திங்கள், 4 ஜனவரி, 2010

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

மனிதத் தாயின் கருவறையிலிருந்து வெளியேறி பூமித்தாயின் மடியில் விழுந்த நாள் முதலாய் நாம் காண்பவற்றையும், பிற புலன்களால் உணர்பவற்றையும் தெரிந்து கொள்ளும் முயற்சியில் புதிய அறிவையும் அனுபவங்களையும் பெற்று வாழ்ந்து வருகின்ற நிலையில், பொறுப்பேதுமின்றி விளையாடித் திரியும் பிள்ளைப் பருவம் முடிந்ததும், வாழ்க்கை ஒரு போராட்டம் என உணர்கிறோம். அப்போராட்டத்துக்கு நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொண்டு பல விதமான இலக்குகளை விதித்துக் கொண்டு அவற்றை அடையும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுகிறோம். காலம் செல்லச் செல்ல இலக்குகள் மாறுவதும், வெற்றி, தோல்வி எனும் இருவேறு நிலைகளால் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அலைபாய்வதும் எனப் பல காலம் இருந்த பின்னர் உலகே மாயம், வாழ்வே மாயம் எனப்பல தத்துவங்களைப் பற்றிப் பேசி ஒரு வித விரக்தி நிலையில் நாம் காலத்தைக் கழிக்கிறோம்.

இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவும், கோடை, வசந்தம், குளிர்காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருதல் போலவும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு நிலைகளை உணர்ந்த போதிலும் அவ்வித வேற்றுமைகளால் மனம் சஞ்சலமடையாமல், அமைதியான நிலையில் சலனமற்றிருக்கும் தன்மையை நாம் அடைவோமேயானால் வாழ்வின் இடர்ப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் தொடர்ந்து வாழ்வை உற்சாகமுடன் வாழ வழி காணலாம்.

புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில் சென்ற ஆண்டின் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் உடன் அழைத்துச் செல்கையில், கடந்த காலத்தின் துன்பங்களையும் தோல்விகளையும் மூட்டை கட்டி எங்காவது போட்டுவிட்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனும் மனப்பாங்குடன் வருங்காலத்தை வரவேற்போம்.

மஹாகவி பாரதியார் தமது பகவத் கீதை உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.

"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ்
செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்"


நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்


திரைப்படம்: நூற்றுக்கு நூறு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1971

பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

மாதா கோவில் மணியோசை நம்மைப் போற்றும் அருளோசை
தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளியுண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு
உயிரே நெருங்கிவா
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத் தேடி வாராயோ?
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடிவா
ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும்
அழகைத் தேடி வா
உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

சனி, 2 ஜனவரி, 2010

தோல்வி நிலையென நினைத்தால்

நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நம் மனதில் நிலைநிறுத்திச் செயல்படும் லட்சியம் "வெற்றி" ஆகும். வெற்றி என்பது ஒருவரின் நோக்கத்துக்கேற்றவாறு தனித்தன்மை பெறுகிறது. ஒருவரது வெற்றி மற்றொருவரது தோல்வியாகலாம் அல்லது மற்றவரது வெற்றியும் ஆகலாம், மற்றவரின் வெற்றி தோல்வியுடன் தொடர்பின்றியுமிருக்கலாம்.

ஒரு மருத்துவரது வெற்றி அவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை குணப்படுத்துவதில் கிடைக்கிறது. ஒரு நோயாளியின் வெற்றி நோயிலிருந்து குணமடைந்து வாழ்வதில் கிடைக்கிறது. இங்கே மருத்துவர் வெற்றி கண்டால் நோயாளியும் வெற்றி காண்கிறார். சூதாட்டத்தில் பொருளை இழப்பவன் தோல்வியடைகையில் அவன் இழந்த பொருள் தனக்குக் கிடைக்கப்பெற்ற வேறொருவன் வெற்றியடைகிறான்.

வியாபாரி விற்பனை அதிகரித்து லாபம் நிறைய ஈட்டுகையில் வெற்றி பெறுகிறான். ஒரு சமூக சேவகன் சமூக நீதியை நிலை நாட்டுவதில் வெற்றியைக் காண்கிறான், அச்சமூக சேவையில் அவன் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரையும் இழந்தாலும் வெற்றிபெற்றவனாகவே கருதப்படுகிறான்.

ஒரு துறையில் வெற்றி பெற்றவன் அதே துறையில் வெற்றி பெறாத மற்றொருவனைத் தோல்வியடைந்ததாக எண்ணுதல் அறிவுடைமை ஆகாது. மற்றவன் எத்துறையில் வெற்றி பெற்றான் என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்தறிதல் நன்று.

எத்துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி மிகவும் அவசியம். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்க முயல்கையில் பல இடையூறுகள் வந்துற்ற போதும், அவற்றால் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விடாமல், தொடர்ந்து பாடுபடுபவன் வெற்றி இலக்கை எய்துவது திண்ணம்.


தோல்வி நிலையென நினைத்தால்


திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1986

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எனும் பழமொழியை அனைத்து இந்திய மக்களுக்கும் நன்கு விளங்க வைத்தது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களி்ன் ஆதிக்கம். அவர்கள் நம் நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்த ஏதுவாயிருந்தது கி.பி. 1608 ஆண்டில் அவர்கள் நம் நாட்டினுள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் கிழக்கிந்தியக் கம்பெனி எனும் பெயரில் உள்ளே நுழைந்த காலத்தில் நம் நாடு பல்வேறு சிறு தேசங்களாகப் பிரிந்திருந்து அவற்றை ஆண்ட மன்னர்கள், சிற்றறரச்கள் முதலானோ்ர் ஒருவரோடொருவர் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காகப் போரிட்டு வந்த நிலைமையேயாகும்.

நம் நாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு சுதந்திர இந்தியாவை உருவாக்க எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து 90 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து போராடி, வெற்றி கண்டு நாமெல்லோரும் சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தித் தந்தனர். அவ்வாறு அவர்கள் அரும் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே முற்றிலும் இழந்து விட்டோம். இன்று நம் நாட்டில் அரசு நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டமடைந்த நிலையில் அந்நிய நாட்டவர் மூலதனத்தில் தொழிற்சாலைகள் நடப்பதும், அவற்றில் நம் நாட்டவர்கள் ஊதியத்துக்காகப் பணி செய்வதும் வாடிக்கையாகியுள்ளது.

இத்தகைய இழிநிலையடையக் காரணம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை உருவானதுவே ஆகும். இதற்கு சாதிமத பேதமும் தனி மனித ஒழுக்கக் குறைவுமே முக்கியக் காரணங்கள். "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?" என்ற பாரதியின் பாட்டு இக்காலத்திற்கும் பொருந்துவதாகும். சாதிமத பேதத்தைத் துறந்து ஒற்றுமையாய் வாழ்ந்து நாட்டை உயர்த்தப் பாடுபடுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.


ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்


திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகததை நிறுத்த முடியுமா?

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

வியாழன், 31 டிசம்பர், 2009

அதிசய ராகம் ஆனந்த ராகம்

தமிழ்க் கவிஞர்களுள் சாமான்ய மக்கள் முதல் கல்வியிலும் தமிழ் இலக்கிய ஞானத்திலும் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் கவியரசு கண்ணதாசன். கருத்தைக் கவரும் தமிழ்க் கவிதைகளை எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு எளிமையாகவும், இனிமையாகவும் திகழும் வித்த்தில் இயற்றும் திறனுடன் கவியரசர் இயல்பாகவே இசை ஞானம் கொண்டு விளங்கியதால் இவரது பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதைகளான திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி,கே. இராமமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் முதலானோர், இசையுடன் இசைந்த இவரது செந்தமிழ்க் கவிதைகளுடன் இணைந்து விளங்குமாறு பல பாடல்களையும், இராகமாலிகைகளையும் தமிழ்த்திரையில் சிறப்புடன் வழங்கியுள்ளனர்.

கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் யான் கண்டு களித்தவை ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர் கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை விட்டகலாததாகும்.

இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே!

இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான் உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப் போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு.


அதிசய ராகம் ஆனந்த ராகம்


http://tfmpage.com/forum/archives/23209.5180.07.11.34.html

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டி: 1975

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே

இவ்வுலகமும், இவ்வுலகை உள்ளடக்கிய எல்லையில்லாப் பிரபஞ்சமும் எண்ணிறந்த உயிர்களுக்கு வாழ்விடமாக என்றம் விளங்குகின்றன. நம் கண்ணுக்கும் பிற புலன்களுக்கும் புலப்படுவனவும் புலப்படாதனவுமான இவ்வுயிர்கள் அனைத்தும் என்றேனும் ஒரு நாளில் தோன்றி, பல விதமான இன்ப துன்பங்களுக்குள்ளாகி, என்றோ ஒரு நாள் உயிர் நீக்கும் உண்மை நிலையை மனதாலும் அறிவாலும் நாம் உணர்ந்தபோதிலும் நமக்கு மட்டும் என்றும் இன்ப வாழ்வே நிலைக்கே வேண்டும், துன்பங்களே நேரக்கூடாது, மரணமடையாமல் என்றென்றும் சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் எனும் நப்பாசை இல்லாதவர் உலகில் மிகவும் அரிதே.

நம்மில் மகா ஞானிகளாக விளங்கிடும் ஒரு சிலர், இவ்வுண்மையை ஏற்று, இவ்வுலக இன்ப துன்பங்களைத் துறந்து, தான் யார் என்பதை உணரவைக்க வல்லதான மெய்ஞான மார்க்கத்தில் தம் மனதையும் அறிவையும் செலுத்துவதையும் நாம் அறிவோம். இஞ்ஞான மார்க்கம் ஒரு சிலருக்கு மட்டும் உரியதா? நம்மில் பிறர் அனைவரும் இதற்குத் தகுதியற்றவரா? எனும் கேள்வி நம் மனதில் எழுமாகில், நாமும் அத்தகைய உயர்ந்த ஞான மார்க்கத்தில் நம் மனதையும் அறிவையும் செலுத்தத் தொடங்கியுள்ளோம் என்பதை அறிவோமாக.


நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே


திரைப்படம்: சின்ன ஜமீன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இசை ஞானி இளையராஜா
ஆண்டு: 1993

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
உரைச் சுத்தி நாள் முழுக்க ஓடும் ஆறு நானம்மா
சின்னப் பிள்ள நான் தானுன்னு சொல்லும் இந்த ஊரம்மா
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா? ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஓ...
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசெப் பாக்கலே
எங்கதையப் பாசமாக ஒன்னப் போலக் கேக்கல்லே
கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா? ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஆகிரா

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

வேதங்கள், பகவத் கீதை, திருக்குறள் முதலான அறநெறியை உபதேசிக்கும் நூல்கள் அனைத்தும் அஹிம்சையையும், சாந்த குணத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியும் நம் நாட்டில் அனேகர் அவ்வாறு நடக்காமல், மதத்தின் பெயராலும், இறை வழிபாட்டின் பெயராலும் யாகங்கள் உள்ளிட்ட விழாக்களிலும் இதர சந்தர்ப்பங்ககளிலும் பலி எனும் பெயரால் தொடர்ந்து உயிர்க் கொலை புரிந்து வந்ததால் நாளடைவில் ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் குறைந்து பெரும்பாலோர் புத்த மதத்தைத் தழுவிய காலம் இந்திய வரலாற்றில் மறக்க முடியாததாகும். இருப்பினும் புத்த மதம் புலால் உண்பதைத் தடை செய்யவில்லை என்பதால் நாளடைவில் நம் நாட்டில் அது வேரூன்றவில்லை. மாறாக சீனம், சிங்களம், பர்மா, மலேயா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்கே வேரூன்றியது.

புத்தரின் பின்னர் அவதரித்த ஆதி சங்கரர், அஹிம்சையை வலியுறுத்தியதுடன், புலால் உண்ணாமையையும் வலியுறுத்தி, நலிவடைந்திருந்த ஹிந்து மதத்துக்குப் புத்துயிரூட்டினார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்ற வள்ளுவர் வாக்கையே புறக்கணித்த நமது மக்கள் சமூகம் ஆதி சங்கரர் அறிவுரையை மட்டும் அவ்வளவு எளிதில் கேட்டு விடுமா என்ன? இன்று பலர், ஜாதி மதங்களின் பெயரால் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தவும், உண்மை இல்லாத பலவித சாத்திரங்களையும், சடங்குகளையும் கூறி, தாம் சுயலாபம் அடையவும் முயன்று, ஊரையும் உலகையும் ஏமாற்றி, பல பாப காரியங்களைச் செய்து வருவது வருந்தற்குரியது.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: கவிஞர் வாலி
இயற்றியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி
அஅண்டு: 1982

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்...
நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி ஆஆஆ
அத த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்யஹ ப்ரபவதீ
ஆ...ஆ.....

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
தொழும் பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஆகிரா

வியாழன், 17 டிசம்பர், 2009

சிவபெருமான் கிருபை வேண்டும்

நாம் ஒவ்வொருவாரும் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் குழந்தைப் பருவத்தில் கழியும் சில காலம் நம் கண் முன்னே நிகழும் நிகழ்ச்சிகளோ, பிற புலன்களால் உணரும் விஷயங்களோ நாம் வளர்ச்சியடைந்த பின்னர் நம் நினைவுக்கு ஒரு போதும் வருவதில்லை. குழந்தைப் பருவத்தில் ஆணவ மலம் இருப்பதில்லை, உலகிலுள்ள அனைவருடனும், அனைதது ஜீவராசிகளுடனும், இயற்கையுடனும் மிகவும் இயைந்து வாழும் தன்மை அப்போது நிலவுகிறது. வளர்ச்சியடைந்த பின் ஒவ்வொருவருக்கும் ஆணவம் மேலிடுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தமது உடலைத் தானாக உணர்ந்து நான் எனும் உணர்வுடன் எனது எனும் உணர்வும் வளருகின்றது.


இத்தகைய மன மாற்றத்தினால் சுயநல உணர்வு மிகுந்து பிறரிடம் போதிய அன்பு செலுத்தத் தவறுவதுடன், உலகிலுள்ள பொருட்களில் சிறப்பு மிக்கவை யாவும் தன்னையே சேர வேண்டுமெனும் பேராசையையும் வளர்த்துக் கொள்கிறோம். இக்காரணத்தால் பலர் தரும நெறி தவறி முறையற்ற வழிகளில் பிறரை ஏமாற்றி வாழ்வும் தயங்குவதில்லை. இத்தகைய மன நிலையுடன் வாழ்பவர் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் திரும்பத் திரும்பப் பாபங்கள் பலவற்றைத் தொடர்ந்து செய்கின்றனர். ஆன்மிக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஒருவரின் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்பது இயற்கை நியதி. பாவ மன்னிப்பு என்பது இயற்கைக்கு முரணானது, உண்மையில் கிடைக்காது. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது.


பாபம் செய்யச் செய்ய, கர்ம வினையால் ஒருவர் இறந்த பின்னர் திரும்பவும் பிறப்பெடுத்து முற்பிறவியில் தான் செய்த பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டால் மாயையால் நமது ஐம்புலன்களும் கட்டுண்ட நிலையில் நமது அறிவு குறைந்து விளங்குவதால் நமக்கு எடுத்துச் சொல்லி விளங்காது. நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும் எனும் சாதாரண உலக நீதியே இவ்விடத்திலும் செயல்படுகிறது என்பதை உணர்வால் அறிந்து அதற்கொப்ப நாம் மனமாறப் பிறருக்கு யாதொரு தீங்கும் இழைக்காது, நன்மைகளையே பெரும்பாலும் செய்து வருகையில் நமது கர்ம வினைகள் குறைந்து, பிறவா நிலை எய்தலாம் எனப் பல ஞானியர்கள் உணர்த்தியுள்ளனர். இத்தகைய நிலையை அடைய பக்தி மிகவும் இன்றியமையாதது.


அன்பும் சிவமும் இரண்டென்ப அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்


எனும் கருத்துக்கிணங்க நாம் முக்தியடைய மேலான வழி சிவபெருமானின் கருணையை நாடுவதேயாகும்.


சிவபெருமான் கிருபை வேண்டும்


திரைப்படம்: நவீன சாரங்கதாரா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
அஅண்டு: 1936


சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் வேண்டும்..


அவலப் பிறப்பொழிய வேண்டும் ஆ...ஆ..
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும்?


சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும்
வேண்டும் வேண்டும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...


தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுக வாழ்வு வாழ வேண்டும்
சுக வாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும்?


சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்