திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 12, 2015

சில காலம் முன்பு வரை தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளைப் பெரும்பாலும் உண்மையென்று நம்பி ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே நம்மில் பெரும்பாலோர் இருந்து வந்தோம். சபீப காலமாக சமூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்சப் மற்றும் கூகுள் குழுமங்கள், யாஹூ குழுமங்கள் வாயிலாக இணையதளப் பயனாளிகள் பலரும் தங்களுக்குள் பரிமாரிக் கொள்ளும் செய்திகளின் மூலம் நாம் அறிய வந்தது என்னவெனில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் முதலன ஊடகங்கள் அதிகப்படியாகப் பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதே. 

பணம் பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக முறைகேடான அரசியல்வாதிகளை உத்தமர்களாகச் சித்தரிப்பதும் நல்லவர்களை சமூகவிரோதிகளாக சித்தரிப்பதும்  அனேகமாக எல்லா செய்தி ஊடகங்களும் செய்யும் மோசடி என்பது தெரிய வந்துள்ளது. தற்காலம் சென்னையில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை அவை எந்த அளவு வெளியிட்டுள்ளன எந்த அளவு வெளியிடவில்லை. அரசியல் சார்பாகப் பேசுகின்றனவா என்பன போன்ற கோணத்தில் நாம் ஆராய முற்பட்டிருக்கிறோம். இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமேயாகும்.

இன்றளவும் உலக மக்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சிகளில் எதைக் காட்டினாலும் மெய்யென்று நம்புவோரேயாவர். உதாரணமாக ஒரு லாரி ஒரு வீட்டின் மேல் மோதும்பொழுது என்னவாகும் என எண்ணிப் பார்த்தோமெனில் நமக்குத் தெரியும் லாரி சேதமுற்றுக் கவிழும், வீடு இடியும் என. லாரி மிகவும் கனமான வாகனம். 

ஆகாய விமானம் மிகவும் இலகுவான வாகனமாயிருப்பதாலேயே அது ஆகாயத்தில் பறக்க இயல்கிறது. ஒருதிடப்பொருள் ஒரு திரவத்தில் மிதக்க வேண்டுமெனில் அத்திடப் பொருளினால் இடப்பெயற்சி செய்யப்பட்ட திரவத்தின் எடையை விட அத்திடப் பொருளின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பது ஆர்க்கிமிடிஸ் எனும் விஞ்ஞானி அறிந்து கூறிய மிதத்தல் விதியாகும். இவ்விதியைப் பள்ளிகளில் விஞ்ஞானப் பாடம் பயிலும் அனைவரும் அறிவர், பாடங்களை மறந்து போனோரைத் தவிர. 

அத்தகைய ஆகாய விமானமொன்று ஒரு கட்டிடத்தின் மேல் மோதினால் என்னவாகும் என எண்ணிப் பார்த்தோமேயானால் அது சேதமுற்றுக் கிழே விசுந்து நொருங்கும் எனவும் கட்டிடத்தில் விமானம் மோதிய பகுதி சிறிதளவு சேதமுறும் என்பதும் தெரியவரும். அது மட்டுமின்றி ஒரு விமானத்தில் உள்ள ஏவியேஷன் பெட்ரோல் எனும் எரிபொருளின் வெப்பநிலை 700 டிகிரி செல்சியஸ். ஒரு கட்டிடத்தின் தூண்கள் மற்றும் விட்டங்களில் உயபோகிக்கப்படும் இரும்புக் கம்பிகளின் உருகுநிலை 1000 டிகிரி செல்சியஸ். ஒரு இரும்பு (எவர்சில்வர்) பாத்திரத்தை கேஸ் அடுப்பில் வைத்து எவ்வளவு நேரம் சூ.டேற்றினாலும் பாத்திரம் உருகுவதில்லை. இதை செய்து பார்க்கலாம். 

அவ்வாறிருக்க ஆகாய விமானத்தின் எரிபொருள் எரிவதனால் இரும்புக் கம்பிகள் உருகுவதில்லை என நாம் அறியலாம். சமீபத்தில் கணிணியில் க்ராபிக்ஸ் எனும் தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்திப் பல அரசியல்வாதிகள் உண்மையான புகைப்படங்களை மாற்றிப் பொய்யான தோற்றத்தைத் தரும் வண்ணம் செய்து ஏமாற்றுவது நமக்குத் தெரிய வந்துள்ளது.

இத்தகையே ஏமாற்று வேலையை உபயோகித்தே 9/11 என்று சொல்லப்படுகிற நியூயார்க் நகர இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் படுவது போன்ற பொய்யான கிராபிக்ஸ் வீடியோவை உலகெங்கிலுமுள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்புச் செய்து உலக மக்களை ஏமாற்றின. காரணம் ஈராக் நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் எவையும் இல்லையென ஐநா குழு கண்டறிந்ததால் ஈராக் நாட்டின் மேல் போர் தொடுக்க அமெரிக்காவுக்கு ஒரு வலுவான காரணம் தேவைப்பட்டது. மக்கள் கவனிக்கத் தவறிய உண்மை இன்னொன்றாவது இடிந்தவை இரண்டு கட்டிடங்களல்ல.மூன்று. அவற்றுள் இரண்டு 100 மாடிகள் ஒன்று 70 மாடிகள். 70 மாடிக் கட்டிடத்தின் மேல் எந்த ஆகாயவிமானமும் மோதியதாகக் காட்டவில்லை கிராபிக்ஸ் செய்தி. இது ஊடகங்களும் அமெரிக்காவும் செய்த மாபெரும் தவறு. 

உண்மையில் இம்மூன்று கட்டிடங்களும் அமெரிக்க ராணுவத்தால் வெடி வைத்துத் தகர்க்கப் பட்டன என்பதே உண்மை. இவ்வுண்மையைப் பல அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். யூட்யூப் தளத்தில் அதற்கான வீடியோக்கள் பல உள்ளன.  அவற்றுள் ஒன்று இதோ: https://youtu.be/4LZns-O9rCw

உலக மக்கள் அனைவரின் கண்களில் மண்ணைத் தூவி அமெரிக்கா அன்று நடத்திய மோசடி நாடகத்தை மெய்யென இன்னும் பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் உண்மையை அறிவார்கள் ஆனால் வெளியிட மாட்டார்கள். காரணம் உண்மையைச் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதும் பொய் சொன்னாலே பெரும்பாலோர் நம்புவர் என்பது அவர்களின் கணிப்பு. சமீப காலம் வரை அக்கணிப்பு சரியாகவே இருந்தது ஆனால் சமீப காலமாக மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். 

உண்மைகள் வெளிவரும் காலம் வந்து விட்டது.


திரைப்படம்: குடியிருந்த கோவில்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1969
 
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் தக்க
சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்
அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்
அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்திவிடு
இன்றோடு போகட்டும் திருந்திவிடு உன்தன்
இதயத்தை நேர்வழி திருத்தி விடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது
அழிவதில்லை காலடிகள் பட்டு
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது
அழிவதில்லை காலடிகள் பட்டு நீ
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு
நடப்பது நலமாய் நடந்து விடும்.

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக