புதன், 23 அக்டோபர், 2013

வில்லேந்தும் வீரரெல்லாம்

சூதாட்டமே எதற்கும் தீர்வு என்றாகிவிட்ட இன்றைய உலகில் கேடுகளுக்குப் பஞ்சமில்லை. ஜாதி மத பேதங்களையும், கருப்புப் பணத்தையும், அடியாட்கள் கூட்டத்தையும், சாராயத்தையும், இலவசங்களையும் பகடைக்காய்களாக உபயோகித்துப் பதவி வேட்டையாடுகின்றனர் அரசியல் வாதிகள். சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், வக்கீல்களின் வாதத்தையும், வாய்தாக்களையும், ஜாமீன்களையும், சாட்சிகளைக் கலைப்பதையும் பகடைக் காய்களாக உபயோகித்து நீதித்துறையை ஏமாற்றித் தங்கள் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர் சமூக விரோதிகள். இத்தகைய சூதாட்டத்தில் எந்த ஒருபிரச்சினைக்கும் தீர்வு காண பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கேற்ற பகடைக் காய்களாக உள்ளவை உண்ணா விரதம், சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு, பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் போன்றவையே. சமூகநீதி மறுக்கப்படுவதால் விளையும் அசம்பாவித்ங்கள் இவையாகும்.

இவை போன்ற முறைகேடான வழிகள் அவ்வப்போது தீர்வாக விளங்கினாலும் அவற்றின் பின் விளைவுகள் உரிய காலத்தில் கிடைத்தே தீரும் என்பது இயற்கை நியதி. "சூதும் வாதும் வேதனை செய்யும்" எனும் சான்றோர் வாக்கு பொய்த்ததில்லை.

முற்காலத்தில் அரசியலில் "பகடை" எனும் சூதாட்டம் பல சமயங்களில் அரசர்களிடையே நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் மஹாபாரதக் கதையிலும் நளன் சரித்திரத்திலும் உள்ளன. சூதாட்டத்தினால் நளனும், பாண்டவர்களும் அனுபவித்த மாபெரும் துன்பங்கள் மக்களுக்கு வழி காட்டும் என்பதற்காகவே பலராலும் பல சமயங்களிலும் எடுத்துரைக்கப் படுகின்றன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படமான "குலேபகாவலி" படத்தில் அவர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுவார்கள். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக்க வழி செய்வார். 

சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குனர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் ஸ்வாரஸ்யமான விதத்தில் இப்பாடல் காட்சிகளில் தொகுக்கப்பட்டுள்ளன.

வில்லேந்தும் வீரரெல்லாம்

இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பி. லீலா, திருச்சி லோகநாதன்

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே வீண்
அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே இந்த
ஜெகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளராதே இந்த
ஜெகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளராதே 
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
பன்னிரண்டு போட வேணும் பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும் பலித்தாலே ஜெயம் காணும்
ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு
சூராதி சூரனென்று சோம்பேறியாய்த் திரிந்தால் 
கட்டிடச்சொல்லு மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு

மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்
மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது

என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
என்ன வேணும் துரையே இஷ்டம் போலக் கேளினியே

அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு
அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு
எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு என்
எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு

வீணான ஆசையாலே வீழ்ச்சி பெற்ற மன்னவா
தானென்ற கர்வங்கொண்டு தலைவணங்கும் மன்னவா
தானென்ற கர்வங்கொண்டு தலைவணங்கும் மன்னவா

நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா
நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா நீ
நெல்லுகுத்தியாகணும் 
நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
கொள்ளவிச்சுப் போடனும்
நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
கொள்ளவிச்சுப் போடனும்

ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
தேரிஹி சலீங்கி நஹி ஹட்டு
ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
தேரிஹி சலீங்கி நஹி ஹட்டு
மைஃபில் மே சதுரங்கேல்னே ஆயா ஹூம்மை ஆயா
மைஃபில் மே சதுரங்கேல்னே ஆயா ஹூம்மை ஆயா
ஐசா ஹைதோ பைசா ஹைக்யா சதுரங்கேலோ ஆவோ ப்யாரீஹி
அரே வா வா வா
ஐசா ஹைதோ பைசா ஹைக்யா சதுரங்கேலோ ஆவோ ப்யாரீஹி 
ஓஹோஹோ ப்யாரி ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
ஆவோ ஆவோ மேரே ப்யாரே ஆவோ

பந்தமுள்ள சுந்தராங்கி பகட களிக்கான் வந்நு ஞான்
பகட களிக்கான் வந்நு
சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்தமாக்கான் போகுன்னு
சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்தமாக்கான் போகுன்னு

நாடு விட்டு நாடு வந்நு நசிச்சுப் போகாதே ராஜா
நாடு விட்டு நாடு வந்நு நசிச்சுப் போகாதே ராஜா
நஞ்ஞு போலுள்ள பகட களியில் நாட்டம் கொள்ளாதே ராஜா
நஞ்ஞு போலுள்ள பகட களியில் நாட்டம் கொள்ளாதே ராஜா
நாட்டம் கொள்ளாதே

நருநிதலபுல ஸ்ருஷ்டி நரசுதொடுண்டனா பணியேனியுண்டு சர்வேஸ்வருனகு 
தலநிஜும்பருகனி சர்வாகுடகு நீவு கானி சர்வங்குண ப்ரதுகுமையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக