வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?

என்று பாரதி பாடக் காரணம் அன்று நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த வெள்ளையர்கள் நாட்டு மக்களிடையே ஜாதி மத பேத உணர்வைத் தூண்டி, அதனால் மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கி, அந்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி நாட்டைக் கொள்ளையடித்து வந்ததேயாகும். சுதந்திரப் போராட்டத்தின் நிறைவாக இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயருக்கு ஆதரவு தர வேண்டுமெனில் போர் முடிந்ததும் நம் நாட்டுக்கு விடுதலை தர வேண்டும் எனும் ஒப்பந்தத்தின் வழியாக நாம் சுதந்தரம் அடைந்த பின்னர் நம் நாட்டை ஆளத்தொடங்கி இன்று வரை ஆண்டுவரும் அரசியல்வாதிகள் ஆங்கிலேயன் கையாண்ட அதே ஜாதி மத பேதமென்னும் ஆயுதத்தை ஆங்கிலேயரை விடவும் மிகத் திறமையாகக் கையாண்டு அதி்ல் வெற்றியும் பெற்று, தொடர்ந்து நாட்டைச் சுரண்டி வருகின்றனர்.

சாதி மத பேதம் ஒழியப் பாடுபடுவதாகப் பொய்யாகப் பிரசாரம் செய்துவரும் இவர்கள் அதற்கெனக் கூறும் உபாயம் கலப்பு மணம். உண்மையில் கலப்பு மணங்களால் சாதி மத பேதம் ஒழிகிறதா எனில் இல்லை என்பதே உண்மை. மாறாக இத்தகு கலப்பு மணங்களால் ஏற்கெனவே இருக்கும் சாதி மதச் சண்டை மேலும் வலுத்து சமுதாயத்தில் இருக்கும் பிரிவினை அதிகமாவதை அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்குத் துணைபோகும் கூட்டமொன்று திரைப்பட உலகில் என்றும் உள்ளது. இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் சாதி மத பேதத்தை ஒழிக்கக் கலப்பு மணங்கள் உதவுவதாகக் காட்டி ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, நாட்டில் ஒற்றுமை நிலவிவிட்டது போன்ற ஓர் பொய்யான மன நிறைவை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துவதில் மிகவும் முனைப்பாக செயல்படுகின்றனர்.

பாரதி ஆங்கிலேயர்களுக்குக் கூறிய அதே எச்சரிக்கை மொழியை இவர்களுக்கும் கூறியதாக எடுத்துக் கொண்டு சாதி மத விவகாரங்கள் மக்களின் பிரச்சினை, அதில் அரசியல்வாதிகளோ, திரைத் துறையினரோ தலையிடாதிருக்க வேண்டும் எனும் மனப்பாங்கு மக்களிடையே ஏற்பட்டாலன்றி சாதி மத சண்டைகள் ஓயா.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

திரைப்படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1980

ஓ.. தந்தனன தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன
ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
ஹோஹோஹோஹோ
தந்தனன ஹோஹோஹோஹோ தந்தனன
ஹோஹோஹோஹோ தந்தனன
ஹோஹோஹோஹோ தந்தனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ஒரு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை நனனன நனன நனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ள காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
_________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக