செவ்வாய், 12 ஜூலை, 2011

இன்பம் எங்கும் இங்கே

தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

எனும் குறளில் வள்ளுவர், மனைவி எனும் உயரிய இடத்தைப் பெற்ற பெண்ணின் இலக்கணத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். மனைவியானவள் முதற்கண் தன்னைக் காத்துக்கொண்டு தனது கணவனைப் பேண வேண்டும். அதாவது தனது உடல் நலத்தையும் தன்மானத்தையும் சமுதாயத்தில் ஒரு இல்லத்தரசிக்குரிய மரியாதையையும் காத்துக்கொண்டு கணவனது தேவைகளறிந்து பணிவிடை செய்து அவனது உடல் நலம், தன்மானம் மற்றும் மரியாதையை நிலைநிறுத்த வேண்டும். அதன் பின்னர் தகுதிவாய்ந்த பெருமை கொள்ளத் தக்க சொற்களைப் பேசி தனது வாக்கைக் காப்பாற்றி எக்காலத்தும் தனது கடமையை சோர்வின்றிச் செய்ய வேண்டும் என்பதே இக்குறள் கூறும் நெறியாகும்.

மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். தன் வாழ்நாள் உள்ளளவும் தன்னுடைய கணவனுக்கு அவனது கடமைகள் அனைத்திலும் உறுதுணையாக விளங்குவதுடன் அவனுடை சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவனது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக அமைக்க வேண்டும். நமது பாரத சமுதாயத்தில் குடும்பப் பெண்களுள் பெரும்பாலோர் இத்தகைய உன்னதமான பணியை ஒழுங்காகச் செந்து வருவதாலேயே தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட நமது நாடு கலாச்சாரத்தில் உயர்ந்ததாகக் கருதிப் போற்றப் படுகிறது.

இத்தகைய பெண்ணைப் பெண்ணரசி என்று நம் முன்னோர்கள் புகழ்ந்தனர். பெண்மையை ஆளும் உன்னத குணம் வாய்ந்தவள் என இதற்குப் பொருள் கொள்ளலாம். இத்தகைய பெண்களை நாம் எங்கும் தேட வேண்டியதில்லை. நம்முடனே இன்று பழகும் மூத்த நண்பர்களிடையே நாம் இத்தகைய பெண்களைக் காண முடியும்.

மழலைகளின் அன்புக்குரிய தாத்தாவான சீனுத் தாத்தாவின் அன்புக்குரிய மனைவியான சரோஜா பாட்டி இன்று நம்மிடையே வாழும் பெண்ணரசிகளுள் ஒருவர். 80 வயதை நெருங்கும் சீனு தாத்தாவுடன் அவர் இன்றும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். திருமணமான புதிதில் கணவனிடம் அன்பு கொண்ட ஒரு மனைவி கணவனிடத்தே எத்துணை வாஞ்சையைப் பொழிவாரோ அதை விடவும் மேலான அன்பைத் தன் கணவரிடம் கொண்டுள்ள நிலை கீழ்க்கண்ட இணையப் பக்கத்திலும் அதனுடன் இணைந்துள்ள பிற பக்கங்களிலும் விளங்கும்.

http://mazhalaigal.com/entertainment/photo/photo-001/0716vs11s_snow.php

தாத்தாவும் பாட்டியும் சிறு குழந்தைகள் போல விளையாடுவது கண்டு துள்ளாத மனமும் துள்ளும்.

சரோஜா பாட்டிக்கு இன்று பிறந்த நாள். இந்த நன்னாளில் அவரை வாழ்த்தி வணங்கி அவரது நல்லாசிகளை வேண்டுகிறோம். அவரும் சீனு தாத்தாவும் வாழ்வது போலவே நாம் அனைவரும் நம் வாழ்நாள் முழுவதும் என்றும் ஆனந்தம் பொங்கும் நல்வாழ்வு வாழ வேண்டுமென இறைவனை வேண்டுவோம்.

சரோஜா பாட்டிக்கு இன்றைய பாடலைக் காணிக்கையாக்கி அவர் இருக்கும் இடத்தில் இன்பம் என்றும் ஆட்சி புரிய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

இன்பம் எங்கும் இங்கே

திரைப்படம்: பெண்ணரசி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன்

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது
வாழ்வின் துணை தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது
வாழ்வின் துணை தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

பொங்கி வரும் நிலவைக் கண்டு
அல்லி முகம் சிவக்குது
போதையூட்டும் தேனைச் சிந்தி
ஜாதிமல்லி சிரிக்குது
சிந்து பாடி வண்டு தேன் தேடும் காட்சி கண்டு
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுது
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுது

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

அன்பு மயமான இந்த உலகிலே ஓஓஓஓஓ
பலரறிய அரசன் அரசியாவோம் விரைவிலே
ஆ.ஆ.ஆ.ஆஆஆஆஆஆஆஆ

உலவும் தென்றலிலே உல்லாசம் காணுவோம்
நிலவும் வானும் போல குலவி மகிழுவோம்
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
என்னையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
என்னையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக