வெள்ளி, 8 ஜூலை, 2011

கிரிதர கோபாலா

17 செப்டம்பர் 2010 - இன்று எல்லோர் இதய்ததில் என்றும் ஒலித்துககொண்டிருக்கும் திருமதி எம் எஸ் சுப்பலக்ஷ்மி அவர்களது பிறந்த நாள் என்று சற்று முன் தான் இந்த் மறதிககார சீனுவாசனுக்கு நினைவிற்கு வந்தது என்னையே நொந்து கொண்டு இந்த 20ம் நூற்றாண்டு மீரா அம்மைக்கு நான் அனுப்பிய் கடைசி பிறந்த நாள் (அதே வருடம்- டிசம்பர் 11ம் தேதி மறைந்து விட்டார் வாழ்த்துக்களை கண்களில் நீர் மலக (சத்தியமாகச் சொல்கிறேன்) இத்துடன் அனுப்புகிறேன்

சீனு தாத்தா

இன்று திருப்பதி சானலிலும் மாலை இவரது முழு சரித்தரமும் காண்பித்து மரியாச் செலுத்தினர் ஆரம்பமே "கௌசல்யா சுப்ரஜா ராமா "என்று திருமலையைக் காட்டினார்கள் என்றும் அவருடைய இசை பசுமையாக இருக்கும்.

இணையப் பாட்டி விசாலம்

டிடிடி (TTD) சானல் எம் எஸ்ஸைப பற்றி அளித்த காட்சியைப் ப்ற்றி அறிவித்த எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திருமதி விசாலத்திற்கு மிகப் பணிவுடன் கூற ண்டுகிறேன். பொதுவாக அரசியல் வம்பு பேச் விருப்பமேயில்லாத எனது உள்ளக்கிடக்கையை கூறாமல் இருக்க
முடியவில்லை. கடவுளீன் பரிபூரண அருளுடன் இருந்து எல்லோரையும் தெய்வீக இசையினால் இன்புறவைத்து கொண்டே வாழ்ந்து இறைவனடி சேர்ந்த அந்த மாபெரும் அம்மணியார் பிறந்த தமிழ்நாட்டு அரசாங்கம் அவருக்குத் தெலுகு தேசத்திலுள்ள் திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கௌரவத்தில் பாதியாவாது கொடுத்ததா?

ஆமாம், திருமதி விசாலம் அம்மையாரே, கடு முயற்சியால் உருவாக்கப் பட்ட எனது வாழ்த்துக்களைப் பார்த்து விட்டு "நன்றாயிருக்கிறது" என்று ஒரெ ஒரு சொல்லை வெளிப்படுத்தியிருந்தால், முதிர்ந்த வயதிலும் புகழ்ச்சிக்காக் ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கு மகிழ்ச்சியாயிருந்திருக்கும்!

சீனு தாத்தா

திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் திருப்பதி வெங்கேடாசலபதி மேல் பாடிய சுப்ரபாதம் நமது பாரதத் திருநாட்டில் ஒலிக்காத வீடே இல்லை எனலாம். இசைக்கச்சேரி மேடைகளில் மட்டுமின்றிப் பல மாபெரும் தேசத்தலைவர்கள் பங்குபெற்ற கூட்டங்களிலும் முதலில் இவர் பாடும் இறைவணக்கப் பாடல் இடம்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. கணீரென்ற இனிமையான மனதை மயக்கும் குரல். ஒரு சிறிதும் சுருதி பிசகாத இசை லயம், தேர்ந்த உன்னத இசை ஞானம் ஆகியவை இவரைப் பிற அனைத்துப் பாடகர்களிலிருந்தும் மிகவும் உயர்ந்த நிலையில் அவரது வாழ்நாள் உள்ளளவும் நிறுத்தி வைத்தது.

ஆகிரா
http://www.mazhalaigal.com

கிரிதர கோபாலா

திரைப்படம்: மீரா
இயற்றியவர்: பாபநாசம் சிவம்
இசை:எஸ்.வி. வெங்கட்ராமன், கே.வி. நாயுடு
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
ஆண்டு: 1945

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா
பாலா கிரிதர கோபாலா

ஸ்யாமள சரீர கௌஸ்துப ஹாரா
ஸ்யாமள சரீர கௌஸ்துப ஹாரா
பீதாம்பர தர ப்ரபோ முராரே
பீதாம்பர தர ப்ரபோ முராரே

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா

நந்த சுகுமார மனமோஹனாகார
நந்த சுகுமார மனமோஹனாகார
ப்ருந்தாவன ஜர துளசீ ஹார
ப்ருந்தாவன ஜர துளசீ ஹார

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா

கிரிதர கோபாலா.. ஆ...ஆ...
கிரிதர கோபாலா கம்ச விகார
கிரிதர கோபாலா கம்ச விகார
மீரா மானஸ சரோ விஹார
மீரா மானஸ சரோ விஹார

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா
பா...ஆஆ லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக