வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

தமிழ்த் திரையுலகம் இசைத்துறையில் அன்று முதல் இன்றளவும் மிகவும் முனைந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிவோம். இந்தியாவின் பாரம்பரிய இசை கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி மற்றும் கிராமியப் பாடல்கள் முதலிய வடிவில் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. தமிழ் இசையில் மிகவும் திறமை வாய்ந்த முன்னோடிகள் எனக் கருதப்படும் பிரபல இசைக் கலைஞர்கள் உலகப் புகழ் பெறுவதற்குத் தமிழ்த் திரையுலகில் அவர்கள் பெற்ற பங்கு ஒரு முக்கியக் காரணமாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து மீண்டு நம் நாடு சுதந்திரமடைவதற்கு சிறிது காலம் முன்பிருந்தே தமிழ்த் திரையுலகம் பல திரைப்படங்களை உருவாக்கி வந்துள்ளது.

தொடக்க காலத்தில் பெருமளவு கர்நாடக சங்கீதத்தையே தழுவி இயற்றி இசையமைக்கப் பட்ட பாடல்கள் மிகவும் அதிக அளவில் திரைப்படங்களில் இடம்பெற்றன. இடையிடையே ஹிந்துஸ்தானி இசை வடிவில் அமைந்த பாடல்களும் அவ்வப்பொழுது சேர்ந்து ஒலித்தன. நாளடைவில் இசை பாமர மக்களைச் சென்று அடையும் நோக்குடன் மெல்லிசைப் பாடல்கள் பெரும்பாலும் திரையுலகை ஆக்கிரமித்தன. இத்தகைய மெல்லிசைப் பாடல்களிலும் கர்நாடக இசையின் சாயலே அதிகம் காணப்பட்டது. இதனூடே மேல்நாட்டு இசையின் தாக்கத்தாலும் வட இந்தியத் திரையுலகின் தாக்கத்தாலும். மெல்லிசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மெல்லிசைப் பாடல்களுடன் கலந்து பல கிராமிய இசைப்பாடல்களும் வெளிவந்தன. இருப்பினும் கிராமியப் பாடல்கள் பெருமளவு இடம் பெறாத நிலை தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்கத்தை உருவாக்கியது.

அத்தேக்கத்தைப் போக்கி ஊக்கத்தை அளித்து கிராமிய இசைப்பாடல்கள் தமிழ்த் திரையுலகில் மிகவும் அதிகமான அளவில் இடம் பெற வைத்த பெருமை இசைஞானி இளையராஜாவைச் சேரும் எனில் அது மிகையாகாது. இளையராஜாவின் திரையுலகப் பிரவேசம் அது வரையில் அதிகமான பாடல்களைப் பாட வாய்ப்பின்றி இருந்த பாடகர்கள் பலருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. குறிப்பாக "கொஞ்சும் சலங்கை" திரைப்படத்தில் வரும் "சிங்கார வேலனே தேவா" எனும் மிகப் பிரபலமான பாடல் உட்படல் பல இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடிய ஜானகி இசை ஞானியின் இசையமைப்பில் மேலும் பல பாடல்களைப் பாடி முன்பிருந்ததை விட மிகவும் பிரபலமடைந்தார்.

இத்தகைய மாற்றம் நிகழ்ந்தது அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமே..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

திரைப்படம்: அன்னக்கிளி
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ஆஆஆ... ஆ ஆஆஆஆஆ..ஆ..
லாஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத...
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காதே காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பேஞ்சா
மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல்
புள்ளி போட்ட
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி
நெல்லருக்கப் போகையில் யார் கண்ணிரண்டும் காவலடி

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

1 கருத்து:

  1. தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html

    பதிலளிநீக்கு