கோகுலத்துக் கண்ணன் புல்லாங்குழலெடுத்து இசைமழை பொழிய, கோபியர்கள் யாவரும் தம்மை மறந்திடுவராம். இந்தக் கதை உண்மையோ என்னவோ தெரியாது, ஆனால் புல்லாங்குழல் இசையை யார் வாசிக்கக் கேட்டாலும் சாதாரணமாக இசையில் மயங்காதவர் மனங்களும் மயங்கும். அத்தகையதொரு இனிமை புல்லாங்குழலுக்குண்டு.
அது சரி, கண்ணன் தற்காலத்தில் நேரில் வருவதுண்டோ? உண்டு என்பது போல் அமைந்ததொரு கிராமத்துக் கதையில் கததாநாயகியின் மனதில் ஒரு இனிய கீதம் அடிக்கடி இசைக்க, அதில் மயக்கமுற்று ஒரு புதுவிதமான உணர்ச்சியில் தத்தளிக்கும் அவளது மனதின் ராகத்தைப் புல்லாங்கழலில் யாரோ வாசிக்க, ஒரு நாள் அவள் மெய்யாகவே தன் காதால் கேட்கிறாள். தன் இதயத்தின் ஆழத்தில் இருக்கும் ராகத்தை இசைப்பது யார் என ஆவலுடன் தேடி ஓடுகிறாள். அவளது மனம் கவர்ந்த ராகத்தைத் தனது புல்லாங்குழலில் இசைத்துக்கொண்டு ஒரு அழகிய வாலிபன் செல்லக் காண்கிறாள். அவள் அவ்விளைஞனைக் கண்டு பேசித் தன் காதலைக் கூறினாளா? அவன் உண்மையாகவே கண்ணன் தானா? அவளை அவன் மணந்தானா? மகிழ்வான வாழ்வு தந்தானா?
இக்கேள்விகளுக்கு விடை காணக் கவிக்குயில் திரைப்படம் பார்க்க வேண்டும்.
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
திரைப்படம்: கவிக்குயில்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எம். பாலமுரளி கிருஷ்ணா
ஆண்டு: 1977
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி - என்றும்
காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை - அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா - உன்
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ஆகிரா
சனி, 12 டிசம்பர், 2009
புதன், 9 டிசம்பர், 2009
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
சாதாரண மனிதனின் தேவைகளுக்கும் அவனது வருவாய்க்கும் இடைவெளி என்றுமே மிக அதிகம். "அன்றாடங்காய்ச்சி" என்று அழைக்கப்படும் ஏழை வர்க்கத்துக்கு தினமும் வயிற்றுப் பசிக்கு சோறு கிடைத்தாலே போதும் எனும் எண்ணம் இருக்கும். நடுத்தர வர்க்கத்தாருக்கு, உணவு, உடை, இருப்பிடம் உட்படப் பல விதமான செலவினங்களையும் பூர்ததி செய்ய வேண்டியுள்ளது. மேல்மட்ட வர்க்கத்தாருக்கு இருக்கும் பணம் போதாது மேலும் மேலும் பணம் ஈட்ட வேண்டுமென்னும் தேவை. இவர்களுள் நடுத்தர வர்க்கத்தார், அதிலும் குறிப்பாக மாத சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலைமை என்றுமே தருமசங்கடமானதாகும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி என்று வரும், கடும்பத் தலைவரின் சம்பளம் வந்தவுடன் அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதும், முதல் தேதி வந்து சம்பளம் கிடைதத பின்னர் ஒரு சில தினங்களுக்குள்ளே சம்பளத் தொகை முழுவதும் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போவதும், அடுத்த மாதம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது.
இவர்களுள் சிலர் பல சமயங்களில் கல்வி, மருத்துவ சிகிச்சை முதலிய எதிர்பாராத செலவினங்களினால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதும் சகஜமாகவே நிகழ்கின்றது.
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
திரைப்படம்: முதல் தேதி
இயற்றியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
ஆண்டு: 1955
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே
கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே
எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி என்று வரும், கடும்பத் தலைவரின் சம்பளம் வந்தவுடன் அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதும், முதல் தேதி வந்து சம்பளம் கிடைதத பின்னர் ஒரு சில தினங்களுக்குள்ளே சம்பளத் தொகை முழுவதும் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போவதும், அடுத்த மாதம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது.
இவர்களுள் சிலர் பல சமயங்களில் கல்வி, மருத்துவ சிகிச்சை முதலிய எதிர்பாராத செலவினங்களினால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதும் சகஜமாகவே நிகழ்கின்றது.
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
திரைப்படம்: முதல் தேதி
இயற்றியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
ஆண்டு: 1955
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே
கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே
எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கண்ணே கலைமானே கன்னி மயிலென
நமது நாடு வெள்ளையரிடமிருந்து சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை. ஒரு சாரார் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிற மக்களைச் சுரண்டிப் பண முதலைகளாக மிக ஆடம்பரமாக வாழ்கையில் மற்றொரு சாரார் அன்றாடம் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்றனர். கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு முதலான பாதகங்கள் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணமாகவே தைரியமாக இத்தகையோரால் அனுதினமும் நடைபெறுவது சகஜமாகிவிட்டது.
பெண் விடுதலை பற்றி அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும் சமுதாய அக்கரை கொண்ட பல தலைவர்கள் தொடர்ந்து
எடுத்துரைத்து, பெணகளுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டி வருகின்ற போதிலும், நம் நாட்டில் பல பெண்களை ஏமாற்றி அவர்களது பெண்மையைச் சூரையாடுவதுடன் அவர்களை மாடுகளுக்கொப்பாகக் கருதி விலைமாதர்களாக விற்று விடும் கொடுமைகளும் பகிரங்கமாகப் பல நகரங்களில் தினமும் நடைபெறுவதை அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்த போதிலும், இக்கொடுமைகளைத் தடுக்கவும் இதில் பாதிக்கப் பட்ட பெண்ணினத்தைக் காக்கவும் ஒருவரும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.
இருப்பினும் நாட்டு மக்களிடையே பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கு மறுவாழ்வளித்துக் காத்து வருகின்றனர். ஒரு விபத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டு தன் சுய நினைவுகளை இழந்த நிலையி்ல் விலைமாதாக விற்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றிய நமது இன்றைய பாடலின் நாயகன் அவளைப் போற்றிப் பாதுகாத்து, அவளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கச் செய்து, அவள் சுயநினைவை அடைய வழி கோலுகிறான், அவள் மேல் காதலும் கொள்கிறான். சுயநினைவடைந்த பின்னர் அப்பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டாளா? அவனை ஏற்றுக் கொண்டாளா?
விடை சொல்கிறது மூன்றாம் பிறை.
கண்ணே கலைமானே கன்னி மயிலென
திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
பெண் விடுதலை பற்றி அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும் சமுதாய அக்கரை கொண்ட பல தலைவர்கள் தொடர்ந்து
எடுத்துரைத்து, பெணகளுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டி வருகின்ற போதிலும், நம் நாட்டில் பல பெண்களை ஏமாற்றி அவர்களது பெண்மையைச் சூரையாடுவதுடன் அவர்களை மாடுகளுக்கொப்பாகக் கருதி விலைமாதர்களாக விற்று விடும் கொடுமைகளும் பகிரங்கமாகப் பல நகரங்களில் தினமும் நடைபெறுவதை அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்த போதிலும், இக்கொடுமைகளைத் தடுக்கவும் இதில் பாதிக்கப் பட்ட பெண்ணினத்தைக் காக்கவும் ஒருவரும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.
இருப்பினும் நாட்டு மக்களிடையே பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கு மறுவாழ்வளித்துக் காத்து வருகின்றனர். ஒரு விபத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டு தன் சுய நினைவுகளை இழந்த நிலையி்ல் விலைமாதாக விற்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றிய நமது இன்றைய பாடலின் நாயகன் அவளைப் போற்றிப் பாதுகாத்து, அவளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கச் செய்து, அவள் சுயநினைவை அடைய வழி கோலுகிறான், அவள் மேல் காதலும் கொள்கிறான். சுயநினைவடைந்த பின்னர் அப்பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டாளா? அவனை ஏற்றுக் கொண்டாளா?
விடை சொல்கிறது மூன்றாம் பிறை.
கண்ணே கலைமானே கன்னி மயிலென
திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
வா அருகில் வா தா உயிரைத் தா
திரைப்படங்களுக்குத் திகில் கதை எழுதித் தாயாரிப்பதில் ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள் மிகவும் முயற்சியெடுத்து அதற்காக விசேஷமான அரிதாரம், காட்சியமைப்புகள் எனப் பல விதத்திலும் மிகவும் பாடுபட்டு, நிறைய செலவு செய்து தயாரிப்பார்கள். நம் இந்தியத் தயாரிப்பாளர்கள் மிகவும் புத்திசாலிகள். இத்தகைய அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, மிகவும் எளிய முறையில் இத்தகைய திகில் கதைகளை எழுதிப் படமாக்கி விடுவார்கள். இதற்கு இவர்கள் கடைபிடிக்கும் தொழில் நுட்பம் ஒரு பெண்ணுக்கு வெள்ளைச் சேலையைக் கட்டி விட்டு இரவு நேரத்தில் நிழலும் ஒளியும் கலந்த சூழ்நிலையில் நடமாட வைத்து, காட்சிக்கேற்றாற்போல் இசையமைத்து அசத்திவிடுவதே.
வா அருகில் வா தா உயிரைத் தா
திரைப்படம்: அதே கண்கள்
இயற்றியவர்: தெரிந்தால் தெரிவியுங்கள்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1967
ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா
பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒரு
நிழல் போலே அது நடந்து வரும்
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கண்ணும் கனிந்துருகும்
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா
சிறைக் கதவை ஏன் திறக்கவில்லை? - நீ
விடுதலையே கொடுக்கவில்லை
நானிருப்பேன் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு குரல் கொடுத்தே நிதம் அணைத்திருப்பேன்
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா
வா அருகில் வா தா உயிரைத் தா
திரைப்படம்: அதே கண்கள்
இயற்றியவர்: தெரிந்தால் தெரிவியுங்கள்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1967
ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா
பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒரு
நிழல் போலே அது நடந்து வரும்
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கண்ணும் கனிந்துருகும்
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா
சிறைக் கதவை ஏன் திறக்கவில்லை? - நீ
விடுதலையே கொடுக்கவில்லை
நானிருப்பேன் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு குரல் கொடுத்தே நிதம் அணைத்திருப்பேன்
வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
சிறிது காலத்துக்கு முன்னர் வரை நம் நாட்டில் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பின்னர் இல்லத்தரசிகளாகவே வாழ்ந்தனர். குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் கடமை அவர்களது கணவன்மார்களையே சேர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் ஒருவனது வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழித்து, தங்களது குழந்தைகளையும் ஆளாக்க முடிந்த நிலை நிலவியதேயாகும். பின்னர் உருவான அரசியல் சமுதாய சூழ்நிலைகளினால் விலைவாசி பரமபதப் பாம்பு போல் ஏறிய காரணத்தாலும், ஆடம்பரமாக வாழ வேண்டுமெனும் ஆசையினாலும் ஆண், பெண் இரு சாராரும் பணிக்குச் செல்வதும் திருமணமான பின்னரும் கணவன், மனைவி இருவரும் அலுவல் செய்து குடும்ப நிர்வாகத்துக்கான பொருளீட்டுவதும் வாடிக்கையாகி விட்டன. இருப்பினும் இக்காலத்திலும் பல பெண்கள் திருமணம் முடிந்த பின்னர் இல்லத்தரசிகளாக வாழ்க்கை நடத்துவதையே பெரிதும் விரும்பி ஏற்கின்றனர்.
இத்தகைய பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்களிடத்தில் காதல் கொண்டால் அவர்களது மனதில் எழும் எண்ணங்கள் பெரும்பாலும் தம் கணனுடன் சேர்ந்து இல்லற வாழ்வை இன்பமாகச் சுவைப்பதிலேயே இருப்பது வழக்கம். காதலித்தவனைக் கைப்பிடிக்க இயலாத சூழல் உருவானால் அத்தகைய பெண் வருத்தமுற்று வாடுவதும் பெரும்பாலும் தான் விரும்பிய ஆடவனுடன் சேர முடியவில்லையே எனும் ஏக்கத்தினாலேயே ஏற்படுகிறது.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா
ஆண்டு: 1962
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
இத்தகைய பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்களிடத்தில் காதல் கொண்டால் அவர்களது மனதில் எழும் எண்ணங்கள் பெரும்பாலும் தம் கணனுடன் சேர்ந்து இல்லற வாழ்வை இன்பமாகச் சுவைப்பதிலேயே இருப்பது வழக்கம். காதலித்தவனைக் கைப்பிடிக்க இயலாத சூழல் உருவானால் அத்தகைய பெண் வருத்தமுற்று வாடுவதும் பெரும்பாலும் தான் விரும்பிய ஆடவனுடன் சேர முடியவில்லையே எனும் ஏக்கத்தினாலேயே ஏற்படுகிறது.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா
ஆண்டு: 1962
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
திங்கள், 30 நவம்பர், 2009
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
............
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
.............
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.
எனும் மஹாகவி பாரதியாரின் பாடல் வரிகளில் கண்ட நெறியைப் பின்பற்றி நம்மிற்பலர் தாம் ஈட்டிய செல்வம் மற்றும் தமது நேரத்திலும் உழைப்பிலும் பெரும்பகுதியை சமுதாய நன்மைக்காகவே செலவிட்டு, சமூகத்தொண்டு செய்வது ஒன்றே தமது வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மனித உயிர்காக்கும் நல்ல நோக்கத்துடன் இரத்த தானம், கண் தானம், உடலுறுப்புகள் தானம் முதலான இயக்கங்களை ஏற்படுத்தித் தன்னுடன் பிற நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் பலரையும் ஒன்று சேர்ததுப் பாடுபடுகின்றனர்.
இத்தகைய தொண்டு செய்வோரைத் தலைவணங்கிப் போற்றுவோம். அதே சமயம் இத்தகைய அன்பர்கள் தமது நலத்தைத் தியாகம் செய்து பாமர மக்கள் நல்வாழ்வுக்கெனத் தொகுத்து அளிக்கும் தானங்களைப் பெற வேண்டிய சூழ்நிலையிலுள்ள மனிதர்களுக்கு, அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சை கிடைக்கப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆள்வோர் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கி, அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க ஆவன செய்யாது, தமது சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து செயல்படும் போக்கேயாகு்ம்.
இத்தகைய போக்கு மாறி அரசுகள் உண்மையிலேயே மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களால் நடத்தப் படும் சூழ்நிலை உருவாவது மிகவும் அவசியம். அத்தகைய நல்லாட்சி நாட்டில் நிலவுகையில் மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தொண்டு மென்மேலும் சிறந்து மனிதகுலம் மிகவும் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
திரைப்படம்: கருப்புப் பணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
............
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
.............
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.
எனும் மஹாகவி பாரதியாரின் பாடல் வரிகளில் கண்ட நெறியைப் பின்பற்றி நம்மிற்பலர் தாம் ஈட்டிய செல்வம் மற்றும் தமது நேரத்திலும் உழைப்பிலும் பெரும்பகுதியை சமுதாய நன்மைக்காகவே செலவிட்டு, சமூகத்தொண்டு செய்வது ஒன்றே தமது வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மனித உயிர்காக்கும் நல்ல நோக்கத்துடன் இரத்த தானம், கண் தானம், உடலுறுப்புகள் தானம் முதலான இயக்கங்களை ஏற்படுத்தித் தன்னுடன் பிற நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் பலரையும் ஒன்று சேர்ததுப் பாடுபடுகின்றனர்.
இத்தகைய தொண்டு செய்வோரைத் தலைவணங்கிப் போற்றுவோம். அதே சமயம் இத்தகைய அன்பர்கள் தமது நலத்தைத் தியாகம் செய்து பாமர மக்கள் நல்வாழ்வுக்கெனத் தொகுத்து அளிக்கும் தானங்களைப் பெற வேண்டிய சூழ்நிலையிலுள்ள மனிதர்களுக்கு, அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சை கிடைக்கப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆள்வோர் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கி, அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க ஆவன செய்யாது, தமது சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து செயல்படும் போக்கேயாகு்ம்.
இத்தகைய போக்கு மாறி அரசுகள் உண்மையிலேயே மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களால் நடத்தப் படும் சூழ்நிலை உருவாவது மிகவும் அவசியம். அத்தகைய நல்லாட்சி நாட்டில் நிலவுகையில் மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தொண்டு மென்மேலும் சிறந்து மனிதகுலம் மிகவும் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
திரைப்படம்: கருப்புப் பணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
ஞாயிறு, 29 நவம்பர், 2009
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
உலகில் உயிர் வாழ்க்கையையே வியாபாரமாக்கிய மனிதர்களின் கொடுஞ்செயலால் இன்று பொருளாதார ஏற்றத் தாழ்வு உலகெங்கிலும் பெருமளவில் நிலைபெற்றுள்ளது. மனிதரில் ஒரு சாரார் தேவைக்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்து ஆடம்பர வாழ்க்கை நடத்துவதும், மற்றொரு சாரார் தினமும் வயிற்றுப் பசிக்கு உணவிடவே, "திண்டாடித் திண்ணைக் காலைப் பிடிக்கும் நிலையில்" திணறுவதும் அன்றாடம் நிகழும் பரிதாபகரமான நிலை உலகில் நிலவுகிறது. இருப்பினும் செல்வச் செழிப்போடு வாழ்பவர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனரா? வறுமையில் வாடுவோர் அனைவரும் மகிழ்ச்சி இன்றித் தவிக்கின்றனரா? எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
பெரும் செல்வந்தர்களில் பலர் தம் மனதுக்குப் பிடிக்காத சூழ்நிலையில் தங்கள் துன்பங்களை வெளியிடவும் முடியாத சங்கடமான மனநிலையில் வாழவேண்டிய கட்டாயத்தில் தவிப்பதும், கையில் சல்லிக்காசும் இல்லாமல் தவிப்பவர் பலர் அன்றாடம் கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்து, நிம்மதியாகத் தூங்கி, வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிப்பதும் நம் கண்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம்.
எத்தனைக் கோடிப் பணமிருந்தாலும் நிம்மதியை விலைககு வாங்க முடியுமா?
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
திரைப்படம்: முத்து மண்டபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா
இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
பெரும் செல்வந்தர்களில் பலர் தம் மனதுக்குப் பிடிக்காத சூழ்நிலையில் தங்கள் துன்பங்களை வெளியிடவும் முடியாத சங்கடமான மனநிலையில் வாழவேண்டிய கட்டாயத்தில் தவிப்பதும், கையில் சல்லிக்காசும் இல்லாமல் தவிப்பவர் பலர் அன்றாடம் கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்து, நிம்மதியாகத் தூங்கி, வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிப்பதும் நம் கண்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம்.
எத்தனைக் கோடிப் பணமிருந்தாலும் நிம்மதியை விலைககு வாங்க முடியுமா?
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
திரைப்படம்: முத்து மண்டபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா
இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)