செவ்வாய், 27 ஏப்ரல், 2010

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு

இவ்வுலகில் நாமனைவரும் நம் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பொருளீட்டுவதிலும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலுமே கழித்து வருகிறோம். நம் கன் முன்னரே நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் உட்பட ஏனையோர் யாவரும் ஒருவர் பின் ஒருவராக யமலோகத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைக் கண்ணாரக் கண்டும், நமக்கும் ஒரு நாளுண்டு எனும் உண்மையை உணர மறு்த்து, சுயநலவாதிகளாகவே வாழ்நாளைக் கழிக்கிறோம். நமது சுயநலத்தினால் பொதுநலம் பாதிக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் பிறரை அலட்சியப் படுத்தி, நமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு சமுதாயத்துக்குப் பல வகைகளிலும் தீங்கிழைக்கிறோம்.

எத்துணை பணமிருந்தாலும் ஒருவருக்கு ஒரு ஜாண் வயிறு கொள்ளுமளவுக்கே உணவுண்ண முடியும். அதுவும் வயதாக ஆக உணவு உண்ணும் அளவும் குறைந்து, உடல் தளர்ந்து, பல வியாதிகளுக்கு இடமளிக்கையில் சுவையான உணவு உண்ணுவதும் இயலாமல் போய், கஞ்சி குடித்துக் காலம் கழிக்கும் சூழ்நிலையும் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. என்ன நிலை வந்துற்றாலும் நம் பணத்தாசை மட்டும் குறைவதே இல்லை.

சுயநலமென்னும் இத்தகைய மனோ வியாதியிலிருந்து மீண்டு, நம் வாழ்நாளில் மீதமிருக்கும் காலத்தையாகிலும் பிறர் நலம் பேணுவதிலும், இயற்கை வளங்கள் அழிவதால் இவ்வுலகம் எதி்ர்கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து உலகினையும் நமது வருங்கால சந்ததியினரையும் காப்பதிலும் செலவிடுதல் நலம்.

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு

திரைப்படம்: முகராசி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
அஅண்டு: 1968

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்ர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக