சனி, 4 ஜூலை, 2015

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. ஏனெனில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ ஒரு பாதை வகுக்கிறது மனிதப் பிறவி. அப்பாதை அகக் கண்களுக்கும் புறக்கண்களுக்கும் தெளிவாகத் தெரிந்தும் இந்தப் பாழும் மனித ஜன்மம் ஆசை, பொறாமை, கோபம், துர்ப்பேச்சு எனும் விலக்க வேண்டிய தீமைகளையே தேடிப் பிடித்துத் தேம்பி அலைகிறது. கோடிகள் குவிப்பதிலும், உடலின்பம் துய்ப்பதிலும், பிறரைத் துன்புறுத்தி அதில் அற்ப இன்பம் தேடுவதிலும், வரியார்க்கொன்றும் ஈயாமல் இருக்கும் செல்வத்தைத் தீய வழியில் செலவிட்டுத் தான் 
கெடுவதோடு பிறரையும் கெடுப்பதிலும் தன் நேரத்தையும் சிந்தனையையும் செலவு செய்வோர் நரகமெனும் படுகுழியில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் மனிதப்பிறவி கிட்டாமல் அறிவற்ற அற்ப ஜந்துக்களாக அவதாரம் செய்து அல்லலுறுகின்றனர்.

இப்பிறவியிலேயே ஆசைகளைத் துறந்து, தன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்துதவி தெய்வமாகவே வாழ்வோர் மரணமில்லாத பெருவாழ்வு வாழ்வது நிச்சயம் என்பதை இவ்வுலகில் பல ஞானியர் நிரூபித்துள்ளனர். அத்தகைய நிலைக்கு முக்தி என்று பெயர். எந்த வித ஆசையோ, கோபமோ, சந்தேகமோ இல்லாத தெளிந்த ஞானமே முக்திக்கு வழி. மனிதன் தன் முற்பிறவியில் குரங்காகப் பிறந்தான் என்று முன்னோர்கள் பலர் கூறியுள்ளனர். புகழ்பெற்ற விஞ்ஞானி டார்வின் தனது "Theory of Evolution" எனும் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையில் உலகில் உயிர்கள் ஏற்பட்டுப் பரிமாண வளர்ச்சியடைந்த சரித்திரத்தை விரிவாக விளக்கியுள்ளார். அவரும் குரங்குப் பிறவிக்கு அடுத்ததே மனிதப் பிறவி என்று எடுத்துரைக்கிறார். 

குரங்குகளும் சற்றேறக் குறைய மனிதர்களுக்கீடான பகுத்தறிவு கொண்டவை என்பது விஞ்ஞான பூர்வமாக இன்றும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்தியாவின் தொன்மையான புராணமான இராமாயண காவியத்தில் இராமன் காணாமற்போன தன் மனைவி சீதை இருக்குமிடத்தைக் கண்டறியவும், சீதையைக் களவாடிச் சென்ற இராவணன் மீது போர் தொடுத்து வெல்லவும் ஒரு குரங்குப் படையைத் துணையாகக் கொண்டதாகப் படிக்கிறோம். அந்தக் குரங்குகளில்ஒருவனே அனுமன். அவனே இலங்கைக்குக் கடல் கடந்து சென்று சீதையைக் கண்டதாகவும், பின் இராமனிடம் திரும்பி வந்து சீதையின் இருப்பிடம் குறித்த தகவலைச் சொன்னதாகவும், மேலும் போரில் இராம இலக்குவர்களுக்குப் பெரும் துணையாக நின்று இராவணனின் சேனைகளை அழித்து வெற்றி ஈட்டித் தந்ததாகவும் எழுதி வைத்துள்ளார் வால்மீகி முனிவர். 

அன்னியனின் சிறையில் அல்லலுற்று அரற்றித் தன் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து வாடிய நிலையில் அனுமன் வந்து தனக்கு நம்பிக்கையூட்டியமையால் அவன் பிணி, மூப்பு, மரணமின்றி என்றும் சிரஞ்சீவியாய் வாழ சீதை ஆசீரவதித்தாள். 

"எனதன்பு ஹனுமான், எனக்காக நீ ஆற்றிய தொண்டுகளை ஒரு போதும் என்னால் திருப்பிச் செலுத்த இயலாது. நான் என்றும் கடன் பட்டவனாகவே இருப்பேன். உம்முடைய வாழ்க்கை இராமாயணம் உச்சரிக்கப்படும் வரை தொடரட்டும். மேலும் இராமாயணமோ பூமி இருக்கும் வரை தொடர்ந்து உச்சரிக்கப்படும்." என்று பகவான் ஸ்ரீ ராமச்சந்திரர் கூறினார்.

குரங்குகளின் சேட்டைகளும் அன்புடன் தன் இனத்தை அரவணைத்துக் கொண்டு வாழும் இனிமையும் என்றும் கண்டின்புறத் தக்கவையே. அத்தகைய அபூர்வமான குரங்குப் பிறவி எடுத்து அதன் பின்னர் மனிதனாகப் பிறந்தது குறித்து நாம் எவரும் ஆதங்கப் பட வேண்டாம். பெருமையே கொள்ளலாம்.



திரைப்படம்: தூக்கு தூக்கி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியோர்: பி. லீலா, ஏ.பி. கோமளா, டி.எம். சௌந்தரராஜன், வி.என். சுந்தரம்
ஆண்டு: 1954

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது

உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு 
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர் 
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்

பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும் தலையில்
பேனும் ஈறும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும் தலையில்
பேனும் ஈறும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓர் குலம்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓர் குலம்

உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு 
உண்மையில் வித்தியாசமில்லை 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு 
உண்மையில் வித்தியாசமில்லை 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

பதநிஸ்ரி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
பதநிஸ்ரி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

ஸ்நிஸ்கரிஸ் நிரிஸ் நிதப நிரிஸ் நிதப மபதநிஸ்ரி குரங்கு
ஸ்நிஸ்கரிஸ் நிரிஸ் நிதப நிரிஸ் நிதப மபதநிஸ்ரி குரங்கு

மாமா பாபா தபம பாபா தாதா நிதப தாதாநீநீ ஸ்நித பதநி மனித குரங்கு
மாமா பாபா தபம பாபா தாதா நிதப தாதாநீநீ ஸ்நித பதநி மனித குரங்கு

பமதபநிதபம ஸரிகம பதநிஸ்ரி கரிஸ்நிரிஸ் நிதப கரிஸ்நிதபமப
பமதபநிதபம ஸரிகம பதநிஸ்ரி கரிஸ்நிரிஸ் நிதப கரிஸ்நிதபமப

நிதமபமதநிஸ்கரி நிரிஸ்நிதம மதபம கமபதநிதமப
நிதமபமதநிஸ்கரி நிரிஸ்நிதம மதபம கமபதநிதமப

பபபபபதா தததததநி நிநிநிததாநிரீஸ்ஸ்தபா
பபபபபதா தததததநி நிநிநிததாநிரீஸ்ஸ்தபா

ரிகரிஸ்நிதப ரிகரிஸ்நிதப
ஸ்ரிஸ்நிதபம ஸ்ரிஸ்நிதபம
ரிகரிஸபமக ரிகரிஸபமக

தபம கமப தபம கமப
நிதப மபத நிதப மபத
ஸ்நிதபதநி ஸ்நிதபதநி
நிஸ் நிஸ் ஸ்நி ஸ்நி பதா பதா மபா மபா

மாமா குரங்கு மாமா குரங்கு
பாபா குரங்கு பாபா குரங்கு
தாத்தா குரங்கு தாத்தா குரங்கு
 
நீதான் குரங்கு நீதான் குரங்கு
நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக