செவ்வாய், 30 நவம்பர், 2010

தாமரைப் பூக் கொளத்திலே

நமது சமுதாயத்தில் பொதுவில் ஒரு ஆண் இளம் பருவத்தில் தன் புஜ பலத்திலும் அறிவுத் திறமையிலும் மிகவும் பெருமை கொண்டு தனக்கு நிகர் எவருமில்லையெனும் விதமானதொரு இருமாப்புடனே திரிவான். இந்நிலையில் அவன் ஒரு பெண்ணைக் கண்டு அவள் மேல் காதல் கொண்டு தன் மனதைப் பறிகொடுக்கையில் அந்த இருமாப்பு நிலை சற்றே தளர்ந்து அவளது பெண்மைக்கு அடிமையாகிறான். அவள் இல்லாமல் தனக்கு வாழ்வே இல்லை எனும் எண்ணம் மேலிட ஒரு மயக்க நிலையை எய்துகிறான். இயல்பாகவே தன் உள்ளத்தில் எழும் ஆசைகளை மறைக்காமல் வெளிக்காட்டும் போக்கினால் அந்த ஆணின் நிலையை அவன் காதல் கொண்ட அப்பெண் அறிந்து கொண்டு அவனைத் தன் எண்ணத்திற்கு ஏற்ப நடக்க வைக்கத் தொடங்குகிறாள். இவ்வாறு காதலில் கட்டுண்ட ஆண்மகன் தன் சுதந்திரத்தில் பாதியை இழக்கிறான்.

பின்னர் திருமணம் முடிந்து கணவன் மனைவி எனும் பந்தத்தினால் பிணைக்கப் படுகையில் மீதமுள்ள சுதந்திரத்தையும் சிறிது சிறிதாக இழக்கிறான். ஆரம்பத்திலே அவன் தன் பலத்திலும் அறிவுத் திறனிலும் கொண்ட கர்வம் அவனை விட்டு எங்கோ பறக்க அவன் தன் மனையாள் ஆட்டுவித்த படி பம்பரம் போல ஆடுகிறான். பிறகு பிள்ளைகள் பிறந்து வளர்த்து விட்டால் அவன் ஒரு சிறைக்கைதியைப் போல் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதொன்றே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு தன்னைப்பற்றிய எண்ணங்களைப் பெரிதும் குறைத்துக் கொண்டு தன் பிள்ளைகளுக்காகவும் அவர்களது எதிர்கால வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செய்கிறான்.

இங்கே அவன் தனது சுதந்திரத்தைத் தானே முன்வந்து இழப்பதில் மகிழ்ச்சி கொள்கிறான். அவனது தியாகத்திற்கு பதிலாக அவன் குடும்பம் எனும் பெரும் செல்வத்தைப் பெற்று அன்பெனும் கடலில் மூழ்கித் திளைக்கும் பேறு பெருகிறான்.

தாமரைப் பூக் கொளத்திலே

திரைப்படம்: முரடன் முத்து
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி. ஜி. லிங்கப்பா
டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஓஹோஹோஹோ ஒஹோஹோஹோ
ஒஹோஹோ ஓஹோஹோஹோஹோ
ஓஹோஹோஹோ ஒஹோஹோஹோ
ஒஹோஹோ ஓஹோஹோஹோஹோ
ம் ஹ்ம் ம் ஹ்ம் ம் ஹ்ம் ம் ஹ்ம்
ம் ஹ்ம் ஹ்ம் ம் ஹ்ம் ஹ்ம்

தாமரைப் பூக் கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே
தாமரைப் பூக் கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?

மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?

தூங்கும் போது சிரிக்கிறான் தூக்கத்தையே கெடுக்கிறான்
ஓஹோஹோ ஓஹோ ஓஹோஹோ
தூங்கும் போது சிரிக்கிறான் தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே இப்போ
இடையைப் பாத்து மறந்து விட்டான் முன்னாலே

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?

பருவம் காக்கும் முந்தானே பறக்கும் போது வந்தானே
ஆஹாஹா ஆஹா ஆஹாஹா
பருவம் காக்கும் முந்தானே பறக்கும் போது வந்தானே
கர்வமெல்லாம் விட்டு விட்டு நின்றானே உன்
கைகளுக்குள் பிள்ளையாகிக் கொண்டானே

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?

மேடையிட்டுக் கோலமிட்டு மேளதாள விருந்து வைச்சு
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா அந்த
மயக்கத்திலே முழுக் கதையும் சொல்வோமா?
பறந்திடலாமா ஒன்றாய்க் கலந்திடலாமா?
பறந்திடலாமா ஒன்றாய்க் கலந்திடலாமா?

தானே தன்னே தந்தானே தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே தானே தன்னே தந்தானே
_________________________

1 கருத்து:

  1. புதைந்து போயிருந்த நினைவுகளைக் கொண்டு வந்து புத்துணர்ச்சி கொடுத்தீர்கள்... இந்தப் பாடல் எல்லாம் மறந்தே விட்டது.

    பதிலளிநீக்கு