ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு?

இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடி வென்ற்தற்கு முக்கியக் காரணகர்த்தா மஹாத்மா காந்தி ஆவார். சுதந்திரப் போருக்கு அவர் வகுத்து வழிநடத்தியது சத்தியாக்கிரகம் எனும் அஹிம்சை வழி. ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை எதிர்த்து நாடெங்கிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், அந்நிய நாட்டுப் பொருட்களை நெருப்பிட்டு அழித்தும், சட்டத்தை மீறி உப்பளங்களில் உப்பெடுத்தும் மற்றும் பல வழிகளில் இந்திய மக்களை ஒன்று திரட்டி அவர் நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் யாரும் வன்முறையைக் கையாளவில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் தடியால் அடித்த போதும் துப்பாக்கி குண்டுகளால் சுட்ட போதும் அவ்வதிகாரிகளை யாரும் திருப்பித் தாக்க முயற்சிக்கவில்லை.

"ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ மறு கன்னத்தைக் காட்டு" என இயேசுபிரான் கூறிய அறிவுரை வழியே நின்று மஹாத்மாவின் தலைமையில் நம் முன்னோர்கள் கோடானு கோடிப் பேர்கள் ஒன்றிணைந்து கத்தியின்றி ரத்தமின்றி நடத்திய யுத்தத்தின் பலனாகவே நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மஹாத்மா தொடுத்த அறவழிப் போருக்கு நெஞ்சில் இயல்பாக இரக்கமில்லாத ஆங்கிலேயர்களும் தலைவணங்கினர். அதே அறவழியில் இன்று இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் நாட்டின் பல நகரங்களிலும் கிராமங்களிலும் மற்றும் பல அயல்நாடுகளிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்னரும் ஒன்று திரண்டு தற்போது நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் எனும் கொடுமையை எதிர்த்து, அக்கொடுமையை நீக்கவல்ல மக்கள் சட்டத்தைப் பல ஆண்டுகளாக இயற்றப் போவதாகக் கூறிக்கொண்டு செயலில் இறங்காமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவரும் அரசாங்கத்தை தகுந்த மக்கள் சட்டத்தை நிறைவேற்ற வைக்கும் உன்னத நோக்கத்துடன் காந்தியடிகள் வழியே அன்ன ஹசாரே எனும் உத்தமர் தலைமையில் போராடி வருகின்றனர்.

அன்னா ஹசாரே இம்முயற்சியில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தின் ஐந்தாம் நாள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசு இந்த அறவழிப் போராட்டத்தை முறியடிக்கும் ஓரே நோக்கத்துடன். இப்போராட்டத்துக்கு ஆர்.எஸ். எஸ். இயக்கம் ஆதரவளிக்கிறது என்றும், அரசைக் கவிழ்க்க நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் சதிகளுள் இப்போராட்டமும் ஒன்று என்றும் இப்போராட்டத்தை அன்னா ஹசரேயின் மூலம் அமெரிக்கா நடத்துகிறது என்றும் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் தொடர்ந்து மக்களை ஏமாற்றும் வழியில் மட்டுமே செயல்பட்டு வருவது வருந்தத் தக்கது. அசத்திய மார்க்கத்தில் செயல்படும் சுயநலவாதிகளைக் கொண்டு நடத்தப்படும் இந்த அரசுக்கு அறப் போராட்டத்தின் வலிமை இன்னும் புரியவில்லை என்றே தோன்றுகின்றது. இந்த அரசு எவ்வளவு தான் முயன்றாலும் நாள் தோறும் லஞ்ச ஊழலால் அவதியுறும் மக்களின் மனங்களில் கொழுந்து விட்டெறியும் சுதந்திர தாகத்தை அடக்க இயலாது.

லஞ்ச ஊழல் ஒழிந்து தவறு செய்யும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற குற்றவாளிகளும் உரிய காலத்தில் விரைந்து தம் குற்றங்களுக்குரிய தண்டனையைப் பெறும் நிலையை நாட்டில் ஏற்படுத்தத் தக்க மக்கள் சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படும் வரையில் இந்த இரண்டாம் சுதந்திரப் போர் ஓயாது. "வந்தே மாதரம்! இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சுதந்திர முழக்கமும் அடங்காது, உரக்க உரக்க மேலெழும். இந்திய மக்களாகிய நாம் நாட்டில் லஞ்ச ஊழல் ஒழிந்து அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுமெனில் அனைவரும் ஒற்றுமையுடன் அன்னா ஹசாரேயின் வழியில் தொடர்ந்து செயல்பட்டுப் போராட வேண்டும். நமது இப்போராட்டம் வெற்றி பெற்றால் நம் நாடு உலக அரங்கில் முன்னேற்றமடைந்து இந்தியா வல்லரசாகும் கனவும் நிறைவேறும்.

"பாரத நாடு பழம்பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" எனும் மஹாகவி பாரதியாரின் வரிகளை நாம் என்றென்றும் மனதில் கொண்டு, "இந்தியா, என் தாய் நாடு, இந்தியர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள்' எனும் கொள்கையுடன் நாம் வாழ்வது இப்போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும். அவ்வாறன்றி சுயநலத்துடன் நாமும் நம் குடும்பத்தினரும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் நாட்டிலுள்ள பிறர் எவ்வாறாகிலும் வாடட்டும் எனும் போக்கில் நடந்தால் நம் நாடு உலக அரங்கில் முன்னேற்றமடைவது கடினம்.

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு?

திரைப்படம்: திருப்பாச்சி
இயற்றியவர்: பேரரசு
இசை: தீனா, மணி ஷர்மா, தேவி ஸ்ரீ ப்ரசத்
பாடியவர்: திப்பு

வாரே வாரே வாராரே அ தள்ளு வாரே வாரே வாராரே ஒத்துடா
வாரே வாரே வாராரே அடங்குடா
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சான்

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு? சொந்தத்தில் அர்த்தமில்லே இல்லே இல்லே
தொப்புள் கொடி உறவா? இல்லே இல்லே ஏ
கட்சிக் கொடி உறவா? இல்லே இல்லே ஹை
மேட்டுக்குடி உறவா? இல்லே இல்லே அட
கள்ளுக் கடை உறவா? இல்லவே இல்லே

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா ஹேய்
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே

எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
கக்காலக்கா கக்காலக்கா கக்காலக்கா கா
ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே ஹேஹேஹே

சாமி வரம் தந்துட்டா ஓஓஓஓஓ கொட்டும் மழை கொட்டுண்டா
ஏழை மனம் பொங்குண்டா ஓஓஓஓஓ நன் ஐயனாரு பக்தண்டா
மண்ணை நம்பி வேரு விண்ணை நம்பி ஆறு
என்னை நம்பி யாரும் கெட்டதில்லை பாரு ஓஓஓஓ ஓஓஓஓ
ஒனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒண்ணு சேத்துப் பாரு இந்தியன்னு பேரு ஓஓஓஓ ஓஓஓஓ

பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே ஹேய்
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே ஹே

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு? சொந்தத்தில் அர்த்தமில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே

அல்லேலல்லே லேலல்லோ தோதோதோ
அல்லேல்ல்லே லேலல்லோ தோ
அல்லேலல்லே லேலல்லோ தோதோதோதோ
அல்லேல்ல்லே லேலல்லோ தோ
அல்லேலல்லே லேலத்தோ ஹேய் அல்லேலல்லே லேலத்தோ
அல்லேலல்லே லேலத்தோ ஹேய் அல்லேலல்லே லேலத்தோ
ஆஹா ஆஆஆஆஆ ஏஹே ஏஏஏஏஏ

அம்மையப்பன் தானடா நம்மையாளும் சாமிடா
கருவறைத் தொழிடா நம்ம உயிர் நாடிடா
கண்ணப் பொத்திப் பாரு காதைப் பொத்தி வாழு
வாயைப் பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு ஓஓஓஓ ஓஓஓஓ
ஆத்திகந்தான் மூச்சு சத்தியந்தான் பேச்சு
ஆசையெல்லாம் போச்சு நம்ம புத்தர் கொடியேத்து ஓஓஓஓ ஓஓஓஓ

அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே ஹே
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

நீ எந்த ஊரு
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு? சொந்தத்தில் அர்த்தமில்லே இல்லே இல்லே
தொப்புள் கொடி உறவா இல்லே இல்லே
கட்சிக் கொடி உறவா? இல்லே இல்லே
மேட்டுக்குடி உறவா? இல்லே இல்லே அட
கள்ளுக் கடை உறவா? இல்லவே இல்லே

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா ஹேய்
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா நாம அண்ணன் தம்பிடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக