வெள்ளி, 3 டிசம்பர், 2010

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்தது போல மனிதன் தானும் கெட்டு அழிவதுடன் சக மனிதரையும் சமுதாயத்தையும் அழிவுப் பாதையில் தள்ளுவது சுயநலத்தினாலேயே. தான் மட்டும் நன்மையடைந்தால் போதும் என எண்ணி வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும் வீரபாண்டியக் கட்டபொம்மனைப் போலவே வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டு மாண்டான் என்பதை சரித்திரம் கூறுகிறது.

நமது வாழ்நாளில் நாம் என்றும் பிறரது துயர் களைய முயன்று பாடுபடுவோமெனில் நம் துயர் களையப் பிறர் யாவரும் முன்வந்துதவுவர். இது இயற்கை நியதி. எக்காலமும் தன்னைப் பற்றியே எண்ணிச்செயல்படுபவன் துயருறுகையில் வேறு யாரும் அவனது உதவிக்கு வர மாட்டார். வாழ்க்கை என்பது என்றோ ஒரு நாள் தொடங்கி மற்றொரு நாள் உறுதியாக முடியக்கூடியது. வாழ்நாளைப் பயனுள்ளதாக ஆக்க ஓரே வழி தன்னை மட்டுமன்றித் தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர் மற்றும் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டிரங்கி உதவுவதொன்றேயாகும்.

மனிதரில் பெரும்பாலோர் சுயநலவாதிகளாக இருப்பதினாலேயே நாட்டில் சுரண்டல்காரர்களின் ஆட்சி தலைமுறை தலைமுறையாகக் கொடிகட்டிப் பறக்கின்றது. இலவசங்களில் ஆசை வைத்துத் தம் பொன்னான வாக்குகளை மக்கள் ஆளத் தகுதியற்றவர்களுக்கு அளிப்பதனால் நாட்டிலெங்கும் இயற்கை வளங்கள் குன்றி இன்று குடிநீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்நிலைக்குக் காரணமானவர்களை விலக்கிவிட்டு உண்மையாக நல்லாட்சி தருபவர் யார் எனப் பகுத்தறிவால் அறிந்து மக்கள் செயல்பட்டால் மட்டுமே உலகம் அழிவிலிருந்து மீளக்கூடும். அத்தகைய தகுதியுள்ளவர் யாரும் இல்லாவிடில் தகுதியற்றவர்களைப் பதவியில் இருத்தாமல் வருவது வரட்டுமெனத் துணிவுடன் செயல்பட வேண்டும்.

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

அம்மா பசி என்றொரு கூக்குரல்
அது தான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப்பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

தேசமிது செஞ்சது ஒனக்கு ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு? ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேட்கவுமில்ல
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
_________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக