங்கள் நடத்தி ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்றதொரு வாதத்தை மக்கள் முன் வைத்து அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய அட்டூழியங்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு அறிவிப்பை இயேசு கிரிஸ்துவின் பிறந்த தினத்தின் முதல் தினத்தன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது இயேசுநாதர் எவ்வாறு ஏழை மக்களின் மேல் கருணை கொண்டு அவர்களது துயர் துடைக்கவென்றே செயல்புரிந்தாரோ அவ்வாறே தாம் ஏழை மக்களுக்காகவே தொடர்ந்து தொண்டாட்டுவதாகக் கூறியுள்ளார்.
இயேசுநாதருக்கு இதைவிடவும் பெரியதொரு அவமதிப்பை யாராலும் செய்ய முடியாது.
இயேசுநாதரே! தாம் செய்த பாபத்தை மூடி மறைத்துக்கொண்டு இத்தகைய அவமறியாதையை உங்களுக்கு இழைக்கும் இப்பாவிகளையும் மன்னிப்பீரா?
இயேசுநாதர் பேசினால்
திரைப்படம்: தாயே உனக்காக
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: B வசந்தா
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
http://www.mazhalaigal.com/entertainment/greetings/greetings-001/20101225vs_christmas.php
இந்தப் பாழும் உலகில் உண்மைக்கு உண்மையிலேயே ஏதேனும் மரியாதை உள்ளதா என்பதே மிகப் பெரியதொரு கேள்விக்குறியாகி விட்டது. இதற்குக் காரணம் மாயையில் உழன்று சிற்றின்ப நினைப்பிலே ஊறி, பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையையே வாழ்ந்து வரும் பெரும்பான்மையினரே. இந்தக் கேடுகெட்ட இந்திய சமுதாயத்திலே சாமான்யனுக்கொரு நீதி, அதிகார வர்க்கத்தினரான சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வத்திலே மிதக்கும் பல வர்த்தகர்களுக்கும் வேறொரு நீதி எனும் நடைமுறை இருந்து வருகிறது.
சாமான்யன் ஒருவன் குற்றமிழைத்தாலோ அல்லது குற்றமிழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டாலோ முதற்கண் அவன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவான். அதன் பின்னர் மிகவும் கொடுமையான முறையில் அடி உதைகளுடன் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தாலும் செய்யாவிடினும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவான், அல்லது விசாரணையின் போதே கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு வீதியில் விட்டெறியப் படுவான்.
ஆனால் அதிகார வர்க்கத்திலுள்ள ஒருவன் குற்றமிழைத்தாலும் அவன் மேல் யார் எத்துணை முறை குற்றம் கூறி வந்தாலும் அவன் சாதாரணமாக விசாரிக்கப் படுவதில்லை. மக்களுக்கு நாட்டு நடப்பை செய்திகளாகத் தரும் பல ஊடகங்களின் வழியே அவன் செய்த குற்றம் ஆதாரத்துடன் வெளியிடப்படுகையில் அரை மனதுடன் விசாரணை என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய நாடகம் அரங்கேறும். மிகவும் பரபரப்புடன் சில காலம் அவ்விசாரணை குறித்து, விரைவில் குற்றவாளி தண்டனை பெறுவான் என அனைவரும் எதிர்பார்க்கும் விதத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகும். பின்னர் சில காலம் இது குறித்து யாரும் எதுவும் கூற மாட்டார்கள். அதன் பின்னர் ஒரு நாள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளி நிரபராதியாக அறிவிக்கப்பட்டு முன்னர் வகித்ததைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருத்தப் படுவான். இது தான் இன்றைய இந்திய அரசியல்.
இங்கே காவல் துறைகளும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைகளும் அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் கீழேயே செயல் படமுடியும் தனித்து இயங்க இயலாது. இந்த அரசியல்வாதிகள் இன்றும் என்றும் மக்களுக்கு மனமுவந்து நீதி வழங்குவர் என எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கொப்பாகும். என்றும் அநீதி புரியும் அரசியல்வாதிகள் தாங்கள் மிகவும் நேர்மையாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு ஆட்சி செய்வதாகவும், பல நல்ல திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்துவதாகவும் பறைசாற்றிக்கொண்டு அத்தகைய திட்டங்கள் யாவிலும் பெரும் தொகையைத் திருடி அதையும் தங்கள் சொந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்வது ஒன்றே இன்றைய உண்மை அரசியல் நிலை.
இன்று நாட்டையே உலுக்கிய உலகிலேயே மிகப்பெரிய தொலைத் தொடர்புத் துறை ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையினரால் விசரணை செய்யப்படும் நிலையில் தமிழக அரசின் பிரதான பிரதிநிதிகள் பல ஊர்களிலும் பெரும் தொகை செலவிட்டு கூட்டங்கள் நடத்தி ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்றதொரு வாதத்தை மக்கள் முன் வைத்து அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய அட்டூழியங்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு அறிவிப்பை இயேசு கிரிஸ்துவின் பிறந்த தினத்தின் முதல் தினத்தன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது இயேசுநாதர் எவ்வாறு ஏழை மக்களின் மேல் கருணை கொண்டு அவர்களது துயர் துடைக்கவென்றே செயல்புரிந்தாரோ அவ்வாறே தாம் ஏழை மக்களுக்காகவே தொடர்ந்து தொண்டாட்டுவதாகக் கூறியுள்ளார்.
இயேசுநாதருக்கு இதைவிடவும் பெரியதொரு அவமதிப்பை யாராலும் செய்ய முடியாது.
இயேசுநாதரே! தாம் செய்த பாபத்தை மூடி மறைத்துக்கொண்டு இத்தகைய அவமறியாதையை உங்களுக்கு இழைக்கும் இப்பாவிகளையும் மன்னிப்பீரா?
இயேசுநாதர் பேசினால்
திரைப்படம்: தாயே உனக்காக
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: B வசந்தா
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)