செவ்வாய், 12 ஜூலை, 2011

மடி மீது தலை வைத்து

உறவின்றி உலக வாழ்வில்லை. ஒருவரும் தனக்கென மட்டும் வாழ இயலாது. இன்ப துன்பங்களையும் மற்ற பல பொருட்களையும் செயல்பாடுகளையும் பலரும் பகிர்ந்து அனுபவித்தலே வாழ்க்கையாகும். இவ்வுலகில் பிறந்த நாள் முதல் சில காலம் வரை பெற்றோரும் உற்றாரும் பெரும்பான்மையான உறவாக விளங்கினாலும் வளர்ந்து உலக வாழ்க்கையெனும் போராட்டத்தில் ஈடுபட்டுப் பாடுபடும் காலம் வருகையில் நண்பர்களும் சமூகத்தினருமே பெரும்பான்மையான உறவாக அமைகின்றனர்.

இதற்கிடையில் உரிய காலம் வருகையில் பலருக்கு இல்லற வாழ்வு பெற்றோரால் அமைத்துத் தரப்படுகிறது. ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே தம் மனதைக் கவர்ந்த ஒருவரோடு காதல் ஏற்பட்டு, அக்காதல் கனிந்து கல்யாணத்தில் நிறைவடையும் இனிய வாழ்வு அமைகிறது.

காதலில் அதிக இன்பம் தருவது காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றவர் விட்டுப் பிரியாமையை விரும்பும் நிலையே. இரு மனங்கள் ஒன்றாய் இணைந்த பின்னர் அங்கே புணர்ச்சி பழகுதல் அவசியமற்றதாகிறது. துணை தேடும் மனங்களுக்குத் தக்க வாழ்க்கைத் துணையைத் தேடித் தருவதே காதல். மற்றதெல்லாம் காதல் ஆகாது.

சின்னஞ்சிறு வயதில் உலக வாழ்வில் படும் துன்பங்களை மறக்க ஒருவருக்குத் தேவை தஞ்சமென அடைய ஒரு தாயின் மடி. வளர்ந்து பருவமடைந்த பின்னர் அத்தாயின் மடி பலருக்குக் கிடைப்பதில்லை. தாயின் மடி கிடைக்காவிடிலென்ன, கனவிலும் மறவாக் காதல் உறவு கொண்ட அன்பரின் மடியே அடைக்கலம் என்று அடைவது பேரின்பமல்லவா!

மடி மீது தலை வைத்து

திரைப்படம்: அன்னை இல்லம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா ஓஹோ ம்ம்ம்

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் அழகிலே காலம் நடக்கும் உறவிலே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக